Advertisment

டெண்டர் சர்ச்சைகளுக்கு மத்தியில் விருப்ப ஓய்வு பெற்ற சந்தோஷ் பாபு ஐஏஎஸ்

சனிக்கிழமை வரை தமிழ்நாடு கைவினைப்பொருட்கள் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராகவும் நிர்வாக இயக்குநராகவும் இருந்தார்.

author-image
WebDesk
New Update
santhosh babu IAS Voluntary Retirement

சந்தோஷ் பாபு ஐ.ஏ.எஸ்

ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ் பாபு தனது சேவையிலிருந்து (வி.ஆர்.எஸ்) விருப்ப ஓய்வு பெறுவதற்கான விண்ணப்பத்தை சனிக்கிழமை பிற்பகல் தமிழக அரசு ஏற்றுக்கொண்டது. அவர் கடந்த ஜனவரி மாதம் வி.ஆர்.எஸ்.க்கு விண்ணப்பித்திருந்தார்.

Advertisment

காங்கிரஸ் கட்சி தலைமை குறித்த கடிதம் பா.ஜ.,வுக்கு சாதகமாக அமையும் – ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

அவரை விடுவித்து அரசு உத்தரவு பிறப்பித்ததை அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார். சென்னையில் உள்ள ஒரு தனியார் சிவில் சர்வீஸ் பயிற்சி மையத்தில் சேரவுள்ள திரு.சந்தோஷ் பாபு இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. முதன்மை செயலாளர் தரவரிசை அதிகாரியான திரு. பாபு, 1995 ஆம் ஆண்டு தமிழ்நாடு கேடரைச் சேர்ந்தவர். சனிக்கிழமை வரை தமிழ்நாடு கைவினைப்பொருட்கள் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராகவும் நிர்வாக இயக்குநராகவும் இருந்தார்.

அவர் தகவல் தொழில்நுட்பத் துறையின் செயலாளராகவும், தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேஷனின் தலைவராகவும் இருந்தபோது வி.ஆர்.எஸ்-க்கு விண்ணப்பித்திருந்தார். இது கிராமப்புறங்களுக்கு பிராட்பேண்ட் இணைய சேவைகளை வழங்குவதற்கான பல கோடி பாரத்நெட் திட்டத்திற்கான டெண்டர் செயல்பாட்டில் ஈடுபட்டிருந்தது.

கட்சியை வலுப்படுத்தவே கடிதம் எழுதினோம் – காங்கிரஸ் மூத்த தலைவர் பி.ஜே. குரியன்

ஏலதாரர்களுக்கான தகுதி நிலைமைகளை திருத்துவதற்கான முயற்சிகளை சந்தோஷ் பாபு நிராகரித்த நிலையில், விரைவில் வி.ஆர்.எஸ். பெற்றிருக்கிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பின்னர் இந்த விவகாரத்தில் முதல்வரிடம் பதில் கோரியது குறிப்பிடத்தக்கது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Tamil Nadu Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment