Advertisment

தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால் பொங்கல் பரிசு வழங்குவதை தள்ளிவைக்க கோரி வழக்கு

தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், தேர்தல் முடிந்த பின் பொங்கல் பரிசு வழங்க அனுமதியளிக்கப்பட்டு உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil nadu govt pongal gift, pongal festival gift, பொங்கல் பரிசு, தமிழ்நாடு அரசு, பொங்கல் பரிசு தடை கோரி வழக்கு, govt pongal festival gift, pongal festival gift distribution postponed case, tamil nadu government, local body election

Tamil nadu govt pongal gift, pongal festival gift, பொங்கல் பரிசு, தமிழ்நாடு அரசு, பொங்கல் பரிசு தடை கோரி வழக்கு, govt pongal festival gift, pongal festival gift distribution postponed case, tamil nadu government, local body election

உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை தள்ளிவைக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Advertisment

இந்த வழக்கை இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27, 30ம் தேதிகளில் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொங்கல் பரிசு திட்டத்தை செயல்படுத்த உள்ளாட்சி தேர்தல் முடியும் வரை தடை விதிக்க கோரி, திருவண்ணாமலையைச் சேர்ந்த அலமேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், கடந்த ஆண்டு பொங்கல் பரிசு திட்டம், ஜனவரி 7ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், ஆனால், உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களை கவரவே, இந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதியே இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் முடிந்த பிறகு, இத்திட்டத்தை செயல்படுத்த போதிய கால அவகாசம் இருக்கும் நிலையில், தற்போது, வருவாய் துறை அதிகாரிகள், பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துவங்கியுள்ளதால், உள்ளாட்சி தேர்தல் முடியும் வரை பொங்கல் பரிசு திட்டத்தை தள்ளிவைக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், நீதிபதி சத்தியநாராயணன் தலைமையிலான அமர்வில் முறையிட்டார். இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கை பிற்பகல் 2:15 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.

பின்னர், நடைபெற்ற விசாரணையின்போது, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களைத் தவிர்த்து, மீதமுள்ள தேர்தல் நடக்கும் 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறி, அந்த உத்தரவைத் தாக்கல் செய்தார்.

அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், பொங்கல் பரிசு வழங்குவது தொடர்பாக ஆளுங்கட்சி வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்ய கூடாது என உத்தரவிட வேண்டும் எனக் கோரினார்.

இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்கும்படி, மாநில தேர்தல் ஆணையத்துக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 10ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tamilnadu Tamil Nadu Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment