Advertisment

சென்னை மதுரை ஐகோர்ட் அரசு வழக்கறிஞர்கள் பட்டியல்; முதல்முறையாக கூட்டணிக் கட்சிகளுக்கு இடம்

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளை உயர் நீதிமன்றங்களில் அரசு சார்பில் அரசு வழக்கறிஞர்களாக ஆஜராவதற்கு 44 வழக்கறிஞர்களின் பட்டியலை தமிழ்நாடு அரசு இன்று (ஜூன் 10) வெளியிட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சென்னை மதுரை ஐகோர்ட் அரசு வழக்கறிஞர்கள் பட்டியல்; முதல்முறையாக கூட்டணிக் கட்சிகளுக்கு இடம்

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளை உயர் நீதிமன்றங்களில் அரசு சார்பில் அரசு வழக்கறிஞர்களாக ஆஜராவதற்கு 44 வழக்கறிஞர்களின் பட்டியலை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் திமுக முதல்முறையாக கூட்டணி கட்சி வழக்கறிஞர்களுக்கு இடம் அளித்துள்ளது கவனத்தைப் பெற்றுள்ளது.

Advertisment

ஆட்சி மாறும்போது காட்சிகளும் மாறும் என்பது வழக்கமான ஒன்றுதான். அந்த அடிப்படையில், திமுக ஆட்சியைப் பிடித்ததும் முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை அனைவரையும் மாற்றம் செய்து வருகிறார். அதே போல, சென்னை உயர் நீதிமன்றத்திலும் மதுரை கிளை உயர் நீதிமன்ன்றத்திலும் தமிழக அரசு சார்பில் ஆஜராவதற்கு அரசு வழக்கறிஞர்களை தமிழ்நாடு அரசு நியமனம் செய்துள்ளது. பொதுவாக ஆளும் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்களையே அரசு வழக்கறிஞர்களாக நியமனம் செய்யப்படுவார்கள். அதிமுக ஆட்சியில் கூட்டணி கட்சியான தேமுதிகவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் அரசு வழக்கறிஞர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், திமுக ஆட்சியில் ஆளும் கட்சி வழக்கறிஞர்களைத் தவிர கூட்டணி கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டதில்லை. ஆனால், இந்த முறை திமுக முதல்முறையாக கூட்டணி கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமனம் செய்துள்ளதாக நீதித்துறை வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளை உயர் நீதிமன்றங்களில் அரசு சார்பில் அரசு வழக்கறிஞர்களாக ஆஜராவதற்கு 44 வழக்கறிஞர்களின் பட்டியலை தமிழ்நாடு அரசு இன்று (ஜூன் 10) வெளியிட்டுள்ளது. இதில், வழக்கறிஞர் செல்வேந்திரன் அரசு சிவில் வழக்கறிஞராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரை அடுத்து, வழக்கறிஞர்கள் ஆர்.அனிதா, ஏ.எட்வின் பிரபாகார், ஜி.கிருஷ்ணராஜா, வி.வேலுசாமி, வி.நன்மாறன், எஸ்.ஆறுமுகம், டி.அருண்குமார், வி.மனோகரன், சி.கதிரவன், சி.செல்வராஜ், சி.ஜெயப்பிரகாஷ், வி.பி.ஆர்.இளம்பரிதி, யு.பரணிதரன், கே.திப்புசுல்தான், கே.எம்.டி.முகிலன், எல்.எஸ்.எம்.ஹசன்ஃபைசல், எஸ்.ஜே.முஹமது சாதிக், யோகேஷ் கண்ணதாசன், ஏ.இ.ரவிச்சந்திரன், டி.ரவிச்சந்தர், ஸ்டாலின் அபிமன்யு, என்.ஆர்.ஆர்.அருண் நடராஜன், எம்.ஆர்.கோகுலகிருஷ்ணன், பி.பாலதண்டாயுதம், டி.என்.சி.கௌஷிக் ஆகியோர் சிவில் வழக்கறிஞர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதே போல, வி.ஜே.பிரியதர்ஷனா, ஆர்.வினோத்ராஜா, எஸ்.சுகேந்திரன், எம்.லிங்கதுரை, கே.எஸ்.செல்வகணேசன், பி.சரவணன், ஆர்.ராகவேந்திரன், ஆர்.சுரேஷ்குமார், எஸ்.ஷண்முகவேல், டி.காந்திராஜ், ஏ.பாஸ்கரன், பி.சுப்புராஜ், ஆர்.எம்.அன்புநிதி, டி.செந்தில்குமார், கே.சஞ்ஜய்காந்தி, ஆர்.எம்.எஸ். சேதுராமன், பி.கோட்டைசாமி, இ.ஆண்டனி சகாய பிரபாகர் இவர்கள் அரசு குற்றவியல் வழக்கறிஞர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.சுப்புராஜ் மதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆவார். இவர் அரசு வழக்கறிஞராக நியமனம் செய்யப்பட்டிருப்பது தமிழக வழக்கறிஞர்கள் வட்டாரத்திலும் நீதித்துறையிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Chennai High Court Madurai Tamil Nadu Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment