Advertisment

இன்றைய செய்திகள்: ஊரடங்கு உத்தரவு - மார்ச்.22 ரயில் சேவைகளில் மாற்றம், பயணிகள் ரயில் இயங்காது

Tamil nadu news today updates : தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இன்றைய செய்திகள்: ஊரடங்கு உத்தரவு - மார்ச்.22 ரயில் சேவைகளில் மாற்றம், பயணிகள் ரயில் இயங்காது

Tamil nadu news today updates : தொற்று நோயாகிய, 'கொரோனா' வைரஸ் என்ற, 'மஹா மாரி'யை விரட்ட, வரும், 22ம் தேதி, நாடு முழுவதும், 'மக்கள் ஊரடங்கு' நடத்த, பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ''அன்று காலை, 7:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை, வீட்டை விட்டு யாரும் வெளியே வராமல் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்,'' என, பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

தமிழகத்தில், வார சந்தைகள், பெரிய ஜவுளி கடைகள், நகை கடைகள் போன்றவை, இன்று முதல், 31ம் தேதி வரை மூடப்படும்; பக்தர்கள் அதிகம் வரும் கோவில்களில், தரிசனம் நிறுத்தப்படும்' என, முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    22:53 (IST)20 Mar 2020

    கொரோனா 236ஆக உயர்வு

    இந்தியாவில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 236-ஆக அதிகரித்துள்ளது. மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் பகுதியில் இருந்து நான்கு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

    22:21 (IST)20 Mar 2020

    ரயில் சேவைகளில் மாற்றம்

    22-03-2020 (ஞாயிற்றுக்கிழமை) அன்று ரயில் சேவைகளில் மாற்றம்

    ஜனதா ஊரடங்கு உத்தரவின் போது ரயில் பயணத்திற்கான தேவை மிகவும் குறையும் என்ற உண்மையை கருத்தில் கொண்டு, அதாவது 22-03-2020 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 07:00 மணி முதல் மாலை 09:00 மணி வரை ரயில் சேவைகளைப் பொறுத்தவரை பின்வரும் மாற்றங்கள் அறிவுறுத்தப்படுகின்றன:

    1. பயணிகள் ரயில் சேவைகள்:

    21/22-03-2020 நள்ளிரவு 00:00 மணி முதல் 22-03-2020 அன்று இரவு 22:00 மணி வரை அனைத்து பயணிகள் ரயில்களும் இயக்கப்படாது.

    2. மெயில் / எக்ஸ்பிரஸ் மற்றும் இன்டர்சிட்டி ரயில்கள்:

    22-03-2020 அன்று 04:00 மணி முதல் 22:00 மணி வரை இயக்கப்படும் நீண்ட தூர மெயில் / எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் இன்டர்சிட்டி ரயில்கள் பெரிய அளவில் ரத்து செய்யப்படும்.

    3. புறநகர் ரயில் சேவைகள்:

    சென்னை பிராந்தியத்தில் 22-03-2020 (ஞாயிற்றுக்கிழமை) அன்று அத்தியாவசிய பயணத் தேவைகளைப் பூர்த்தி செய்ய புறநகர் ரயில் சேவைகள் குறைந்தபட்சமாக மட்டுமே குறைக்கப்படும்

    - தெற்கு ரயில்வே

    22:05 (IST)20 Mar 2020

    பெட்ரோல் பங்குகள் குறைந்த அளவு ஊழியர்களுடன் இயங்கும்

    தமிழகம் முழுவதும் வரும் 22ம் தேதி பெட்ரோல் பங்குகள் குறைந்த அளவு ஊழியர்களுடன் இயங்கும் - தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர் சங்க தலைவர் தகவல்.

    21:53 (IST)20 Mar 2020

    அடுத்த நான்கு வாரங்களில் மிகவும் முக்கியமான நடவடிக்கை ‘சமூக விலகல்’

    கொரோனா பரவலைத் தடுக்கும் முயற்சியில் அடுத்த நான்கு வாரங்களில் மிகவும் முக்கியமான நடவடிக்கை ‘சமூக விலகல்’

    'சமூக விலகல்' நடவடிக்கை பின்பற்றப்படுவதை மாநில முதலமைச்சர்கள் உறுதி செய்ய வேண்டும்

    - முதல்வர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தல்

    21:12 (IST)20 Mar 2020

    பரிசோதனை மையம் 7

    தமிழகத்தில் கொரோனா பரிசோதனை மையம் 7ஆக உயர்த்தப்பட்டுள்ளது

    ஏற்கனவே சென்னை, நெல்லை, திருவாரூர், தேனி, சேலத்தில் கொரோனா பரிசோதனை மையம் உள்ளது

    மேலும் 2 இடங்களில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி

    - அமைச்சர் விஜயபாஸ்கர்

    20:25 (IST)20 Mar 2020

    கொரோனா பாதிப்பு - பிரதமர் உத்தரவின் பெயரில் முதல்வரின் 9 அம்ச நடவடிக்கைகள்

    கொரோனா பாதிப்பை அடுத்து, பிரதமர் உத்தரவின் பெயரில் முதல்வரின் 9 அம்ச நடவடிக்கைகள்

    19:58 (IST)20 Mar 2020

    எண்ணிக்கை 223ஆக உயர்வு

    இந்தியாவில் கொரோனா-வால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 223ஆக உயர்ந்துள்ளது. 

    19:43 (IST)20 Mar 2020

    மாநில எல்லைகள் மூடல்

    கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கான எல்லைகள் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு

    19:43 (IST)20 Mar 2020

    பயணிகள் ரயில் இயங்காது

    நாளை நள்ளிரவு 12 மணி முதல் ஞாயிறு இரவு 10 மணி வரை பயணிகள் ரயில் இயங்காது. மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஞாயிறன்று அதிகாலை 4 மணி முதல் நிறுத்தப்படும்

    - பிடிஐ தகவல்

    19:41 (IST)20 Mar 2020

    வெளிமாநில வாகனங்கள் தமிழகம் வரத் தடை

    நாளை முதல் மார்ச் 31ஆம் தேதி வரை வெளிமாநில வாகனங்கள் தமிழகம் வரத் தடை

    கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநில எல்லைகள் மூடல்

    - தமிழக அரசு

    19:40 (IST)20 Mar 2020

    வெளிமாநில பக்தர்களுக்கு அனுமதியில்லை

    கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகூர் தர்காவில் மார்ச் 31ஆம் தேதி வரை வெளியூர், வெளிமாநில பக்தர்களுக்கு அனுமதியில்லை

    - தர்கா நிர்வாகம்

    19:24 (IST)20 Mar 2020

    12 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

    கேரளாவில் மேலும் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி. மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

    18:52 (IST)20 Mar 2020

    ராணுவத்திற்கு ஆட்கள் சேர்ப்பு முகாம் நடக்கும் தேதி தள்ளிவைப்பு

    கொரோனா எதிரொலி : தமிழகத்தில் ராணுவத்திற்கு ஆட்கள் சேர்ப்பு முகாம் நடக்கும் தேதி தள்ளிவைப்பு என மத்திய அரசு அறிவிப்பு.

    18:52 (IST)20 Mar 2020

    ஆளுநர் பன்வாரிலால் மக்களுக்கு வேண்டுகோள்

    பிரதமர் மோடி கூறிய அறிவுரைகளை பின்பற்றி கொரோனா பரவலைத் தடுக்க, ஒத்துழைப்பு தருமாறு தமிழக ஆளுநர் பன்வாரிலால் மக்களுக்கு வேண்டுகோள்

    18:18 (IST)20 Mar 2020

    மகனுக்கு கொரோனா - பெண் அதிகாரி சஸ்பெண்ட்

    வெளிநாட்டிலிருந்து வந்த தன்னுடைய மகனுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியான பிறகும் அதனை மருத்துவ அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் மறைத்த ரயில்வே பெண் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    18:07 (IST)20 Mar 2020

    வங்கிக் கடன் - மத்திய அரசு பரிசீலனை

    கொரோனா பாதிப்பு எதிரொலியாக சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் வங்கிக் கடனை திரும்ப செலுத்த அவகாசம் வழங்க மத்திய அரசு பரிசீலனை

    17:46 (IST)20 Mar 2020

    வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை தேவை

    "வருவாய் இழக்கும் முறைசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை தேவை" - மக்களவையில் தி.மு.க எம்.பி கனிமொழி கோரிக்கை

    17:46 (IST)20 Mar 2020

    மாதம் ரூ.15 ஆயிரம்

    கொரோனா பாதிப்பு நீங்கும் வரை அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும், மாதம் ரூ.15 ஆயிரம் வழங்க உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

    17:11 (IST)20 Mar 2020

    1.98 லட்சம் பேருக்கு கொரோனா சோதனை...

    தமிழகத்தில் 1.98 லட்சம் பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

    17:10 (IST)20 Mar 2020

    மெட்ரோ ரயில் சேவை ரத்து

    கொரோனாவை தடுக்க பிரதமர் மோடி ஞாயிறன்று சுயஊரடங்கு அறிவித்துள்ளதால் மார்ச் 22ஆம் தேதி சென்னையில் மெட்ரோ ரயில் சேவை ரத்து - மெட்ரோ நிர்வாகம் 

    16:43 (IST)20 Mar 2020

    7பேர் விடுதலை செய்யப்பட வேண்டுமென்பதே அனைவரது ஆசை

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7பேர் விடுதலை செய்யப்பட வேண்டுமென்பதே அனைவரது ஆசை.

    ஜெயின்கமிஷன் விசாரணையில் சதி திட்டங்களை ஆராய பல்வேறு புலனாய்வு அமைப்புகளை உள்ளடக்கிய MDMA அமைப்பு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

    MDMA அறிக்கையை பொருத்து முடிவெடுக்கப்படும் என ஆளுநர் செயலகம் கூறியுள்ளது.

    சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தகவல்

    16:42 (IST)20 Mar 2020

    கலவரத்தின் போது உயிரிழந்தவர்கள் எத்தனை பேர்?

    பிப்ரவரி 24ஆம் தேதி தில்லியில் நடைபெற்ற கலவரத்தின் போது உயிரிழந்தவர்கள் எத்தனை பேர்?

    காயமடைந்தவர்கள், உடல் உறுப்பை இழந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?"

    - மாநிலங்களவையில் திரு. திருச்சி சிவா MP அவர்கள் கேள்வி.

    16:40 (IST)20 Mar 2020

    எண்ணிக்கை 206ஆக உயர்வு

    இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 206ஆக உயர்வு

    6,700க்கு மேற்பட்டோர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்

    இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்த 4 பேரும் 64 வயதுக்கு மேல் ஆனவர்கள்

    - சுகாதாரத்துறை அமைச்சகம்

    16:39 (IST)20 Mar 2020

    பிரதமர் மோடி - முதல்வர் பழனிசாமி ஆலோசனை

    கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

    காணொலி மூலம் நடைபெறும் ஆலோசனையில் முதல்வர் பழனிசாமி பங்கேற்பு

    16:39 (IST)20 Mar 2020

    மோடியின் அறிவிப்புக்கு மம்தா பானர்ஜி வரவேற்பு

    நாளை மறுநாள் சுயஊரடங்கு அறிவித்த பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வரவேற்பு

    16:07 (IST)20 Mar 2020

    வெடி விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

    விருதுநகர் : சாத்தூர் அருகே சிப்பிப்பாறையில் தனியார் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் உயிரிழப்பு - 2 பேர் படுகாயம்

    16:07 (IST)20 Mar 2020

    ஹீலர் பாஸ்கருக்கு ஏப்ரல் 3 வரை நீதிமன்றக்காவல்

    கொரோனா குறித்து மக்களிடையே வதந்தி பரப்பியதாக கைது செய்யப்பட்ட ஹீலர் பாஸ்கருக்கு ஏப்ரல் 3ஆம் தேதி வரை நீதிமன்றக்காவல் - கோவை நீதிமன்றம்

    15:58 (IST)20 Mar 2020

    சிஏஏ எதிர்ப்பு போராட்டம் - 200 பேர் மீது வழக்குப் பதிவு

    திருவாரூர்: அடியக்கமங்கலத்தில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தை தொடர்ந்த 200 பேர் மீது வழக்குப் பதிவு

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அரசு அறிவுறுத்திய பின்னரும் போராட்டத்தை தொடர்ந்ததால் நடவடிக்கை

    15:50 (IST)20 Mar 2020

    482 புள்ளிகள் உயர்ந்து 8,745ல் வர்த்தகமானது

    மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1,627 புள்ளிகள் உயர்ந்து 29,915இல் வணிகமானது

    தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 482 புள்ளிகள் உயர்ந்து 8,745ல் வர்த்தகமானது.

    15:41 (IST)20 Mar 2020

    ஹீலர் பாஸ்கர் கைது

    கொரோனா வைரஸ் குறித்து வதந்திகளை பரப்பியதாக ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    15:32 (IST)20 Mar 2020

    மத்திய அரசு அனுமதி

    சேலத்தில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி

    சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா மையம் செயல்படும்

    - அமைச்சர் விஜயபாஸ்கர்

    15:18 (IST)20 Mar 2020

    போராட்டங்கள், பேரணிக்கு அனுமதி அளிக்க கூடாது

    கொரோனா வைரஸ் பரவுவதை அடுத்து ஏப்ரல் 21 வரை போராட்டங்கள், பேரணிக்கு அனுமதி அளிக்க கூடாது - தமிழக அரசு, காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

    குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை தடுக்க கோரிய வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு

    வழக்கு விசாரணை ஏப்ரல் 21-க்கு ஒத்திவைப்பு.

    15:17 (IST)20 Mar 2020

    தமிழக அரசு அனுப்பிய கடிதத்திற்கு பதில் வ‌ந்துள்ளது

    7 பேர் விடுதலை தீர்மானம் குறித்து ஆளுநரின் செயலருக்கு, தமிழக அரசு அனுப்பிய கடிதத்திற்கு பதில் வ‌ந்துள்ளது. ஜெயின் கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் செயலகம் விளக்கம் அளித்துள்ளது - அமைச்சர் சி.வி.சண்முகம்

    14:46 (IST)20 Mar 2020

    ரஜினி, அஜித், விஜய்யை அழைக்கும் கமல்ஹாசன்

    கொரோனா பரவுதலைத் தடுக்கும் விதமாக பிரதமர் மோடி அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவுக்கு (மார்ச் 22) ஆதரவு தெரிவிக்குமாறு ரஜினி, அஜித், விஜய், தனுஷ், சிம்பு உள்ளிட்ட பிரபலங்களுக்கு கமல்ஹாசன் ட்விட்டர் வாயிலாக அழைப்பு விடுத்துள்ளார்.

    14:25 (IST)20 Mar 2020

    பிரதமர் மோடியின் சுய ஊரடங்கு உத்தரவு - கமல்ஹாசன் ஆதரவு

    கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து 22ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஊரடங்கு நிலையை அனுசரிக்க பிரதமர்மோடி தலைமையிலான மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். தனது ரசிகர்கள், ம்ககள் இந்த திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    14:13 (IST)20 Mar 2020

    சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    22ம் தேதி சுய ஊரடங்கை முன்னிட்டு, சாலையோரம் வசிக்கும் மக்களை சமூக நல கூடங்களில் தங்க அனுமதிக்க வேண்டும். உணவும் வழங்க வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    13:28 (IST)20 Mar 2020

    தமிழகத்தில் 22ம் தேதி ஓட்டல்கள் இயங்காது

    கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து 22ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஊரடங்கு நிலையை அனுசரிக்க மத்திய அரசு உத்தரவிட்டிருப்பதால், அன்றைய தினம் தமிழகத்தில் உணவகங்கள் எதுவும் இயங்காது என்று தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

    12:53 (IST)20 Mar 2020

    சென்னை பிரஸ் கிளப்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நிறுத்திவைப்பு

    கொரோனா நோய்ப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக , 2020 மார்ச் 21-ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி வரை சென்னை பத்திரிகையாளர்* மன்றத்தில் செய்தியாளர் சந்திப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சென்னை பத்திரிகையாளர் மன்ற இணை செயலாளர் பாரதி தமிழன் தெரிவித்துள்ளார்.

    12:41 (IST)20 Mar 2020

    மத்திய பிரதேச முதல்வர் பதவியிலிருந்து கமல்நாத் ராஜினாமா

    மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் - ஜோதிர் ஆதித்ய சிந்தியா இடையே நிகழ்ந்து வந்த பனிப்போர் தீவிரமான நிலையில், சிந்தியா, மோடியை சந்தித்த நிலையில், அமித் ஷா முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். இதன்காரணமாக, சட்டசபையில் பெரும்பான்மையை இழந்தது கமல்நாத் அரசு. சட்டசபையில் பெரும்பான்மையை நிருபிக்க, முன்னாள் முதல்வர் சிவராஜ் சவுகான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்த நிலையில், இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், கமல்நாத், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    12:35 (IST)20 Mar 2020

    7 புதிய கலை, அறிவியல் கல்லுாரிகள் துவங்கப்படும் - முதல்வர் பழனிசாமி

    உயர்கல்வித்துறை சார்பில், 7 புதிய கலை, அறிவியல் கல்லுாரிகள் துவங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி சட்டசபையில் தெரிவித்துள்ளார். 110 விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளதாவது, 3500 நகரும் நியாய விலை கடைகள் அமைக்கப்படும்.181 அம்மா சிறப்பு அங்காடிகள் புதிதாக துவங்கப்படும் என்று தெரிவித்தார்.

    12:13 (IST)20 Mar 2020

    கொரோனா தடுப்பு நடவடிக்கை – தலைமைச்செயலாளர் தலைமையில் சிறப்புக்குழு

    கொரோனா விவகாரத்தில், தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக, தலைமைச்செயலாளர் தலைமையில் சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி சட்டசபையில் தெரிவித்துள்ளார்.

    12:10 (IST)20 Mar 2020

    கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு தடை

    கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கேரளாவில் இருந்து வரும் அனைத்து விதமான வாகனங்களுக்கும் தடை விதித்து கோவை மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    11:51 (IST)20 Mar 2020

    கொரோனா பீதி - கோலி தம்பதி அறிவுரை

    நாடெங்கும் கொரோனா அச்சம் நிலவிவரும் நிலையில், மக்கள் பாதுகாப்பாக தத்தமது வீடுகளில் இருக்குமாறு கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகையும் அவரது மனைவியுமான அனுஷ்கா சர்மா கேட்டுக்கொண்டுள்ளனர்.

    11:45 (IST)20 Mar 2020

    கொரோனா பீதி - மலேசிய விமானநிலையத்தில் தமிழர்கள் தவிப்பு

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால், மலேசியாவிற்கு பணி மற்றும் சுற்றுலா நிமித்தமாக சென்றிருந்த 200 தமிழர்கள், இந்தியா திரும்ப முடியாமல், கோலாலம்பூர் விமானநிலையத்தில் தவித்து வருகின்றனர்.

    11:40 (IST)20 Mar 2020

    தமிழகத்தில் 22ம் தேதி பால் விநியோகம் நிறுத்தம்

    கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து 22ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஊரடங்கு நிலையை அனுசரிக்க மத்திய அரசு உத்தரவிட்டிருப்பதால், அன்றைய தினம் தமிழகத்தில்  பால் விநியோகம் இருக்காது என்று தனியார் பால் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

    11:15 (IST)20 Mar 2020

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு 206 ஆக உயர்வு

    இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 206 ஆக அதிகரித்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

    11:06 (IST)20 Mar 2020

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.31,272 என்ற அளவில் விற்பனையாகிறது. கிராம் ஒன்றுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.3,909 என்ற அளவில் உள்ளது.

    10:46 (IST)20 Mar 2020

    டியூசன் எடுக்கும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் டியூசன் எடுக்கும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    10:21 (IST)20 Mar 2020

    கொரோனா எதிரொலி - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய ஆலோசனை

    கொரோனாவின் தாக்கத்தால், பொருளாதாரத்தில் ஏற்பட்ட தேக்கம் தொடர்பாக, பல்வேறு அமைப்பினருடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.

    10:16 (IST)20 Mar 2020

    மக்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்த முதல்வர் பழனிசாமி

    கொரோனா பீதி அதிகரித்து வரும் நிலையில், முதல்வர் பழனிசாமி, தானாக முன்வந்து கொரோனா சோதனை மற்றும் கைகளை சானிடைசர் வைத்து சுத்தம் கழுவிய வீடியோவை, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    10:04 (IST)20 Mar 2020

    பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

    சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.72.28 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.65.71ஆகவும் உள்ளது. தொடர்ந்து 5வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி தொடர்வது குறிப்பிடத்தக்கது.

    10:03 (IST)20 Mar 2020

    மக்கள் ஒத்துழைப்பு வழங்க சென்னை கமிஷனர் வேண்டுகோள்

    கொரோனா தொடர்பாக அரசு எடுக்கும் நடவடிக்கைகளை கடைபிடித்து நடக்க வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    Tamil nadu news today updates : கொரோனா' தடுப்பு நடவடிக்கைகளில், தமிழக அரசு சிறப்பாக செயல்படுவதாக, நடிகர் ரஜினி, டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு, உதவித்தொகை வழங்க, வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து, டுவிட்டர் பதிவில், ரஜினி கூறிஇருப்பதாவது: தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மிகவும் பாராட்டத்தக்கவை. அரசோடு, மக்களாகிய நாமும் இணைந்து, இந்த கொடிய வைரஸ் பரவாமல் தடுக்க ஒத்துழைப்போம். இந்த இக்கட்டான சூழலில், அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அரசு உதவித் தொகை தந்தால், அது பேருதவியாக இருக்கும் என்பது, என் தாழ்மையான வேண்டுகோள்.இவ்வாறு, ரஜினி கூறியுள்ளார்.'.

    எந்த ரேஷன் கடையிலும், பொருட்கள் வாங்கும் திட்டம், துாத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில், சோதனை அடிப்படையில், ஒரு மாதம் செயல்பாட்டில் இருந்தது. இந்த திட்டத்தில், 9,000 பேர், வேறு ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கி பயனடைந்தனர்.இதில், எந்த நடைமுறை சிக்கல்களும் இல்லை. இதனால், ஏப்., 1 முதல், இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன் பின், எந்த ரேஷன் கடைகளிலும், பொது மக்கள் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.

    Tamil Nadu Coronavirus Narendra Modi
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment