Advertisment

சுமார் 2000 கிலோ கோவில் நகைகளை தங்கக் கட்டிகளாக மாற்ற நடவடிக்கை: அமைச்சர் சேகர் பாபு

2000kg jewels in temples could get converted to gold bars Tamil News: தங்கக் கட்டிகளாக மாற்றப்பட உள்ள கோயில் தங்க நகைகள் சுமார் 2,000 கிலோ இருக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news in tamil: 2000kg jewels in temples could get converted to gold bars; TN minister sekar babu

TN Minister P. K. Sekar Babu Tamil News: தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் நேற்று இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அதன் கொள்கை விளக்கக் குறிப்பை வெளியிட்டு பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, 'இந்து மத மற்றும் அறநிலையத் துறையால் நடத்தப்படும் கோயில்களில் பக்தர்கள் வழங்கும் சிறிய நகைகளை மாநில அரசு தங்கக் கட்டிகளாக உருக்கி, வங்கிகளில் டெபாசிட் செய்து, கோயில்களின் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்களுக்கான நிதி திரட்டும்' என்றார்.

Advertisment

இது தொடர்பாக மேலும் பேசிய அவர், "கடந்த 10 ஆண்டுகளில் கோயில்களுக்கு பக்தர்கள் வழங்கிய சிறிய நகைகள் கோயில் பெட்டகங்களில் பயன்படுத்தப்படாமல் கிடக்கின்றன. இந்த நகைகள் அனைத்தும் மும்பையில் உள்ள அரசுக்கு சொந்தமான சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பட்டு தங்கக் கட்டிகளாக உருக்கி சேர்க்கப்படும்.

உருக்கப்பட்ட தங்கக் கட்டிகள், கோயில்களில் இருந்து அகற்றப்பட உள்ள ரத்தினங்கள் மற்றும் விலைமதிப்பற்ற கற்கள் அனைத்தும் வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும். அவற்றில் இருந்தும் பெறப்படும் நிதியை கோயில்களின் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்களுக்காக அரசு பயன்படுத்தும்.

இந்த முழு செயல்முறையை மேற்பார்வையிட ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் மூன்று மண்டல அளவிலான குழுக்கள் அமைக்கப்படும்" என்று தெரிவித்தார்.

இந்த பயிற்சி 1978ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை செயல்பாட்டில் இருந்தது என்றும், 2011ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற அதிமுக அரசால் இது நிறுத்தப்பட்டது என்றும் துறையின் மூத்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், தற்போது தங்கக் கட்டிகளாக மாற்றப்பட உள்ள தங்க நகைகள் சுமார் 2,000 கிலோ இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

"அடுத்த இரண்டு வாரங்களில் தங்க நகைகளை தங்கக் கட்டிகளாக மாற்றுவதற்கான செய்முறையை சரிபார்ப்பு அதிகாரிகள் தொடங்க உள்ளார்கள். கையிருப்பு, சரிபார்ப்பு என அனைத்து செயல்முறையும் பதிவு செய்யப்பட்டு கோயில் வளாகத்தில் உள்ள LED திரைகளில் ஒளிபரப்பப்படும். மேலும் இந்து அற நிலைய துறை இணையதளத்திலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

இந்த திட்டத்தில் திருத்தணி, பழனி, சமயபுரம் மற்றும் திருச்செந்தூர் போன்ற பெரிய கோயில்களில் உள்ள தங்க நகைகள் முதலில் அகற்றப்பட வாய்ப்புள்ளது.

தெய்வங்களை அலங்கரிக்கும் பெரிய தங்க நகைகளை நாங்கள் வைத்திருப்போம். உருகுவதற்கு சிறிய காது மற்றும் மூக்கு வளையங்கள் மற்றும் செயின்கள் மட்டுமே எடுக்கப்படும். தெய்வங்களை அலங்கரிக்க விலைமதிப்பற்ற கற்களும் தக்கவைக்கப்படும். தங்கக் கம்பிகள், வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும். தவிர, தங்கக் கோயில்ல் கார்களைத் தயாரிக்கவும் பயன்படுத்தப்படும்," என்று மூத்த அதிகாரி ஒருவர் 'தி டைம்ஸ் ஆப் இந்தியா' இதழிடம் தெரிவித்துள்ளார்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Chennai Tamilnadu Tamilnadu News Update Tamilnadu Assembly Tamilnadu Latest News Minister P K Sekar Babu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment