Today Tamil News : ஜன. 4 முதல் 13 வரை 2.02 கோடிக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுத்தொகுப்பு விடுபட்டவர்களுக்கு இன்று முதல் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 5 திட்டங்களை தொடங்கி வைப்பது குறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க 2 நாள் பயணமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று டெல்லி செல்கிறார். இதில் அமித்ஷாவுடனான சந்திப்பில் தமிழக தேர்தலில், பாஜகவுக்கான தொகுதிகள், கூட்டணியில் பிறகட்சிகள் குறித்து ஆலோசனை செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் தொடர் போராட்டங்களை நடைபெற்று வரும் நிலையில், இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து டெல்லி நோக்கி டிராக்டர்களில் புறப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த ஏராளமாக நிலங்களில் நெல், கடலை, சம்மங்கி உள்ளிட்ட பயிர்கள் மழையில் மூழ்கியது. இதனால் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ள விவசாயிகள், நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
“வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு அதிமுக அரசு வீடுகளை கட்டிக்கொடுக்கும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
Live Blog
Tamil News : இன்றைய முக்கியச் செய்திகள் தொடர்பான தமிழ் லைவ் பிளாக் இது. இதில் தமிழகம், இந்தியா, உலகம் சார்ந்த முக்கிய செய்திகளின் அப்டேட்டை உடனுக்குடன் தமிழில் காணலாம்.
கல்பாக்கம் அணுமின் நிலைய பணிகளை தமிழக இளைஞர்களுக்கே கிடைக்க மத்திய-மாநில அரசுகள் ஆவன செய்ய வேண்டும் என்று திமுக இளைஞரணி அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
தனது ட்விட்டரில், "கல்பாக்கம் அணுமின் நிலைய ஃபிட்டர்-வெல்டர் பணிகளுக்கு ஊதியத்துடன் கூடிய பயிற்சிக்கான தேர்வுகளை மும்பையில் மட்டும் நடத்துவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.இதற்காக 2 முறை மும்பை செல்ல வேண்டுமென்ற அறிவிப்பாணையை படித்ததுமே இப்பணியே வேண்டாமென தமிழக இளைஞர்கள் விலகும் சூழல் உருவாகியுள்ளது ITI & பட்டயப்படிப்பை தகுதியாகக் கொண்ட இப்பணிகளுக்கான பயிற்சிக்கு எழுத்து தேர்வோடு நேர்காணலும் நடத்தப்படுவது பல்வேறு சந்தேகங்களை கிளப்புகிறது. இத்தேர்வினை தமிழகத்தில் நடத்துவதோடு, இந்தப்பணிகள் தமிழக இளைஞர்களுக்கே கிடைக்க மத்திய-மாநில அரசுகள் ஆவன செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்வதற்காக இன்று புதுடெல்லி புறப்பட்டார். முதல் கட்டமாக, இன்று இரவு 7.30 மணியளவில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின் போது, சட்டமன்றத் தேர்தல் வியூகம் குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் ஆலோசனைகள் மேற்கொள்ளலாம் என்று அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.
வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவது என்பதை தவிர, வேறு எதைப்பற்றி பேச விரும்பினாலும் விவசாயிகள் அரசிடம் எடுத்துரைக்கலாம் என மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தெரிவித்தார்.
நாளை நடைபெறவுள்ள அடுத்த சுற்று பேச்சுவார்த்தையில் வேளாண் சீர்திருத்தங்கள் குறித்த விவாதத்தில் பிரிவு வாரியாக விவாதம் நடத்த முன்வருமாறு போராடும் விவசாயிகளை அவர் வலியுறுத்தினார்.
பொதிகை உள்ளிட்ட மாநில மொழித் தொலைக்காட்சிகளில் நாள்தோறு சமஸ்கிருத செய்திக் தொகுப்பை 15 நிமிடங்கள் ஒளிபரப்ப வேண்டும் என்று மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்குப் பதிலளித்த நீதிபதிகள், " மனுதாரருக்கு தேவையில்லை எனில் டிவியை அணைத்து விடலாம், இல்லையெனில் வேறு சேனல் மாற்றலாம். இதனைவிட முக்கிய பிரச்சனைகள் பல உள்ளன" என்று கூறி வழக்கை முடித்தி வைத்தனர்.
சசிகலா வந்தவுடன் ஒட்டுமொத்த அதிமுகவும் அவரை தலைவியாக ஏற்றுக் கொள்வார்கள் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், கமல்ஹாசனால் எம்ஜிஆர் ஆக முடியாது என்றும், தேர்தல் வரும்போது எம்ஜிஆர் பெயரை பயன்படுத்துவது இயல்பே என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மிகப்பெரிய தலைவர்கள் மறைந்த பிறகு, முதலமைச்சர் பழனிசாமி ஆட்சியை சிறப்பாக நடத்தி வருகிறார் என்று நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். மேலும் அதிமுக மீது ஊழல் புகார் கொடுக்கும் திமுகவின் 2ஜி ஊழலை என்னவென்று சொல்வதுஎன கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் நாளை 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், பள்ளிக்கு வரும்போது மாணவர்கள் முகக் கவசம் அணிந்து பள்ளிக்கு வருவது கட்டாயம்" என பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற விகே சசிகலா வரும் ஜனவரி 27ம் தேதி சசிகலா விடுதலையாகவுள்ள நிலையில் பிப்ரவரி 5ல் இளவரசியும் விடுவிக்கப்படுகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், ரூ.10 கோடி அபராதம் செலுத்தாததால் சுதாகரன் விடுதலையில் தாமதமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்து.
அதிமுகவை வெல்லும் சக்தி திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சென்னையில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், " தமிழகத்தில் எம்.ஜி.ஆர் பெயரை உச்சரித்தால் தான் கட்சி நடத்த முடியும்,ஊழலால் கலைக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சி. அதிமுக அரசின் மீது வேண்டுமென்றே பழி சுமத்துகிறார் ஸ்டாலின் " என்றும் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights