Advertisment

ஏற்றுமதி மாநாடு : 41,000 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க ரூ. 2,120 கோடி மதிப்பில் ஒப்பந்தங்கள் கையெழுத்து

கையெழுத்திடப்பட்ட 24 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 14 ஒப்பந்தங்கள் 100% ஏற்றுமதி சார்ந்த அலகுகளுடன் கையெழுத்திடப்பட்டது, இதன் மொத்த முதலீடு ரூ. 1,880.54 கோடியாகும்.

author-image
WebDesk
New Update
Tamil Nadu Exports Conclave, MK Stalin, tamil news, tamil nadu news

Tamil Nadu Exports Conclave : 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் செப்டம்பர் 20 முதல் 26 வரையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வர்த்தக மற்றும் வர்த்தக வாரத்தின் ஒரு பகுதியாக தமிழகத்தில் தமிழ்நாடு ஏற்றுமதி மாநாடு நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ. 2,120.54 கோடி முதலீட்டை ஈர்ப்பதற்கான 24 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதன் மூலம் தமிழகத்தில் புதிதாக 41 ஆயிரம் வேலை வாய்ப்புகள் கொண்டு வரப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Advertisment

ஜவுளி, ராசயனங்கள், ஐ.டி./ஐ.டி.இ.எஸ், எஃகு, தோல், ஆடை, மற்றும் பொது உற்பத்தி ஆகியவற்றில் இந்த முதலீடு செய்யப்பட உள்ளது. சென்னை, காஞ்சி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, மதுரை, சேலம், தூத்துக்குடி, திருச்சி, தஞ்சை, நெல்லை மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உற்பத்தி அலகுகள் திறக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கை மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான ஏற்றுமதி கையேடு ஆகியவற்றை வெளியிட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழகத்தில் உள்ள பாலிமர் பூங்காவில் தங்களின் அலகுகளை திறக்க விருப்பம் தெரிவித்த நிறுவனங்களுக்கு முதல் இரண்டு ஒதுக்கீட்டு ஆணைகளையும் வழங்கினார் முதல்வர். பொன்னேரி அருகே வயலூர் 240 ஏக்கரில் பாலிமர் தொழிற்துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பிரத்யேக பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

MSME வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பணியகம் (M-TIPB) ஒரு விநோயகர் மேம்பாட்டு திட்டத்தின் மூலமாக, சிறுகுறு தொழில்களின் இணைய வழி விற்பனையை ஊக்குவிக்க ஃப்ளிப்கார்ட்டுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் எம்.எஸ்.எம்.எஸ்- அவர்களின் வணிகத்தை அதிகரிக்கச் செய்து அவர்களை உள்நாட்டு மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளின் ஒரு பகுதியாக மாற்றும என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் 2030 க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறுவதற்கான நம்முடைய இலக்கை அடைய உதவும். பெருந்தொற்று காலங்களிலும் உற்பத்தி அலகுகள் செயல்பட்டன. ஆனால் நாம் ஏற்றுமதிக்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்க வேண்டும். முதலீடுகள் சமமான வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டுள்ளன, ஏனெனில் அவை ஒரு பகுதியில் குவிக்கப்படவில்லை. ஏற்றுமதியை அதிகரிக்க எந்த மூலோபாயமும் முன்பு இல்லை என்று தி இந்து நாளிதழுக்கு தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி அளித்துள்ளார் என்று அந்நாளேட்டின் செய்தி அறிவிக்கிறது.

இந்தோ-ஜெர்மன் வர்த்தக சபை மற்றும் எம்-டிஐபிபி ஆகியவை தமிழ்நாட்டில் உள்ள எம்எஸ்எம்இ மற்றும் ஜெர்மன் வணிகங்களுக்கிடையேயான ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் MSME களுக்கான இணைப்புகள், தொடர்பு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகளை எளிதாக்கும்.

கையெழுத்திடப்பட்ட 24 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 14 ஒப்பந்தங்கள் 100% ஏற்றுமதி சார்ந்த அலகுகளுடன் கையெழுத்திடப்பட்டது, இதன் மொத்த முதலீடு ரூ. 1,880.54 கோடியாகும். 240 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மீதமுள்ளவை சிறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை சார்பாக கையெழுத்திடப்பட்டன என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கிறது. அவர்கள் முறையே 39,150 நபர்கள் மற்றும் 2,545 தனிநபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டி.எம்.அன்பரசன் (ஊரக தொழிற்துறை அமைச்சர்), தலைமைச் செயலாளர் இறையன்பு, சஞ்சய் சத்தா (மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கூடுதல் செயலாளார்), என். முருகானந்தம் (தமிழக தொழிற்த்துறை செயலாளர்), டிட்கோ தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பங்கஜ் குமார் பன்சால் ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Mk Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment