Advertisment

3,000 க்கும் குறைவாக கொரோனா பாதிப்பு: 93.96% குணமடைந்துள்ளனர்

தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,886 பேருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
கொரோனா வைரஸ்:  32 மாவட்டங்களில் 100க்கும் குறைவான எண்ணிக்கை

Tamil Nadu daily coronavirus report: தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,886 பேருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,06,136 ஆக அதிகரித்துள்ளது.

Advertisment

உயிரிழப்பு விவரம்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று ஒரே நாளில் தனியார் மருத்துவமனைகளில் 16, அரசு மருத்துவமனைகளில் 19  என மொத்தம் 35 பேர் உயிரிழந்தனர். மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 10,893 -ஆக அதிகரித்துள்ளது.

குணமடைந்தோர் விகிதம்: தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 4,024 பேர்  குணமடைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,63,456 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், கோவிட்-19 க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 31,787 ஆக குறைந்துள்ளது. தேசிய மட்டத்தில், கொரோனா நோய்த் தொற்றால் பாதித்தவர்களில் 6,80,680 பேர் மட்டுமே  சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இது நாட்டின் மொத்த பாதிப்பில் 8.71 சதவீதமாகும்.

நாட்டில் குணமடைந்தோரின் விகிதமும் 89.78% ஆக முன்னேறியுள்ளது. நாட்டின் மொத்த குணமடைந்தோரில் 61 சதவீதத்தினர் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, டில்லி மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.

மாவட்ட வாரியாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை:

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 779 பேருக்கு  கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

 

சென்னையை அடுத்து அதிகபட்சமாக கோவையில் – 287, செங்கல்பட்டு –169, திருவள்ளூர் – 165, சேலம் – 148, காஞ்சிபுரம் – 140, திருப்பூர் – 101,  வேலூர் – 63, கடலூர் – 49, விழுப்புரம் – 35, திருநெல்வேலி – 25 என்ற அளவில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று 779  பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 194901 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் தற்போது கோவிட்-19 க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 10147 ஆகும்.

இதற்கிடயே, கோவிட்-19 தொடர்பாக வரும் புதன்கிழமை மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.

இதனைத்தொடர்ந்து, அன்றைய தினம் பிற்பகலில் மருத்துவ நிபுணர் குழுவினருடனும் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்கிறார்.

பள்ளிகள் மற்றும் திரையரங்குகளை திறப்பது தொடர்பாகவும், கூடுதல் தளர்வுகளை அறிவிப்பது குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படவுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Corona Coronaviurs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment