Advertisment

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: ஏப்ரல் 25-ல் தேர்தல்

TN : தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள் 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sri Lankan presidential election, Gotabaya Rajapaksa,President Maithripala Sirisena, இலங்கை ஜனாதிபதி தேர்தல், கோத்தபய ராஜபக்சே, மைத்ரிபால சிறிசேன, இலங்கை - சீனா, Mahinda Rajapaksa, presidential election of Srilanka,Maithripala Sirisena, Srilanka - China relationship

Srilanka parlimanet Dissolved ,

கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ஷ வெற்றி பெற்றார். ஐக்கிய தேசிய முன்னணி  கூட்டணி கட்சிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்த போதிலும், அதிபர் தேர்தலின் முடிவால்  பிரதமர் பதவியை ராஜனாமா செய்தார்  ரணில். நாட்டின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டார்.  கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் இடைக்கால அரசு நடைபெற்று வந்தது. இடைக்கால பிரதமாராக மஹிந்த ராஜபக்ஷே நியமிக்கப்பட்டார்.  2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கூட்டப்பட்ட இலங்கை பாராளுமன்றம், வரும்  ஆகஸ்ட் மாதம் வரை செயல்படலாம். இருப்பினும், முன் கூட்டியே தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  அதன்படி, இலங்கை பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரப்பூர்வ உத்தரவை கோத்தபய ராஜபக்ஷ அறிவித்தார். மேலும், இலங்கை பாராளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"  

இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

யானைகள் ஏன் கும்கிகள் ஆக்கப்படுகிறது என்பது தொடர்பான விளக்க உரை வீடியோ வடிவில்...

ராஜ்யசபா வேட்பாளர்கள்

வருகின்ற மார்ச் 26ம் தேதி நடைபெற இருக்கும் ராஜ்யசபா தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது திமுக. திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ் மற்றும் என்.ஆர் இளங்கோ ஆகியோர் திமுக சார்பில் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். இது தொடர்பான முழுமையான தகவல்களைப் படிக்க

Live Blog

Tamil Nadu news today updates : இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வழங்கும் இன்றைய செய்திகள் பிரிவிற்கு உங்களை வரவேற்கின்றோம்.



























Highlights

    22:26 (IST)02 Mar 2020

    வெறுப்பை கைவிடுங்கள்

    ‘வெறுப்பை கைவிடுங்கள்’

    - சமூக வலைதளங்களில் இருந்து வெளியேற யோசித்து வருவதாக ட்வீட் செய்த பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி பதில்

    21:48 (IST)02 Mar 2020

    இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு

    இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் கோத்தபய ராஜபக்ஷே அறிவித்துள்ளார். இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 25ம் தேதி நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    21:42 (IST)02 Mar 2020

    பிரதமர் மோடி முடிவு

    சமூக வலைதளங்களில் இருந்து விலக பிரதமர் மோடி முடிவு

    சமூக வலைதளங்களில் இருந்து விலகுவது குறித்து யோசித்து வருவதாக பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.

    21:40 (IST)02 Mar 2020

    மத்திய தொல்லியல்துறை முடிவு எனத் தகவல்

    தமிழகத்தில் பழமையான கோயில்களை கட்டுப்பாட்டில் எடுக்க மத்திய தொல்லியல்துறை முடிவு எனத் தகவல்

    தொல்லியல்துறை முடிவு குறித்து மத்திய கலாசாரத்துறை அமைச்சர் மக்களவையில் விளக்கம் அளிக்கக்கோரி ரவிக்குமார் எம்.பி கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ்

    20:57 (IST)02 Mar 2020

    மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

    நாமக்கலில் பாலசுப்பிரமணியன் என்பவரை கடத்தி கொலை செய்த வழக்கில், தொடர்புடைய 4 பேருக்கும் ஆயுள்தண்டனை விதித்து நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு.

    20:39 (IST)02 Mar 2020

    பாஜக எடுத்துவரும் நடவடிக்கை பற்றி முதல்வரிடம் பேசினேன்

    குடியுரிமை திருத்தச் சட்டத்திற்காக பாஜக எடுத்துவரும் நடவடிக்கை பற்றி முதல்வரிடம் பேசினேன். தற்போதைய அரசியல் சூழல் குறித்தும் முதல்வருடன் விவாதித்தேன்.

    - முரளிதர ராவ் 

    20:39 (IST)02 Mar 2020

    திருச்சியில் கொரோனா?

    திருச்சியில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக கூறுவது முற்றிலும் வதந்தி

    - தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி புதிய தலைமுறைக்கு தகவல்

    20:25 (IST)02 Mar 2020

    போக்சோ சட்டத்தில் கைது

    ஈரோடு : முகநூலில் சிறார் ஆபாச படங்களை வெளியிட்டதாக உணவக உரிமையாளர் யோகேஸ்வரன்(35) போக்சோ சட்டத்தில் கைது

    20:24 (IST)02 Mar 2020

    தலைமை ஆசிரியை மீதான வழக்கு

    கிருஷ்ணகிரியில் ஆரம்பப்பள்ளி மாணவர்களை பள்ளி வளாகத்தை சுத்தப்படுத்தச் செய்த தலைமை ஆசிரியை மீதான வழக்கு

    பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் 2 வாரங்களில் அறிக்கை அளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

    20:18 (IST)02 Mar 2020

    விஜய்க்கு லோகேஷ் கனகராஜ் நன்றி

    இது ஒரு இமாலய வேலை; நம்பியதற்காக நன்றி என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவரது ட்விட்டர் பக்கத்தில் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    19:49 (IST)02 Mar 2020

    கொரோனா பாதிப்பு உறுதி

    இந்தியாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தாலியில் இருந்து ஜெய்பூர் வந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

    19:41 (IST)02 Mar 2020

    முதல்வர் பழனிசாமியுடன் முரளிதர ராவ் சந்திப்பு

    முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் சந்தித்து பேசினார். சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முரளிதர ராவ் சந்தித்து பேசினார். மாநிலங்களவைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் எடப்பாடியை முரளிதர ராவ் சந்தித்து பேசுவது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    19:11 (IST)02 Mar 2020

    அமித்ஷாவை சந்தித்த அமைச்சர்கள்

    டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக அமைச்சர் ஜெயக்குமார், தங்கமணி ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர். 

    19:03 (IST)02 Mar 2020

    மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

    அஞ்செட்டி தாலுகாவில் பள்ளிக்கூடத்தையும், பள்ளிக்கூட கழிவறையையும் மாணவர்களை கைகளால் சுத்தம் செய்ய வைப்பதாக எழுந்த புகார் குறித்து 2 வாரத்திற்குள் பதிலளிக்குமாறு பள்ளி கல்வி இயக்குநருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    19:02 (IST)02 Mar 2020

    5 நாட்கள் போலீஸ் காவல்

    டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரம் : ஜெயக்குமார், ஓம்காந்தனுக்கு 5 நாட்கள் போலீஸ் காவல் அளித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு

    18:08 (IST)02 Mar 2020

    நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட பிறப்பித்த உத்தரவு நிறுத்தி வைப்பு

    நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட பிறப்பித்த உத்தரவு நிறுத்தி வைப்பு. குற்றவாளிகள் 4 பேரையும் நாளை காலை 6 மணிக்கு தூக்கிலிட ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது.

    ஒரு போதும் பின்வாங்க போவதில்லை, தூக்கு தண்டனை பெற்று கொடுத்தே தீருவேன். குற்றவாளிகளுக்கே அரசியலமைப்பு ஆதரவு தருகிறது - நிர்பயாவின் தாய். 

    17:09 (IST)02 Mar 2020

    கொரோனா வைரஸ் பாதிப்பு: ஈரானில் பலி எண்ணிக்கை 66 ஆக உயர்வு

    இஸ்லாமிய குடியரசில் புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு 1,501 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், 66 பேர் உயிரிழந்ததாகா ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் சுகாதார அமைச்சக செய்தித் தொடர்பாளர் அலி ரெசா அஸிஸி கூறுகையில், தெஹ்ரானில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் இந்த புள்ளிவிவரத்தை கூறினார். சீனாவுக்கு அடுத்து கொரோனா வைரஸால் ஈரானில் அதிக எண்ணிக்கையில் பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் ஈரானிய அதிகாரிகளும் உள்ளனர். இதில் ஈரானின் எக்ஸ்பெடென்சி கவுன்சில் உறுப்பினர் திங்கள்கிழமை இறந்தார்.

    16:00 (IST)02 Mar 2020

    திருவொற்றியூர், குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

    திருவொற்றியூர் திமுக எம்.எல்.ஏ கே.பி.பி சாமி, குடியாத்தம் திமுக எம்.எல்.ஏ காத்தவராயன் காலமானதால் 2 சட்டமன்ற தொகுதிகளும் காலியானதாக தலைமை தேர்தல் ஆணையத்திற்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். தொகுதி காலியாக உள்ளது என அறிவிக்கப்பட்ட பிறகு 2 தொகுதிகளுக்கும் 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதி.

    15:57 (IST)02 Mar 2020

    நிர்பயா வழக்கு குற்றவாளி பவன் குமாரின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்

    நிர்பயா பாலியல் வன்கொடுமை கொலை வழக்கு குற்றவாளி பவன் குமாரின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார்.

    15:33 (IST)02 Mar 2020

    நிர்பயா வழக்கு: குற்றவாளி பவன்குமார் மறு சீராய்வு மனு தள்ளுபடி

    நிர்பயா பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் குற்றவாளி பவன்குமாரின் மறு சீராய்வு மனுவை டெல்லி பாட்டியால் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    15:26 (IST)02 Mar 2020

    நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைப்பு

    டெல்லி வன்முறை, சிஏஏ விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    15:00 (IST)02 Mar 2020

    இந்தியாவில் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி - மத்திய அரசு

    இத்தாலியிலிருந்து டெல்லி வந்த ஒருவருக்கும், துபாயில் இருந்து தெலங்கானா வந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    14:33 (IST)02 Mar 2020

    டெல்லி வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 47 ஆக உயர்வு

    வடகிழக்கு டெல்லியில் சிஏஏ ஆதரவு மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே ஏற்பட்ட வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 47ஆக உயர்ந்துள்ளது.

    14:12 (IST)02 Mar 2020

    பிப்ரவரி மாதம் ஜி.எஸ்.டி. வசூல்

    பிப்ரவரி மாதம் ஜி.எஸ்.டி. ரூ. 1.05 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நான்காவது மாதமாக வரி வசூல் உயர்வு. பிப்ரவரி மாதத்தில் மத்திய ஜி.எஸ்.டியாக ரூ. 20,569 கோடியும், மாநில ஜி.எஸ்.டியாக ரூ. 27,348 கோடி கிடைத்துள்ளது. ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி.யாக ரூ. 48, 503 கோடியும், கூடுதல் வரி மூலம் ரூ. 8,947 கோடியும் கிடைத்துள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    13:52 (IST)02 Mar 2020

    அமித் ஷா பதவி விலக வேண்டும் - காங்கிரஸ் எம்.பிக்கள் வலியுறுத்தல்

    டெல்லி நடைபெற்ற வன்முறை கலவரத்தை தொடர்ந்து, அமித் ஷா பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை மிகவும் அதிகமாக வலுத்து வருகிறது. ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்துறை அமைச்சர் பதவியை அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டுமென்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    13:52 (IST)02 Mar 2020

    அமித் ஷா பதவி விலக வேண்டும் - காங்கிரஸ் எம்.பிக்கள் வலியுறுத்தல்

    டெல்லி நடைபெற்ற வன்முறை கலவரத்தை தொடர்ந்து, அமித் ஷா பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை மிகவும் அதிகமாக வலுத்து வருகிறது. ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்துறை அமைச்சர் பதவியை அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டுமென்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    12:58 (IST)02 Mar 2020

    நீட் ஆள்மாறாட்டத்தில் தொடர்பு இல்லை

    நீட் ஆள்மாறாட்டத்தில் எங்களுக்கு நேரடியாக தொடர்பு இல்லை என்று மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன் அறிவிப்பு.

    12:57 (IST)02 Mar 2020

    சி.ஏ.ஏ போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்

    சி.ஏ.ஏ போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து 13ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு மற்றும் டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

    12:29 (IST)02 Mar 2020

    உள்நாட்டு விமானங்களில் வைஃபை பயன்படுத்தலாம்

    உள்நாட்டு விமானங்களில் வைஃபை பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் அதற்காக புதிய கட்டுப்பாடுகளையும் அறிவித்துள்ளது. விமானப் பயணிகள் தாங்கள் பயன்படுத்தும் லேப்டாப், ஸ்மார்ட்போன்கள், டேப்லெட் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் போன்றவற்றை Flight Mode or Airplane Mode-ல் வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    11:51 (IST)02 Mar 2020

    காஷ்மீரில் சாசனப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக மனு

    காஷ்மீரில் அரசியல் சாசனப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான மனுவை 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    11:47 (IST)02 Mar 2020

    தங்கம் விலை உயர்வு

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 96 அதிகரித்துள்ளது. தற்போது ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 31,984 ஆகும்.

    11:45 (IST)02 Mar 2020

    வங்கிப் பாதுகாப்பு காவலர் தற்கொலை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வங்கி பாதுகாப்பு காவலராக பணியாற்றி வந்தவர் யோகேஸ்வரன். வங்கிக் கழிவறையில் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    11:38 (IST)02 Mar 2020

    மக்களவை ஒத்திவைப்பு

    முன்னாள் எம்.பி. பைத்யநாத் பிரசாதின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மக்களவை ஒத்திவைப்பு. மதியம் இரண்டு மணிக்கு பின்னாள் மீண்டும் கூடுகிறது.

    11:15 (IST)02 Mar 2020

    பவான்குமாரின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

    மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க நிர்பயா வழக்கில் தண்டனை பெற்றுள்ள பவன்குமார் சீராய்வு மனுவை தாக்கல் செய்தார். ஆனால் இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. குற்றவாளிகளுக்கு நாளை மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    10:46 (IST)02 Mar 2020

    சென்னையில் கேன் குடிநீருக்கு தட்டுப்பாடு

    கேன் குடிநீர் சுத்திகரிப்பாளர் வேலை நிறுத்தம் இன்று 5வது நாளாக நடைபெற்று வருவதால் ,சென்னையில் கேன் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    10:34 (IST)02 Mar 2020

    டெல்லி வன்முறை

    டெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது. 38 நபர்கள் குரு தேக் பகதூர் மருத்துவமனையிலும், 3 பேர் லோக் நாயக் மருத்துவமனையிலும், ஜாக் பர்வேஷ் மருத்துவமனையில் ஒருவரும், ஆர்.எம்.எல். மருத்துவமனையில் ஒருவரும் உயிரிழப்பு.

    10:28 (IST)02 Mar 2020

    அலுவல் ஆய்வுக்குழு கூட்டம்

    தமிழக சட்டப்பேரவை கூட்டம் வருகின்ற ஏப்ரல் மாதம் 9ம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்று வரும் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    10:15 (IST)02 Mar 2020

    12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஸ்டாலின் வாழ்த்து

    12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் முக ஸ்டாலின். வாழ்வில் அடுத்த கட்ட உயர்வுக்கான தேர்வை நம்பிக்கையுடன் சந்தித்து வெல்ல வாழ்த்துகள்.

    10:06 (IST)02 Mar 2020

    அணைகள் நிலவரம்

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் - 105.17 அடி, நீர் இருப்பு - 71.70 டிஎம்சி, நீர்வரத்து - 1,607 கன அடி, நீர் வெளியேற்றம் - 750 கன அடியாக உள்ளது. அதே போன்று ஈரோடு பவானிசாகர் அணையின் நீர்மட்டம்  96.13 அடி, நீர் இருப்பு - 25.8 டிஎம்சி, நீர்வரத்து - 414 கன அடி, நீர் வெளியேற்றம் - 3,400 கன அடியாக உள்ளது.

    09:59 (IST)02 Mar 2020

    குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு சீல்

    தஞ்சவூர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி இயங்கி வந்த 39 குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். தஞ்சை கோட்டத்தில் 13, கும்பகோணம் கோட்டத்தில் 11, பட்டுக்கோட்டை கோட்டத்தில் 15 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

    09:51 (IST)02 Mar 2020

    டெல்லி வன்முறை தொடர்பாக ராஜ்யசபையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்

    டெல்லி வன்முறை தொடர்பாக மாநிலங்களவையில் விவாதம் செய்ய ஆம் ஆத்மி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளனர்.

    09:42 (IST)02 Mar 2020

    சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம்

    சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் துவங்கியது. இந்த கூட்டத்தில் முதல்வர், துணை முதல்வர், துரைமுருகன் ஆகியோர் பங்கேற்பு. மானிய கோரிக்கைகள் மீதான விவாததிற்காக தமிழக சட்டப்பேரவை வருகின்ற 9ம் தேதி மீண்டும் கூடுகிறது.

    09:32 (IST)02 Mar 2020

    துருக்கி ஆளில்லா விமான தாக்குதல்

    துருக்கி, சிரியாவுக்கு எதிராக நடத்தி வரும் போரில், ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது. அதில் 19 சிரிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    09:26 (IST)02 Mar 2020

    பட்ஜெட் கூட்டத்தொடர் 2வது அமர்வு

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாவது அமர்வு இன்று நடைபெறுகிறது. டெல்லி வன்முறை உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்து இன்று விவாதம் நடத்த எதிர்கட்சியினர் முடிவு

    09:19 (IST)02 Mar 2020

    நாளைய உலகை கட்டமைக்க இருக்கும் மாணவர்கள் - கனிமொழி வாழ்த்துகள்

    09:13 (IST)02 Mar 2020

    Coronavirus வீடு திரும்பிய நோயாளிகள்

    கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி 86 ஆயிரம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 41 ஆயிரத்து 625 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். ஐரோப்பாவில் இத்தாலியில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ளது. 1000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் 36 பேர் இந்த நோயால் பலியாகியுள்ளனர்.

    09:08 (IST)02 Mar 2020

    கொரோனா வைரஸ்

    கொரோனா வைரஸ் பாதிப்பினால் உலகம் முழுவதும் 3 ஆயிரம் பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். திருப்பதியில் ஒருவருக்கு கொரோனா நோய் அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தைவான் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    Ind Vs NZ

    இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியிலும் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றியை கைப்பற்றியது. டெஸ்ட் தொடர்களில் இந்தியா தோல்வியை சந்திப்பது இதுவே முதன்முறை. ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலும் தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து அணி என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான முழுமையான தகவல்களைப் படிக்க

    Tamil Nadu India
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment