Advertisment

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. மு.க. ஸ்டாலின் புத்தாண்டு பரிசு

ஏற்கனவே 34 சதவீதமாக இருந்த அகவிலைப்படி, ஞாயிற்றுக்கிழமை (1.1.2023) முதல் 38 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Tamil Nadu Govt Employees DA Increase

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை மாநில முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அதன்படி, ஏற்கனவே 34 சதவீதமாக இருந்த அகவிலைப்படி, ஞாயிற்றுக்கிழமை (1.1.2023) முதல் 38 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

Advertisment

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் பங்கினை முழுமையாக உணர்ந்துள்ள இந்த அரசு, அவர்களின் நலனை பாதுகாத்து வருகின்றது.

முந்தைய அரசு விட்டுச் சென்ற கடும் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமைக்கு இடையேயும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்ற முனைப்புடன் இந்த அரசு செயல்பட்டு வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், “தற்போது 34 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 1:1:2023 முதல் 38 சதவீதமாக உயர்த்தப்படும். இதனால் சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.

இந்த உயர்வால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு 2359 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து, “சம வேலை சம ஊதியம் என்ற கோரிக்கை தொடர்பாக வலியுறுத்தி போராடிவரும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து தகுந்த பரிந்துரைகளை அளிப்பதற்காக, நிதித்துறை செயலாளர் தலைமையில், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட குழு ஒன்று அமைக்கப்படும்” எனவும் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Tamil Nadu Mk Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment