Tamil News Today :உத்தரப்பிரதேச மாவட்டத்தில் பி: கான்பூரில் டி.எஸ்.பி தேவேந்திர மிஸ்ரா உள்பட 8 போலீசாரை ரவுடிகள் சுட்டுக்கொன்றுள்ளன் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரவுடி விகாஸ் துபேவை பிடிக்க நடந்த தேடுதல் வேட்டையின்போது காவல்துறையினர் 8பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ரவுடிகள் துப்பாக்கியால் சுட்டதில் காவல்துறை தரப்பில் மேலும் சிலர் காயம் அடைந்துள்ளனர்.
டாக்டர்கள், தங்கள் உயிரை பணயம் வைத்து, நம் உயிரை காப்பாற்றுகின்றனர்,” என, பிரதமர் நரேந்திர மோடி, தேசிய டாக்டர்கள் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
சென்னை, சாலிகிராமத்தில் உள்ள, தனித்த சித்தா சிகிச்சை முகாமில், 27 நாட்களில், 514 பேர் நலம் பெற்று, வீடு திரும்பினர். தமிழகத்தில் கொரோனாவால், 93 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Sathankulam Live : சாத்தான்குளம் சம்பவத்தில் அடுத்தடுத்த திருப்பம்… காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது!
பாதிப்பின் தன்மைக்கேற்ப, அவர்களுக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொரோனாவுக்கு தடுப்பு மருந்து இல்லாத நிலையில், அலோபதியில் கூட்டு மருந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அலோபதியுடன், கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் என, சித்த மருத்துவத்துடன் இணைந்த சிகிச்சைக்கும், நல்ல பலன் கிடைத்து வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் கொலைவழக்கில் கைதான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன் ஆகியோரை ஜூலை 16 வரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை குறித்து ஹர்பஜன் சிங் வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவருடைய டுவிட்டர் பக்கத்தில், “செதஞ்ச அந்த பச்சப்புள்ள ஒடம்ப பாத்தாலே பதறுதே. பெத்தவங்க எப்புடி துடிச்சிருப்பாங்க? எப்புடிடா இப்படிலாம் பண்ணுறீங்க! உலகம் அழியப்போகல..அழிச்சுக்கிட்டு இருக்கோம்.நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும் அப்புடின்னு சும்மா சொல்லிட்டுப் போகல.ரொம்ப கஷ்டமா இருக்குயா” என்று வேதனை தெரிவித்துள்ளார்.
செதஞ்ச அந்த பச்சப்புள்ள ஒடம்ப பாத்தாலே பதறுதே. பெத்தவங்க எப்புடி துடிச்சிருப்பாங்க? எப்புடிடா இப்படிலாம் பண்ணுறீங்க! உலகம் அழியப்போகல..அழிச்சுக்கிட்டு இருக்கோம்.நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும் அப்புடின்னு சும்மா சொல்லிட்டுப் போகல.ரொம்ப கஷ்டமா இருக்குயா#JusticeforJayapriya
— Harbhajan Turbanator (@harbhajan_singh) July 2, 2020
அறந்தாங்கியில் சிறுமி பாலியல் வன்கொடுமைக் கொலைக்கு காரணமான குற்றாவாளி கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் பழனிசாமி ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று கொரோனாவில் இருந்து குணமடைந்த 3,095 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 56,021 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் 4,343 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு புதிய உச்சமாக பதிவாகியுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 98,392 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அறந்தாங்கி அருகே ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நெஞ்சை பதறச் செய்கிறது. இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் பழனிசாமி டுவிட்டரில், “புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நெஞ்சை பதறச் செய்கிறது. இக்கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். சிறுமியின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நெய்வேலி என்.எல்.சியில் பாய்லர் வெடித்து உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் விபத்தில் காயமடைந்தோருக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்றும் என்.எல்.சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
யு.ஜி.சி. அனுமதி தராததால் 2018 -19 ஆம் கல்வியாண்டில் பி.எட். சேர்ந்த மாணவர்களின் சேர்க்கை ரத்து செய்யப்படுகிறது என்று தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கல்விக் கட்டணம் திருப்பித் தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏழ்மையான மாணவர்கள் சட்டப்படிப்பை முடித்துவிட்டு வழக்கறிஞர்களாக பணியாற்ற 3 ஆண்டுகள் தேவைப்படுவதால், வறுமையில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.3,000 நிதி உதவி வழங்குவதற்கு முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ குமரகுரு, பரமக்குடி எம்.எல்.ஏ சதன் பிரபாகர் இருவரையும் தமிழக முதல்வர் பழனிசாமி தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். இது குறித்து முதல்வர் பழனிசாமி டுவிட்டரில் குறிப்பிடுகையில், “உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு அவர்கள் மற்றும் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகர் ஆகியோர் கொரோனா தொற்றுக்குள்ளாகிய செய்தி அறிந்து அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தேன். அவர்கள் விரைவில் பூரண நலம் பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (1.7.2020) NLC விபத்து பற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விசாரித்த போது , மாநில அரசு சார்பாக செய்ய வேண்டிய உதவிகளை செய்து வருகிறோம். மேலும், விபத்தில் இறந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் மத்திய அரசு சார்பில் தேவையான நிதியுதவியை வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை வைத்ததக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். .
மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை உடனடியாக விசாரிக்க உத்தரவிடக்கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு புதிய மனுவை தாக்கல் செய்தது.
குறிப்பிட்ட 109 இணையான பயணப்பாதைகளில் பயணிகள் ரயில் சேவையை மேற்கொள்ள தனியார் பங்கேற்பிற்கு ரயில்வே அமைச்சகம் தகுதிக்கான கோரிக்கைகளை மத்திய அரசு வரவேற்றுள்ளது. இத்திட்டத்தின் மூலம் சுமார் ரூ.30,000 கோடி தனியார் துறை முதலீடு பெறப்படும் என்று தெரிவிக்கக்பட்டது. குறைந்த பராமரிப்பு தேவைப்படுகின்ற, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய, குறைந்த பயண நேரம் பிடிக்கின்ற, வேலைவாய்ப்பினை அதிகரிக்கின்ற, கூடுதலான பாதுகாப்பை வழங்குகின்ற, உலகத் தரத்திலான பயண வசதியை வழங்குகின்ற வண்டிகளை அறிமுகப்படுத்துவதே இந்த முன்முயற்சியின் நோக்கமாகும்.
மத்தியப்பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங்செளகான் தலைமையிலான அரசின் அமைச்சரவை 2-ஆவது முறையாக இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது . புதிதாக இன்று 28 அமைச்சர்கள் பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சேவையை 4-ஜி-க்கு தரம் உயர்த்தும் ஒப்பந்தப்புள்ளி ரத்து. சுய சார்பு இந்தியா திட்டத்தின்கீழ், உள்நாட்டு பொருட்களை பயன்படுத்தும் வகையில், புதிய ஒப்பந்தப்புள்ளி கோரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
மதுரை ஊமச்சிக்குளம் பகுதியில் வாழ்ந்து வந்த மதுரை பாஜக இளைஞரணி நிர்வாகி சங்கரபாண்டியனை, தாக்க முயன்ற வழக்கில், மதுரை கிழக்குச் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ மூர்த்திக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது. மேலும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு ரூ.50 ஆயிரம் வழங்கவும் உத்தரவு பிறப்பித்தது.
மியான்மர் நாட்டில் பச்சை மரகதக்கல் வெட்டி எடுக்கும் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 50 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
மியான்மர் நாட்டில் பச்சை மரகதக்கல் வெட்டி எடுக்கும் சுரங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இந்த சுரங்கத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் அங்கு வேலைப்பார்த்து வந்த 50 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
போலியான முகவரியில் குழப்பம் ஏற்படுவதால், இனி கொரோனா பரிசோதனைக்கு ஆதார் அட்டையை காண்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறியோடு சளி மாதிரி சோதனைக்கு வரும் சிலர் தொடர் சிகிச்சை, தனிமைப்படுத்தலுக்கு பயந்து போலியான முகவரிகளை கொடுத்துள்ளனர். அப்படி போலியான முகவரி, செல்போன் எண் கொடுத்த இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களை காவல் துறையின் உதவியோடு தேடி வருகின்றனர்.
பரமக்குடி அதிமுக எம்எல்ஏ சதன் பிரபாகர் மற்றும் அவரது உதவியாளருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயர்கல்வித்துறை அமைச்சர் கே பி அன்பழகன், கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை மக்கள் வீடியோ கால்மூலம் குறைகளை கூற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக புதிய போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். அத்தியாவசியம் இல்லாமல் வீட்டை விட்டு மக்கள் வெளியே வரக் கூடாது என்று மக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்
இதுவரை சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்.#Covid19Chennai #GCC #Chennai#chennaicorporation pic.twitter.com/91afv4j3i8
— Greater Chennai Corporation (@chennaicorp) July 2, 2020
சென்னையில் இன்று (ஜூலை 02), பெட்ரோல் லிட்டருக்கு 83.63 ரூபாய், டீசல் லிட்டருக்கு 77.72 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.கடந்த 3 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் செய்யப்படாத நிலையில், 4வது நாளாக இன்றும், விலையில் மாற்றமின்றி, அதே விலையிலேயே பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் நாளுக்குள் நாள் கொரோனா அதிகரித்து வருகிறது. இந்நிலையில் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்றவற்றின் முக்கியத்துவத்தை பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கொரோனா விழிப்புணர்வு மற்றும் உதவி எண்கள் அடங்கிய சுவரொட்டி, சென்னையின், அனைத்து மண்டலங்களில் உள்ள வீடுகளின் முன்பும் ஒட்டுவதற்கு சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதில் மண்டல வாரியாக அவசரகால உதவி எண்கள் மற்றும் ரிப்பன் மாளிகையின் கட்டுப்பாட்டு அறை உதவி எண்களும் இடம் பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பு கருதி, 'டிக்டாக், ஷேர்இட், ஹலோ' உள்ளிட்ட, சீன நிறுவனங்களின், 59 மொபைல் போன், 'அப்ளிகேஷன்ஸ்' என்ற செயலிகளுக்கு இந்தியா விதித்துள்ள தடைக்கு, அமெரிக்காவில் ஆதரவு அதிகரித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights