Advertisment

Tamil News Today: கட்சிக்கு மட்டும் விஸ்வாசம்; சோனியாவே தலைவர் - லேட்டஸ்ட் நியூஸ் ஹைலைட்ஸ்

Tamil News updates : தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

author-image
WebDesk
New Update
Tamil News Today: கட்சிக்கு மட்டும் விஸ்வாசம்; சோனியாவே தலைவர் - லேட்டஸ்ட் நியூஸ் ஹைலைட்ஸ்

TN Latest News Live

Tamil News Today: தமிழக சட்டசபை தேர்தலுக்கு ஆயத்த பணி மேற்கொள்ள, அ.தி.மு.க.,வினருடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.சேலத்தில் முகாமிட்டுள்ள முதல்வர் பழனிசாமி, அஸ்தம்பட்டி ஆய்வு மாளிகையில், அ.தி.மு.க.,வினருடன் ஆலோசனை நடத்தினார். தொகுதி வாரியாக, ஒன்றிய நிர்வாகிகளிடம் ஆலோசனை நடந்தது.கட்சி நிர்வாகிகளின் செயல்பாடு, வரும் சட்டசபை தேர்தலில், வெற்றிக்கான வியூகம், அதற்கேற்ப பணி மேற்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

Advertisment

நோய் எதிர்ப்பு சக்தி குறித்த ஆய்வில் அசத்தும் சென்னை : ஹேப்பி தானேங்க!

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

தலைநகர் டெல்லியில், போலீசார் நடத்திய, 'என்கவுன்டரில்' ஐ.எஸ்., பயங்கரவாதி ஒருவர் பிடிபட்டார். அவரிடமிருந்து, சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள், துப்பாக்கியை போலீசார் கைப்பற்றினர். அவர், டில்லியில் பயங்கர தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியிருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    22:37 (IST)23 Aug 2020

    அடேங்கப்பா!

    வெப்கேமரா சிக்னலை வைத்தெல்லாம் நான் இருக்கும் கைலாசாவை கண்டுபிடிக்க முடியாது என நித்யானந்தா தெரிவித்துள்ளார்.

    22:10 (IST)23 Aug 2020

    வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

    ஜே.கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சரிதா கொடுத்த புகாரில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்ரமணியம் மீது எஸ்சிஎஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு.

    21:04 (IST)23 Aug 2020

    மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு

    புதுச்சேரியில் மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட கொரோனா வரி மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு

    மதுபானங்களுக்கான கொரோனா வரியை நவம்பர் வரை நீட்டித்து துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவு

    21:04 (IST)23 Aug 2020

    48 மணி நேரமாக சீராக உள்ளது

    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் எஸ்.பி.பி.யின் உடல்நிலை கடந்த 48 மணி நேரமாக சீராக உள்ளது; எல்லோருடைய அன்பிற்கும் பிரார்த்தனைக்கும் நன்றி

    - மகன் சரண்

    20:34 (IST)23 Aug 2020

    பதவி விலகியதாக வெளியான தகவல் தவறானது

    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பதவி விலகியதாக வெளியான தகவல் தவறானது - ரன்தீப் சிங் சுர்ஜேவாலா

    சோனியா காந்தி பதவி விலகியதாக தகவல் வெளியான நிலையில், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுர்ஜேவாலா மறுப்பு

    19:58 (IST)23 Aug 2020

    முதற்கட்டமாக 48 கேமராக்கள்

    திருமங்கலம் நகர்பகுதி முழுவதும் 150 சிசிடிவி கேமராக்களில் முதற்கட்டமாக 48 கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரம் டிஎஸ்பி வினோதினி ஆய்வு செய்துள்ளார்.

    19:45 (IST)23 Aug 2020

    சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்

    கோவை: ஜே. கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் சரிதா சாதி ரீதியாக அவமானப்படுத்தப்பட்டும், கொலை மிரட்டலுக்கும் உள்ளாகி இருக்கிறார்

    ஊராட்சி தலைவர் சரிதாவுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்; சரிதாவை மிரட்டுவோர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

    19:43 (IST)23 Aug 2020

    ‘வெற்றியை பழக்கமாக்கி கொள்வதை தோனி கற்றுக்கொடுத்துள்ளார்’ : அனுஷ்கா

    எம்.எஸ்.தோனி, கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை அனுஷ்காவும் தனது வாழ்த்தை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர், வெற்றிக்கு பின்னரும் மற்றொரு வெற்றி என்பது சாத்தியம் என்ற நம்பிக்கையை தோனி உணர்த்தியுள்ளதாக கூறியுள்ளார்.

    ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகர்களின் கனவையும் தோனி நினைவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ள அவர், தனது ஓய்வு மூலம் எதார்த்தத்தை அனைவருக்கும் உணர்த்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், வெற்றி என்பது தோனியின் தனித்துவமான பழக்கம், ஓய்வு முடிவு வருத்தம் தந்தாலும், இளம் கிரிக்கெட் வீரர்களிடம் தோனி விதைத்திருக்கும் உத்வேகம், அவர்களை சாம்பியன்களாக உயர்த்தும் என நம்புகிறோம். தோனியின் வாழ்கையின் அடுத்து இன்னிங்ஸ் சிறப்பானதாக அமைய வாழ்த்துகள்’ என்று தெரிவித்துள்ளார்.

    19:27 (IST)23 Aug 2020

    மகன்களுடன் தனுஷ்

    தனது மகன்களுடன் தனுஷ் பொழுதை கழிக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     

    When your first born wears your tshirt and argues it’s his ❤ #Yathra #Linga

    A post shared by Dhanush (@dhanushkraja) on

    18:59 (IST)23 Aug 2020

    சோனியாகாந்தியே தலைவர்

    சோனியாகாந்தி கட்சியின் தலைவராக தொடர வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

    18:51 (IST)23 Aug 2020

    6,047 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

    கொரோனாவில் இருந்து இன்று மட்டும் 6,047 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3,19,327 பேர் மீண்டுள்ளனர்.

    18:49 (IST)23 Aug 2020

    பெண்கள் நிர்பந்திக்கப்படுகின்றனரா?

    தண்டனைக் கைதிகளை திருமணம் செய்து கொள்ளும்படி பெண்கள் நிர்பந்திக்கப்படுகின்றனரா? - சென்னை உயர்நீதிமன்றம்

    பெண்ணின் சம்மதம் குறித்து மகளிர் ஆணையம் விசாரிக்கும் வகையில் நடைமுறையை ஏற்படுத்த வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்

    18:14 (IST)23 Aug 2020

    பிற மாவட்டங்களில் 4,677

    சென்னையில் மேலும் 1,298 பேருக்கு கொரோனா பாதிப்பு

    சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,677 பேருக்கு கொரோனா

    18:08 (IST)23 Aug 2020

    5,975 பேருக்கு கொரோனா

    தமிழகத்தில் புதிதாக 5,975 பேருக்கு கொரோனா பாதிப்பு - தமிழக சுகாதார துறை தகவல்

    மொத்த பாதிப்பு 3,79,385 ஆக உயர்வு

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 97 பேர் உயிரிழப்பு

    அரசு மருத்துவமனையில் -21 தனியார் மருத்துவமனையில் - 76

    18:04 (IST)23 Aug 2020

    சொத்து தகராறில் தந்தையை ஓட ஓட விரட்டி கொலை செய்த மகன் உட்பட 5 பேர் கைது!

    மதுரை தெற்குவாசல் பகுதியை சேர்ந்த மணி என்பவர் முதல் மனைவியை விவகாரத்து செய்துவிட்டு 24 வயது பெண்ணை 2வது திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். இதனிடையே சொத்தை பிரித்து கொடுப்பதில் முதல் மனைவிக்கு பிறந்த பிள்ளைகளுக்கும், மணிக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் சொத்து விவகாரத்தில் ஆத்தரமடைந்த முதல் மனைவியின் மகன் கார்த்திகேயன், அவரது நண்பர்களுடன் சேர்ந்து மணியை ஓட ஓட வெட்டிக் கொலை செய்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த காவல்துறை உதவி ஆணையர் சம்பவ இடத்தில் நேரில் விசாரணை நடத்தினார். பின்பு தலைமறைவாக இருந்த கார்த்திகேயன் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    17:35 (IST)23 Aug 2020

    கைலாசா நாட்டிற்கு வர 3 ஊர்களுக்கு முக்கியத்துவம்! - நித்தியானந்தா

    கைலாசாவில் வணிகம் செய்ய மதுரை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்தோருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.

    17:06 (IST)23 Aug 2020

    உலகின் பெஸ்ட் ஆல் ரவுண்டர்

    தென் ஆப்பிரிக்க அணிக்காக 166 டெஸ்ட் போட்டியில் விளையாடி 13,289 ரன்னும், 328 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 11,579 ரன்னும், 250 விக்கெட்டுகளையும் கைப்பற்றி சிறந்த ஆல் ரவுண்டராக விளங்கியவர் ஜாக் காலிஸ்.

    16:48 (IST)23 Aug 2020

    சோனியா காந்தி விலகியதாக தகவல்

    காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பதவியில் இருந்து சோனியா காந்தி விலகியதாக தகவல்

    * காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நாளை நடைபெறும் நிலையில் சோனியா காந்தி பதவி விலகியதாக தகவல்

    16:38 (IST)23 Aug 2020

    விஸ்வாசமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை

    "கட்சியில் எனக்கோ, உயர்மட்டத்தில் உள்ள பொறுப்பாளர்களுக்கோ விஸ்வாசமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை; கட்சிக்கு விஸ்வாசம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

    துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்!

    16:36 (IST)23 Aug 2020

    பிசிசிஐ சரியாக நடத்தவில்லை

    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை பிசிசிஐ சரியாக நடத்தவில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சக்லைன் முஷ்டக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

    16:07 (IST)23 Aug 2020

    5 மாதங்களுக்குப் பிறகு திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி - மத்தி அரசு உத்தரவு

    5 மாதங்களுக்குப் பிறகு திரைப்பட படப்பிடிப்புக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. சினிமா படப்பிடிப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய் அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, குறைந்த அளவு பணியாளர்களைக் கொண்டு படப்பிடிப்பு நடத்த வேண்டும். படப்பிடிப்பு தளத்தில் மாஸ்க் அணிய வேண்டும். அடிக்கடி கைகளை கழுவ வேண்டும், எச்சில் துப்பக்கூடாது போன்ற வழிகாட்டுதல்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.

    15:33 (IST)23 Aug 2020

    மத்திய அரசு இ-பாஸ் தளர்வு அளித்திருப்பது சுகாதார துறையினருக்கு சவாலான விஷயம் - அமைச்சர்

    கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: “கொரோனா வைரஸ் பரிசோதனை முடிவுகளை ஆன்லைன் மூலமும் குறுஞ்செய்தி மூலமும் தெரிவிக்க இன்னும் ஓரிரு வாரங்களில் ஏற்பாடு செய்யப்படும். மத்திய அரசு இ-பாஸ் தளர்வு அளித்திருப்பது சுகாதார துறையினருக்கு சவாலான விஷயம். அனைத்து மாவட்டங்களிலும் ஒரு சித்தா மருத்துவ மையம் ஏற்படுத்தப்படும்” என்று கூறினார்.

    15:22 (IST)23 Aug 2020

    ஐ.சி.சி.யின் ஹால் ஆப் ஃபேம் விருதுக்கு ஜாக் காலிஸ் தேர்வு

    ஐ.சி.சி.யின் ஹால் ஆப் ஃபேம் விருதுக்கு தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஜாக் காலிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி, சார்பில் அதிக ரன்களை குவித்த ஜாக் காலிஸுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

    14:33 (IST)23 Aug 2020

    தமிழகத்தில் வேலையின்மை தேசிய சராசரியை விட இரட்டிப்பாகியுள்ளது - ஸ்டாலின் குற்றச்சாட்டு

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் வேலையின்மை தேசிய சராசரியை விட இரட்டிப்பாகியுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தமிழக அரசின் வெற்று அறிவிப்புகள் இளைஞர்களின் எதிர்காலக் கனவுகளைச் சிதைத்துவிட்டது என்று விமர்சித்துள்ளார். தமிழக அரசின் புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

    13:46 (IST)23 Aug 2020

    பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு

    பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து ஒரு வாரம் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், டாஸ்மாக் ஊழியர்கள் ஆகஸ்ட் 25ம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை 2 மணி நேரம் வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர்.

    13:15 (IST)23 Aug 2020

    தீவிபத்து - பஸ்கள் தீக்கிரை

    சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்தால் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீவிபத்தில் சிக்கி 3 பேருந்துகள் முழுவதும் சேதமடைந்தன. தீ விபத்து காரணமாக பேருந்து நிலைய பகுதிகளில் கரும்புகை கிளம்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    12:52 (IST)23 Aug 2020

    பிளாஸ்மா வங்கி துவக்கம்

    கோவை அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கியை  அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். சேலத்திலும் விரைவில் பிளாஸ்மா வங்கி துவக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    12:21 (IST)23 Aug 2020

    ரூ.21 கோடி அபராதம் வசூல்

    ஊரடங்கு காலத்தில் தமிழகம் முழுவதும் கடந்த 151 நாட்களில் போக்குவரத்து விதிகளை மீறியதாக ரூ.21 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.  151 நாளில் 8,90, 812 வழக்குகள் பதிவு செய்து 9,85,415 பேரை போலீசார் கைது செய்து சொந்த ஜாமீனில் விடுவித்தனர். அவர்களிடம் இருந்து 6,88,660 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

    12:14 (IST)23 Aug 2020

    வெடிகுண்டுகள் பறிமுதல்

    டெல்லியில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். தீவிரவாதி வீட்டில் இருந்து வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தற்கொலை படை தாக்குதல் நடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு ஜாக்கெட்டுகள் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    12:06 (IST)23 Aug 2020

    கனமழைக்கு வாய்ப்பு

    வளிமண்டல சுழற்சி காரணமாக, சேலம், தர்மபுரி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில், கனமழை பெய்யவாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    11:47 (IST)23 Aug 2020

    சினிமா படப்பிடிப்பு துவங்க அனுமதி

    சினிமா படப்பிடிப்பு தொடர்பான மத்திய அரசின் வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. படப்பிடிப்பின் போது நடிகர், நடிகை தவிர அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். உடை, உபகரணங்களை பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    11:21 (IST)23 Aug 2020

    ரூ. 250 கோடிக்கு மது விற்பனை

    தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அனுசரிக்கப்படுவதால், நேற்று ஒரேநாளில், ரூ. 250 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக, மதுரையில் ரூ.52.45 கோடி, திருச்சி-ரூ. 51.27 கோடி, சென்னை-ரூ.50.65 கோட, சேலம்-ரூ.49.3 கோடி, கோவை-ரூ.46.58 கோடி அளவிற்கு மது விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    10:49 (IST)23 Aug 2020

    இ-பாஸ் நடைமுறை ரத்து

    புதுச்சேரியில் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இ-பாஸ் நடைமுறை, ஊரடங்கு தளர்வு நெறிமுறைகளுக்கு முரணானது என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இ-பாஸ் தேவையில்லை என மத்திய அரசு அறிவித்த நிலையில், புதுச்சேரி அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

    10:35 (IST)23 Aug 2020

    மத்திய அரசு கடிதம்

    புதிய கல்விக் கொள்கை குறித்து ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்க மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அனைத்து மாநில பள்ளிக்கல்வி செயலாளர்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. வரும் 31-ம் தேதி வரை ஆசிரியர்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று அக்கடித்ததில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    10:00 (IST)23 Aug 2020

    கொரோனா பாதிப்பு உச்சம்

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 லட்சத்தை கடந்துள்ளது. மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30,44,940 ஆக அதிகரித்துள்ளது. 56,706 பேர் உயிரிழந்துள்ளனர். 22,80,566 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    09:34 (IST)23 Aug 2020

    டோல்கேட் கட்டணம் உயர்கிறது

    தமிழகத்தில் உள்ள 21 டோல்கேட்களில் செப்டம்பர் 1ம் தேதி முதல் கட்டணம் ரூ 10 முதல் 15 வரை அதிகரிக்கப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் தெரிவித்துள்ளது. இது ஆண்டுதோறும் வழக்கமாக மேற்கொள்ளப்படும் நடைமுறைதான் என அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.

    09:29 (IST)23 Aug 2020

    வழக்கறிஞர் தற்கொலை

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சிலாவட்டத்தில், வழக்கறிஞர் செந்தில்நாதன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அடுத்த வாரம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் செந்தில்நாதன் தற்கொலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    09:25 (IST)23 Aug 2020

    தேனி மாவட்டத்தில் மேலும் 149 பேருக்கு கொரோனா

    தேனி மாவட்டத்தில் மேலும் 149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், அம்மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,280ஆக அதிகரித்துள்ளது.

    09:04 (IST)23 Aug 2020

    பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

    தமிழகத்தில், இன்று (ஆக., 23), பெட்ரோல் லிட்டருக்கு 84.52 ரூபாய், டீசல் லிட்டருக்கு 78.86 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று பெட்ரோல் லிட்டருக்கு 12 காசுகள் அதிகரித்து 84.52 ரூபாய்க்கு விற்பனையாகிறது. டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

    08:59 (IST)23 Aug 2020

    தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு

    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் இன்று தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய தினம் மருந்து, பால் கடைகள் மற்றும் மருத்துவமனைகளை தவிர மற்ற நிறுவனங்கள், கடைகள் திறக்க அனுமதியில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேவையின்றி வாகனங்களில் வெளியே வந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    Tamil nadu news today updates : அடுத்த இரண்டு ஆண்டுக்குள், 'கொரோனா' வைரசை முற்றிலுமாக அழித்து விடலாம்' என, உலக சுகாதார அமைப்பின் தலைவர் கூறியுள்ளார்.

    பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலையில், கடந்த சில நாட்களைக் காட்டிலும், சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன

    Tamilnadu Corona Virus Narendra Modi Edappadi K Palaniswami
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment