Advertisment

News Highlights: 2-ம் தலைநகர் அரசு கருத்து அல்ல- முதல்வர் விளக்கம்

Tamil News updates : முதல் முறையாக, ஒரே நாளில் ஒன்பது லட்சத்துக்கும் அதிகமான கோவிட்-19 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

author-image
WebDesk
New Update
பசுமை வழிச்சாலையை திமுக எதிர்ப்பது ஏன்? முதல்வர் கேள்வி

Tamil News : 2ம் தலைநகர் குறித்த அமைச்கர்களின் கருத்து, அரசின் கருத்தல்ல என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார். வருவாய்த் துறை அமைச்சார் உதயகுமார், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment

தமிழகத்தின் இரண்டாம் தலைநகராக, மதுரையை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்த ஆலோசனையை பல்துறை நிபுணர்கள், கல்வியாளர்கள், அறிஞர்கள், ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள், வர்த்தகர்கள், தொழிலதிபர்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் என, பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.

எப்போது ஓயும் இந்த போஸ்டர் யுத்தம் – தலைமை உத்தரவுக்கு பிறகும் அடங்காத வேட்கை

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாகும் பணியிடங்களை நிரப்புவதற்கு, நாடு முழுதும், ஒரே மாதிரியான தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்காக, என்.ஆர்.ஏ., எனப்படும் தேசிய பணியாளர் தேர்வு முகமை என்ற அமைப்பை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    22:00 (IST)20 Aug 2020

    2ம் தலைநகர் குறித்த அமைச்கர்களின் கருத்து, அரசின் கருத்தல்ல - முதல்வர் விளக்கம்

    2ம் தலைநகர் குறித்த அமைச்கர்களின் கருத்து, அரசின் கருத்தல்ல என்று முதல்வர்  எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார் 

    முன்னதாக, வருவாய்த் துறை அமைச்சார்  உதயகுமார்,  கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையை  தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தமிழகத்திற்கு ஒன்றல்ல இரண்டல்ல மூன்று தலைநகரம் உருவாக வேண்டும் என்று கோரிக்கை  விடுத்தார்.

    20:46 (IST)20 Aug 2020

    ஒரே நாளில் 9 லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனைகள்

    முதல் முறையாக, ஒரே நாளில் ஒன்பது லட்சத்துக்கும் அதிகமான கொவிட்-19 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9,18,470 பரிசோதனைகள் செய்யப்பட்டன. இந்த எண்ணிக்கை விரைவில் 10 லட்சத்தை எட்ட உள்ளது. இந்த சாதனையால், இதுவரை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கை மொத்தம் 3.25 கோடிக்கும் அதிகமாகும் (3,26,61,252) என்று மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.   

    20:42 (IST)20 Aug 2020

    கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முன்னுதாரணமாக இந்தியா திகழ்கிறது - பியூஷ் கோயல்

    கொரோனா நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் சில நாடுகளுக்கு முன்னுதாரணமாக இந்தியா திகழ்கிறது என்று தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்த நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக மருத்துவ துறையினர் ஆற்றி வரும் பணியை கண்டு நாடு பெருமிதம் கொள்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

    20:34 (IST)20 Aug 2020

    ஸ்விக்கி ஊழியர்களின்ஊதியப் பிரச்சனைக்கு முதல்வர் தீர்வு காண வேண்டும்- மு.க ஸ்டாலின்

    கொரோனா பேரிடர் காலத்தில், ஊழியர்களின் ஊதியத்தையும், ஊக்கத்தொகையும் ஸ்விக்கி( swiggy)  நிறுவனம் குறைத்துள்ளதால் , ஊழியர்களின் குடும்பங்கள் வறுமையின் பிடியில் தள்ளப்பட்டுள்ளது. ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும் என  ஸ்விக்கி( swiggy)  நிறுவனத்திற்கு முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் என்று எதிர்க் கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.         

    19:33 (IST)20 Aug 2020

    சென்னைப் பல்கலைக்கழக துணை வேந்தராக கௌரி நியமனம்- ஆளுநர் அறிவிப்பு

    சென்னைப் பல்கலைக்கழக துணை வேந்தராக கௌரியைஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று நியமித்தார்

    18:23 (IST)20 Aug 2020

    தமிழகத்தில் இன்று 5,986 பேருக்கு கொரோனா உறுதி

    தமிழகத்தில் இன்று 5,986 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,61,435 ஆக அதிகரித்துள்ளது  

    17:50 (IST)20 Aug 2020

    மதுரை அரசு மருத்துமனை செயல் மகிழ்ச்சியளிக்கிறது -ஓ. பன்னீர்செல்வம்

    இதயநோயுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணை தனியார் மருத்துவமனை கைவிட்ட நிலையில் தாயையும் சேயையும் மதுரை அரசு மருத்துமனை காப்பாற்றியுள்ள செய்தி மகிழ்ச்சியளிக்கிறது. கர்ப்பிணிக்கு இறுதி தருவாயிலும் நம்பிக்கையூட்டி மறுவாழ்வு அளித்த மருத்துவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! என்று துணை முதல்வர் தனது ட்விட்டரில் தெரிவித்தார்.   

    17:46 (IST)20 Aug 2020

    திருநாவுக்கரசு இரங்கல்

    காங்கிரஸ் முன்னாள் எம்.எல். ஏ வேலுசாமி  மறைவிற்கு திருநாவுக்கரசு இரங்கல் தெரிவித்தார். 

    இது குறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், " தூத்துக்குடி மாவட்டம் ஒட்டபிடாரம் தொகுதி முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திரு வேலுசாமி அவர்கள் இயற்கை எய்திய செய்தியை அறிந்து மனம் மிக வருந்துகிறேன். அன்னாரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்"  என்று தெரிவித்தார்.    

    17:44 (IST)20 Aug 2020

    deleting_message

    17:42 (IST)20 Aug 2020

    முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வேலுசாமி இயற்கை எய்தினார்.

    தூத்துக்குடி மாவட்டம் ஒட்டபிடாரம் தொகுதி முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்  வேலுசாமி அவர்கள் இயற்கை எய்தினார்.  

    16:46 (IST)20 Aug 2020

    மோடியின் கடிதத்திற்கு தோனி பதில்

    தன்னுடைய கடின உழைப்பையும், தியாகத்தையும் கவனிக்கப்பட்டு பாராட்டப்பட வேண்டும் என்று தான் கலைஞன், ராணுவ வீரன், விளையாட்டு வீரன் விரும்புவது. உங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி என மோடியின் கடிதத்திற்கு பதில் அனுப்பியுள்ளார் தோனி.

    16:40 (IST)20 Aug 2020

    புதுவை சுற்றுலாத்துறை

    புதுவையில் சுற்றுலாவை மேம்படுத்த நல்லவாடு பகுதியில் படுகை அணை, படகு குழாம் அமைக்கப்படும் என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

    16:01 (IST)20 Aug 2020

    எஸ்.பி.பி. விரைந்து குணம் அடைய வேண்டும் மத்திய அமைச்சர் ட்வீட்

    பின்னணி பாடகர் எஸ்.பி.பி. கொரோனா நோய் தொற்றில் இருந்து குணம் அடைய வேண்டும் என இறைவனை பிரார்த்தனை செய்து கொள்வதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ட்வீட் வெளியிட்டுள்ளார்.

    15:52 (IST)20 Aug 2020

    கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற போது இருவர் மரணம்

    காஞ்சிபுரம் முத்தியால்பேட்டை அருகே கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற போது விஷவாயு தாக்கி லட்சுமணன் மற்றும் சுனில் ஆகியோர் மரணம். அவர்களின் பிரேதம் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தது வாலாஜாபாத் காவல்துறை

    15:50 (IST)20 Aug 2020

    அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

    வட கடலோர மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    15:48 (IST)20 Aug 2020

    விநாயகர் சதுர்த்தி : தமிழக அரசின் ஆணையை ரத்து செய்ய இயலாது - உயர் நீதிமன்றம்

    விநாயகர் சதுர்த்திக்காக பொது இடங்களில் சிலைகள் வைக்க கூடாது என்ற தமிழக அரசின் ஆணையை ரத்து செய்ய முடியாது. விநாயகர் சிலை வைப்பது தொடர்பான அரசின் கொள்கை முடியில் தலையிட இயலாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவிப்பு

    15:01 (IST)20 Aug 2020

    சித்த மருத்துவத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதா?

    சித்தமருத்துவ துறைக்கு ரூ. 437 கோடி மட்டும் நீதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு மீது சென்னை நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. ஆயுஷ் என்ற வார்த்தையில் சித்தாவை குறிப்பிடும் ”எஸ்”- ஐ நீக்கிவிடலாமே என்று கேள்வி எழுப்பிய மத்திய அரசு, குறைந்த நிதி ஏன் ஒதுக்கப்பட்டது என்ற கேள்விக்கு விளக்கமளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    14:34 (IST)20 Aug 2020

    கிரிக்கெட் உலகில் தவிர்க்க முடியாத சக்தி தோனி - மோடி கடிதம்

    சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 15ம் தேதி அறிவித்தார் கிரிக்கெட் வீரர் தோனி. அவர் கிரிக்கெட் உலகில் தவிர்க்க முடியாத சக்தி என்று மோடி கடிதம் எழுதியுள்ளார். மேலும் தோனியின் அறிவிப்பால் 130 கோடி இந்தியர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்றும் மோடி கருத்து

    14:30 (IST)20 Aug 2020

    கந்தர்வகோட்டை அதிமுக எம்.எல்.ஏக்கு கொரோனா

    புதுக்கோட்டை கந்தர்வகோட்டை அதிமுக எம்.எல்.ஏ நார்தாமலை ஆறுமுகத்திற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    14:27 (IST)20 Aug 2020

    மத்திய அமைச்சர் ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி

    மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    13:56 (IST)20 Aug 2020

    அதிமுக அரசு ஆண்மையான அரசு தான் - அமைச்சர் ஜெயக்குமார்

    எச். ராஜா அதிமுக அரசு குறித்து எழுப்பிய சர்ச்சை கருத்துகளுக்கு பதில் கூறிய அமைச்சர், அவரின் வார்த்தைகள் அவருக்கு தான் பொருந்தும் என்று கூறியுள்ளார்.

    13:56 (IST)20 Aug 2020

    அதிமுக அரசு ஆண்மையான அரசு தான் - அமைச்சர் ஜெயக்குமார்

    எச். ராஜா அதிமுக அரசு குறித்து எழுப்பிய சர்ச்சை கருத்துகளுக்கு பதில் கூறிய அமைச்சர், அவரின் வார்த்தைகள் அவருக்கு தான் பொருந்தும் என்று கூறியுள்ளார்.

    13:54 (IST)20 Aug 2020

    மன்னிப்பு கேட்க இயலாது - பிரசாந்த் பூஷன் திட்டவட்டம்

    உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ. பாப்டே இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் இருந்தது குறித்து பிரசாந்த் பூஷன் தன்னுடைய கருத்தை பதிவு செய்தார். இதனை தொடர்ந்து தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிரசாந்த் பூஷன் குற்றவாளி என்று அறிவித்தது. இது கூறித்து பேசிய பூஷன் தன்னால் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது தண்டனைக்கு தயார் என்று கூறியுள்ளார்.

    13:51 (IST)20 Aug 2020

    பொறியியல் மாணவர் சேர்க்கை - கடைசி நாள்

    தமிழகத்தில் நடத்தப்படும் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பித்த மாணவர்கள் தங்களின் அசல் கல்வி சான்றிதழ்கலை பதிவேற்ற இன்றே கடைசி நாள்

    13:43 (IST)20 Aug 2020

    முதல்வர் பேச்சு

    நேதாஜி மார்க்கெட் வியாபாரிகள் வேண்டிகோளுக்கு இணங்க புதிய மார்க்கெட் கட்டித்தரப்படும் என்றும், தென்பண்ணை, பாலாறு இணைப்பு திட்டத்திற்கு ரூ. 648 கோடி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர்கள் அலுவலகங்கள் கட்டப்படும் என்று முதல்வர் அறிவிப்பு.

    13:40 (IST)20 Aug 2020

    விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

    உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி தான் அரசு செயல்படும் என்றும் தமிழக அரசு மத்திய பாஜகவின் வழிமுறைகளை செயல்படுத்துகிறது என்றும் முதல்வர் பேச்சு.

    13:04 (IST)20 Aug 2020

    ரஜினிகாந்த் வேண்டுகோள்

    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைந்து உடல்நலம்பெற இன்று மாலை கூட்டுப் பிரார்த்தனை நடைபெற உள்ளது. இதுதொடர்பாக, நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    publive-image

    12:57 (IST)20 Aug 2020

    உயர்நீதிமன்றம் உத்தரவு

    விநாயகர் சிலைகள் வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்க அனுமதி கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இல.கணபதி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். மக்களின் உணர்வை கருத்தில் கொண்டு விநாயகர் சதுர்த்திக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளில் தளர்வு அறிவிக்க வாய்ப்புள்ளதா? என நாளை காலை விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    12:54 (IST)20 Aug 2020

    அரசு அனுமதி மறுப்பது வருத்தம்

    விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு தமிழக அரசு அனுமதி மறுப்பது வருத்தம் அளிக்கிறது. மத்திய அரசின் வழிகாட்டு முறைகளை மாநில அரசு பின்பற்றுகிறதா? . விநாயகர் சதுர்த்தியில் மட்டும் ஏன் பின்பற்ற முயற்சிக்கிறது? என பாஜக மாநில தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

    12:01 (IST)20 Aug 2020

    தமிழக அரசு உத்தரவு

    பள்ளிகள் திறக்கும் வரை மாணவர்களுக்கு உலர் உணவு வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பும் வரை உலர் உணவுத் திட்டத்தை தொடர ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    11:45 (IST)20 Aug 2020

    ராஜீவ்காந்தி பிறந்தநாள் - மோடி வாழ்த்து

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 76வது பிறந்த நாளான இன்று, அவருக்கு  மரியாதை செலுத்துவதாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    11:24 (IST)20 Aug 2020

    அரைக்கம்பத்தில் கட்சிக்கொடி

    திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் திரு. ரகுமான்கான் அவர்கள் மறைவையொட்டி, மூன்று நாட்கள் கழக நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு - திமுக கொடிகளை அரைக்கம்பங்களில் பறக்க விடுக"என்று கட்சித்தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    publive-image

    11:06 (IST)20 Aug 2020

    குறைந்தது தங்கம் விலை

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.656 குறைந்து ரூ.40,672க்கு விற்பனையாகிறது. கிராம் ஒன்றின் விலை ரூ.82 குறைந்து ரூ.5,084க்கு விற்பனையாகிறது.

    11:03 (IST)20 Aug 2020

    ஊராட்சித் தலைவர் அமிர்தம் இன்று தேசியக் கொடியேற்றினார்

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் ‌சுதந்திர தினத்தன்று கொடியேற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஊராட்சிமன்ற தலைவரான அமிர்தம், பட்டியலினத்தவர் என்பதால், அவரை தேசிய கொடியேற்ற விடாமல் ஊராட்சிமன்ற செயலாளர் சசிகுமாரும், துணைத் தலைவரின் கணவர் விஜயகுமார் உள்ளிட்டோர் தடுத்துள்ளனர். சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியேற்ற அனுமதி மறுக்கப்பட்ட பட்டியலின ஊராட்சி தலைவர் அமிர்தம் இன்று தேசியக் கொடியேற்றினார் . ஆட்சியர் மகேஸ்வரி, எஸ்.பி.அரவிந்தன் முன்னிலையில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தேசியக் கொடியேற்றினார் அமிர்தம்.

    publive-image

    10:56 (IST)20 Aug 2020

    விநாயகர் சதுர்த்தி - முதல்வர் வேண்டுகோள்

    விநாயகர் சதுர்த்தியை பொதுமக்கள் வீடுகளிலேயே கொண்டாட வேண்டும், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய, மாநில அரசுகளின் ஆணைகளையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

    10:37 (IST)20 Aug 2020

    முதல்வர் பழனிசாமி பேட்டி

    கொரோனா வைரசை முழுமையாக ஒழிக்க முடியாத நிலையில் இருக்கிறோம். கொரோனா தொற்றை குறைப்பதற்கு தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு கவனமுடன் தளர்வுகளை அறிவித்து வருவதாக வேலூரில் பத்திரிகையாளர்கள சந்தித்த முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    'இட ஒதுக்கீடு விவகாரத்தில், அ.தி.மு.க., அரசு இரட்டை வேடம் போட்டு, குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

    'சந்தையில் விற்பனை செய்யப்படும், 35 மருந்துகள் தரமற்றவை' என, மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

    Tamil Nadu Narendra Modi Edappadi K Palaniswami
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment