Advertisment

மத்திய அரசுக்கு கடிதம்; அண்ணா பல்கலை. துணை வேந்தர் சூரப்பாவிடம் விளக்கம் கோரும் தமிழக அரசு

அண்ணா பல்கலைக்கழகம் தன்னாட்சி நிறுவனம் என்கிற அந்தஸ்தைப் பெறுவதற்கு 5 ஆண்டுகளில் ரூ.1,570 கோடி தேவையை பல்கலைக்கழகமே எளிதில் பூர்த்தி செய்ய முடியும் என்று துணை வேந்தர் சூரப்பா மத்திய அரசுக்கு எழுதிய முன்மொழிவு கடிதம் குறித்து தமிழக அரசு விளக்கம் கோரியுள்ளது.

author-image
WebDesk
New Update
Tamil Nadu govt asks explanation Anna University VC Surappa, அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா, தமிழக அரசு விளக்கம் கோரி துணை வேந்தர் சூரப்பாவுக்கு கடிதம், Anna University vice-chancellor Surappa, Institute of Eminence, ugc, Anna University VC Surappa proposal to Centre, tamil nadu govt, anna university, reservation policy affect

அண்ணா பல்கலைக்கழகம் தன்னாட்சி நிறுவனம் என்கிற அந்தஸ்தைப் பெறுவதற்கு ஆண்டுக்கு ரூ.314 கோடி என 5 ஆண்டுகளில் ரூ.1,570 கோடி தேவையை பல்கலைக்கழகமே எளிதில் பூர்த்தி செய்ய முடியும் என்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மத்திய அரசுக்கு எழுதிய முன்மொழிவு கடிதம் குறித்து தமிழக அரசு விளக்கம் கோரியுள்ளது.

Advertisment

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா, பல்கலைக்கழகத்தின் தன்னாட்சி அந்தஸ்து குறித்து மத்திய அரசுக்கு நேரடியாக கடிதம் எழுதியுள்ளார். பல்கலைக்கழகத்தின் தன்னாட்சி அந்தஸ்து இடஒதுக்கீட்டுக் கொள்கையை பாதிக்கும் என்று மாநில அரசு கவலையடைந்ததால் இந்த விவகாரம் சர்ச்சையாகி உள்ளது.

தற்போது, தமிழகத்தில் உள்ள 69% இடஒதுக்கீட்டை தொடர வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கைக்கு மத்திய அரசிடம் இருந்து முறையான எந்த ஒரு பதிலும் இல்லை என்று மாநில அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. தன்னாட்சி நிறுவனம் அந்தஸ்து தொடர்பாக, ஜூன் 2-ம் தேதி துணை வேந்தர் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு எழுதிய திருத்தப்பட்ட கடிதத்தை மாநில அரசு சுட்டிக்காட்டியுள்ளது. மாநில அரசு அவரிடம், குறிப்பிட்ட எந்த ஆதாரங்களின் கிழ் இந்த தொகையை உருவாக்க முடியும் என்பதை மாநில அரசுக்கு அறிக்கை அளிக்குமாறும் பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவிடம் மாநில அரசு விளக்கம் கேட்டுள்ளது.

அக்டோபர் மாத தொடக்கத்தில் மத்திய அரசு மீண்டும் மாநில அரசுக்கு கடிதம் எழுதியதையடுத்து, பல்கலைக்கழகத்தின் உள் வளங்களிலிருந்து வருவாய் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் என்று உறுதியளித்த பின்னர் விளக்கம் கோரும் கடிதம் செவ்வாய்க்கிழமை அனுப்பப்பட்டது. துணைவேந்தர் அனுப்பிய முன்மொழிவை பரிசீலித்து, ஒரு உத்தரவாதத்தை வழங்க மாநில அரசிடம் கோரப்பட வேண்டும் என்று பரிந்துரைத்து நிபுணர் அதிகாரம் பெற்ற குழுவை மையத்தின் கடிதப் பின்தொடர்தல் பின்பற்றுகிறது.

அக்டோபர் மாத தொடக்கத்தில் மத்திய அரசு மீண்டும் மாநில அரசுக்கு கடிதம் எழுதியதையடுத்து, பல்கலைக்கழகத்தின் உள் ஆதாரங்களில் இருந்து வருவாய் பற்றாக்குறையை பூர்த்தி செய்யும் என்று உறுதியளித்ததற்கு, விளக்கம் கோரி பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவுக்கு செவ்வாய்க்கிழமை கடிதம் அனுப்பப்பட்டது. பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா அனுப்பிய முன்மொழிவு கடிதத்தை பரிசீலித்து, ஒரு உத்தரவாதத்தை வழங்க மாநில அரசிடம் கோர வேண்டும் என பரிந்துரைத்து அதிகாரம் பெற்ற நிபுணர் குழு மத்திய அரசு கடிதம் வழியாக நடவடிக்கையைத் தொடரும்.

பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா, பல்கலைக்கழகத்தின் தன்னாட்சி நிறுவன அந்தஸ்தை ஜூன் 2ம் தேதி தலைமைச் செயலாளர் கே.சண்முகம் ஒப்புக்கொண்டதாகவும் ஆனால், எதிர்பார்க்கப்படும் ரூ.1,000 கோடி பங்களிப்பு செய்ய இயலாது என்று தெரிவித்ததாக மத்திய அரசிடம் கூறினார்.

அதே நேரத்தில், சில அரசு வட்டாரங்கள் கூறுகையில், “முழு தொகையையும் மத்திய அரசு வழங்கினால், இந்த திட்டத்தை அரசு செயல்படுத்தும் என்று தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் அமைச்சகத்திடம் தெரிவித்திருந்தார். ஆனால், துணைவேந்தர் அதன் இருப்பு, தேர்வுக் கட்டணம், கல்விக் கட்டணம், இணைப்புக் கட்டணம் உள்ளிட்ட உள் ஆதாரங்களில் இருந்தே எளிதில் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் என்று மத்திய அமைச்சகத்திற்கு தெரிவித்தார். பல்கலைக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் ரூ.580 கோடி வருவாய் ஈட்டுகிறது என்று அவர் கூறியிருந்தார். அதன் வருடாந்திர தொகுதி மானியங்கள் மற்றும் கூடுதல் மானியங்களைத் தவிர, அரசாங்கத்திடமிருந்து கூடுதல் நிதி தேவைக்கு உள்ளாகாது” என்று கூறுகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Anna University Tamil Nadu Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment