Tamil Nadu daily coronavirus report: தமிழகத்தில் இன்று (செப்டம்பர் 16) ஒரே நாளில் புதிதாக 5,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,19,860 ஆக அதிகரித்துள்ளது .
கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் விவரம்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று ஒரே நாளில் தனியார் மருத்துவமனைகளில் 23 , அரசு மருத்துவமனைகளில் 34 என மொத்த 57 பேர் உயிரிழந்தனர். இதனால், மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 8,559-ஆக அதிகரித்துள்ளது.
குணமடைந்தோர் விகிதம்: தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 5,768-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம், மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,64,668 ஆக உயர்ந்துள்ளது. கோவிட்-19 தொற்று அடைந்தவர்களில் இதுவரை 89.38 % குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 46,633 ஆக உள்ளது.
மாவட்ட வாரியாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை:
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையை அடுத்து அதிகபட்சமாக கோவையில் – 549 , சேலம் – 279, செங்கல்பட்டு – 319, கடலூர் – 263, திருவள்ளூர் – 282, திருப்பூர் – 149, காஞ்சிபுரம் – 189, விழுப்புரம் – 142 , திருநெல்வேலி – 118 , வேலூர் – 115 என்ற அளவில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 7 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்
சென்னையில் இன்று 983 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், பிற மாவட்டங்களில் 4, 669 தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,51,560 ஆக அதிகரித்துள்ளது. சென்னையைத் தவிர்த்து, புனே, புது டெல்லி, மும்பை, பெங்களூரு, தானே, ஆகிய பெருநகரங்களிலும் தொற்று எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டியது என்பதும் குறிப்பிடத்தக்கது.