Advertisment

சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு ரூ.3000 போனஸ் அறிவிப்பு!

தற்காலிக அரசு ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்புகள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இந்த போனஸ் வழங்கப்படும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu govt announces bonus

Tamil Nadu govt announces bonus

Pongal Bonus: சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸாக ரூ.3000 அறிவித்திருக்கிறது தமிழக அரசு.

Advertisment

ஜே.என்.யு வன்முறை ஒரு திட்டமிடப்பட்ட தாக்குதல் – மாணவர் சங்கத் தலைவர் அய்ஷி கோஷ்

சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும், குடும்ப ஓய்வூதியர்களுக்கும், தமிழக அரசு ஆண்டு தோறும் பொங்கல் போனஸை வழங்கி வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.3,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதேபோன்று, சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பல்வேறு துறைகளில் தொகுப்பூதியம் பெறும் பணியாளர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.1,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சி மற்றும் டி பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், சத்துணவு, அங்கன்வாடி போன்றவற்றில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நகரி எம்.எல்.ஏ நடிகை ரோஜாவை சொந்த கட்சியினரே தாக்க முயற்சி; வைரல் வீடியோ

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ”சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு, 3 ஆயிரம் ரூபாய் பொங்கல் போனஸ் வழங்கப்படும்.  அதன்படி, நிரந்தர மற்றும் தற்காலிக அரசு ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்புகள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இந்த போனஸ் வழங்கப்படும் என்றும், தற்காலிக பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, பொங்கல் போனஸாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment