Tamil Nadu news in tamil: A tribal settlement remains untouched by Covid-19 | Indian Express Tamil

கொரோனா தீண்டாத தமிழகத்தின் பழங்குடியினர் கிராமம்

Chinnampathi village reports zero covid – 19 infections Tamil News: 150 பேர் வசிக்கும் பழங்குடியினர் கிராமமான சின்னம்பதியில் கொரோனா தொற்று ஆரம்ப நாட்களிலிருந்தே கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil Nadu news in tamil: A tribal settlement remains untouched by Covid-19

Tamil Nadu news in tamil: கடந்த ஆண்டின் துவக்க மாதங்களில் இந்தியா முழுவதும் பரவ தொடங்கிய கொரோனா தொற்று நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கொடிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் நீட்சியாக தற்போது உருவெடுத்துள்ள கொரோனா 2ம் அலையும் நாட்டின் முக்கிய பகுதிகளில் பரவி வலி மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த பெருந்தொற்று அச்சத்திலிருந்து தமிழகத்தின் சில குக் கிராமங்கள் தங்களை தாங்களே தற்காத்து கொண்டுள்ளன. மேலும் 2 அலையிலும் கிராமத்தில் வசிக்கும் எந்தவொரு நபருக்கும் தொற்று பரவாமல் இருக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றன.

அந்த வகையில் கோயம்பத்தூர் மாவட்டம் சின்னம்பதி கிராமம் இதுவரை கொரோனா பாதிப்பு இல்லாத கிராமமாக உள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் அனைவரும் பழங்குடியினர். 150 நபர்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் 45 வயதிற்குட்பட்டோர் பாதிக்கு மேல் உள்ளனர்.

கிராமத்தை வைரஸிலிருந்து வெற்றிகரமாகப் பாதுகாப்பதற்கான திறவுகோலாக அதிகபட்ச விழிப்புணர்பு அமைந்தது என்று சின்னம்பதி கிராமத்தில் வசிக்கும் செந்தில் குமார் கூறியுள்ளார்.

மேலும் இது குறித்து அவர் கூறுகையில், “உடல் ரீதியான தூரத்தை பராமரிப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றியும், ஒருவித மாஸ்க்கை பயன்படுத்துவதன் மூலமாகவும், மூக்கு மற்றும் வாயை பொதுவில் மறைப்பதற்கு அரசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு முன்பே கற்பிக்கப்பட்டது” என்றும் குறிப்பிட்டுள்ளார். இவரின் மனைவி மதுக்கரை பஞ்சாயத்தின் தலைவர் ஆவார்.

“மாநிலத்தில் வைரஸ் வேகமாகப் பரவி வருவதை நாங்கள் உணர்ந்தபோது, ​​கடுமையான நடவடிக்கைகளைச் செய்ய பஞ்சாயத்து முடிவு செய்தது. வேலைக்காக எங்கள் கிராமத்திற்கு வெளியேயும், உள்ளேயும் மக்கள் செல்வதை நாங்கள் கண்காணித்தோம். நம்மா நவகராய் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன், நாங்கள் தன்னார்வலர்களை அமைத்து ஒவ்வொரு வீட்டிலும் உறுப்பினர்களின் பட்டியலைத் தயாரித்தோம்.

ஏதேனும் அறிகுறிகள் ஏற்பட்டால் அருகிலுள்ள சுகாதார மையத்திற்கு மக்களை அழைத்துச் செல்ல எங்களுக்கு இரண்டு வாகனங்கள் வழங்கப்பட்டன. லேசான அறிகுறி கூட உள்ள எவருக்கும் உடனடியாக கவனம் செலுத்தப்பட்டது. நோயெதிர்ப்பு நோக்கங்களுக்காக குடும்பங்களுக்கு ஆயுர்வேத மருந்துகளை வழங்கினோம்.

வெளியாட்கள் வருவதைத் தடுக்க கிராமவாசிகள் தங்கள் விருப்பப்படி வேலி அமைத்திருந்தாலும், அதிகாரிகள் மருத்துவ முகாம்கள் மற்றும் வழக்கமான கோவிட் பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம் தங்கள் பங்கைச் செய்தனர்” என்று செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் மூடப்பட்டு, ஆன்லைன் வகுப்புகளுக்கு உள்கட்டமைப்பு இல்லாததால், கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு பயிற்சி அளித்து வரும் முதல் பட்டதாரியான சந்தியா ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இதழுக்கு அளித்த பேட்டியில், “கிராமத்திற்குள் ஒரு ரேஷன் கடை உள்ளது. இங்குள்ளவர்களில் பெரும்பாலோர் குறைந்த ஊதியம் பெறும் வேலைகளைச் செய்கிறார்கள்” என்றுள்ளார்.

கேரளாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் இந்த பழங்குடி குக்கிராமத்தில் மின்சாரம், நீர் மற்றும் வழக்கமான போக்குவரத்து சேவை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamil nadu news in tamil a tribal settlement remains untouched by covid 19