Advertisment

தமிழகத்தில் 6 இடங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள்... மத்திய அரசிடம் கோரிக்கை

தமிழக சுகாதாரத்துறை பீலா ராஜேஷ், மருத்துவக்கல்லூரி இயக்குநர் நாராண பாபு உள்ளிட்டோர் மத்திய அமைச்சர் சந்திப்பில் உடன் இருந்தனர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தமிழகத்தில் 6 இடங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள்... மத்திய அரசிடம் கோரிக்கை

Surjith rescue operation live Updates :

Tamil Nadu health department : ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, திண்டுக்கல், நாமக்கல் மற்றும் திருப்பூர் போன்ற இடங்களில் மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கர் செவ்வாய் கிழமை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மற்றும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ப்ரீதி சுதான் ஆகியோரை டெல்லியில் சந்தித்தார்.

Advertisment

அவர்களை சந்தித்து பேசிய விஜயபாஸ்கர், தமிழகத்தில் 6 இடங்களில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளை அமைப்பது தொடர்பாக பேசியுள்ளார். 6 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரி அமைக்கப்படுவதோடு மட்டுமின்றி அதற்கு தேவையான இடங்கள் குறித்த தகவல்களையும் மத்திய அமைச்சகத்திடம் அளித்துள்ளார். கரூர் மாவட்டத்தில் தற்போது கட்டப்பட்ட மருத்துவக்கல்லூரி உட்பட தமிழகத்தில் 23 மருத்துவக்கல்லூரிகள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : சி.பி.எம் கட்சியின் தேர்தல் நிதிக்காக திமுக அளித்த ரூ.10 கோடி நன்கொடை எங்கே?

இந்த 6 இடங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறது. முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் இந்த இடங்களில் மருத்துவமனைகள் கட்ட மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்று கூறிய விஜயபாஸ்கர், தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்டுவதற்கும் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறியுள்ளார். தமிழக சுகாதாரத்துறை பீலா ராஜேஷ், மருத்துவக்கல்லூரி இயக்குநர் நாராண பாபு உள்ளிட்டோர் மத்திய அமைச்சர்கள் சந்திப்பில் உடன் இருந்தனர்.

Minister C Vijayabaskar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment