Tamil Nadu finance minister PTR palanivel thiagarajan : தமிழக நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இன்றைய தேதிக்கு அதிக பிஸியாக இருக்கும் தமிழக அமைச்சர்களில் ஒருவர். இரண்டு லேப்டாப்கள், இரண்டு கைக்கடிகாரங்கள், நான்கு பேனாக்கள் என்று இவர் தன்னுடைய வேலையில் படுபிஸியாக இருக்கிறார். சமீபத்தில் இரண்டு லேப்டாப்களை எடுத்துச் சென்றதற்காக விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு பிறகு அதிகாரிகள் மன்னிப்பு கேட்ட விவகாரம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இவருடைய செய்தியாளர்கள் சந்திப்பு, ஜூம் மீட்டிங்க் ஆகியவற்றை கவனித்தால் நமக்கு கேள்வியை தூண்டும் முக்கியமான விசயம் ஏன் இரண்டு கைகளிலும் வாட்ச் கட்டியிருக்கிறார் என்பது தான். ஏன் என்று அவரே ஒரு விளக்கமும் அளித்திருக்கிறார்.
தன்னுடைய கையில் கட்டியிருக்கும் கைக்கடிகாரங்களில் ஒன்று அவருடைய தந்தைக்கு அவருடைய தாத்தா கொடுத்தது. 30 வருடங்களுக்கு முன்பு கொடுத்த அந்த வாட்ச் ஓடவில்லை என்பதால் தான் அமெரிக்காவிற்கு எடுத்துச் சென்று அதனை சரி செய்து பயன்படுத்தி வருகிறேன் என்றும் கூறியுள்ளார்.
தன்னுடைய மற்றொரு கையில் கட்டியிருக்கும் கறுப்புநிற கைக்கடிகாரம் ஃபிட்பிட் வாட்ச். இதனை தன்னுடைய ஆரோக்கியம் சார்ந்த நடவடிக்கைகளை அறிந்த் கொள்ள பயன்படுத்தி வருகிறேன் என்று கூறியுள்ளார். ஃபிட்பிட் வாட்ச் இதயதுடிப்பு, எவ்வளவு தூரம் நடந்திருக்கின்றோம் என்பதை அறிந்து கொள்ள பயன்படுத்துகின்றேன். இந்த ஆப்பிள் வாட்ச் மூலமாக போன் பேச முடியும். பாடல் கேட்கலாம். அவசமாக போன் அழைப்புகள் வந்தால் இதன் மூலம் பதில் கூற முடியும். எனவே இது இன்றைய சூழலுக்கு தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil