Tamil Nadu news today updates : பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்த உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இளவேனில் வளரிவான் , 251.7 புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
ஏழு பேரை விடுதலை செய்யக் கோரி நளினி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம்.
தேசிய விளையாட்டுத் தினத்தை முன்னிட்டு "பிட் இந்தியா" இயக்கத்தை துவங்கி வைத்தார் நரேந்திர மோதி.
இது போன்ற மற்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த பிளாக்கை பின் தொடருங்கள்.
Live Blog
Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, train services and airlines : தமிழகம் மற்றும் சென்னையில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள், வானிலை செய்திகள், தங்க விலைகள், பெட்ரோல்/டீசல் நிலவரங்களை கீழே காணலாம்.
லண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவமனை கிளையை தமிழகத்தில் நிறுவ முதல்வர் பழனிசாமி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. டெங்கு, மலேரியா நோய்களை ஏற்படுத்தும் கொசுக்களை கட்டுப்படுத்துதல் & அந்நோய்களை கையாளும் முறைகள் தொடர்பாக நோக்க அறிக்கை லண்டனில் முதல்வர் முன்னிலையில் கையெழுத்தானது.
காழ்ப்புணர்ச்சி காரணமாக முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் விமர்சித்து வருகிறார். மற்ற மாநிலங்களில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் செயல்படுத்தப்பட்ட புதிய தொழில் திட்டங்களை காட்டிலும், தமிழகத்தில் பல மடங்கு புதிய தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளன என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் பிறந்த நாள் செப்டம்பர் 17 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி செப்டம்பர் 14ஆம் தேதி முதல் செப்டம்பர் 20 ஆம் தேதி வரை மக்கள் சேவை வாரமாக கடைபிடிக்க உள்ளது பாஜக முடிவு செய்துள்ளது.
முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோட் சூட்டில் இங்கிலாந்தில் உள்ள என்.எச்.எஸ் நிறுவனத்துக்கு சென்று ஆலோசனை நடத்தியுள்ளார். அந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இங்கிலாந்தில் செயல்படுத்தப்படும் அவசர ஆம்புலன்ஸ் சேவைகளை மேம்படுத்தி அவற்றை தமிழகத்தில் செயல்படுத்துவது குறித்து மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் லண்டனில் #NHS நிறுவனத்துடன் ஆலோசனை மேற்கொண்டார். #TNGovt #LondonAmbulanceService #TNHealth pic.twitter.com/3ns6EhuLp9
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) August 29, 2019
சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான தேசிய விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பாரா தடகள வீராங்கனை தீபா மாலிக்கிற்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை வழங்கினார்.
முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் பழனிசாமி, லண்டனில் கோட்சூட்டில் அந்நாட்டு அதிகாரிகளை சந்தித்து வருகிறார். தமிழக முதலமைச்சர் பழனிசாமி தமிழகத்தில் வேட்டி சட்டை அணிந்தே பொது நிகழ்ச்சிகளில் காணப்பட்ட அவர், லண்டனில் கோட்சூட்டில் அதிகாரிகளை சந்தித்து கலக்கி வருகிறார். அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உடனிருக்கிறார். இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அயல்நாடுகளில் மருத்துவத்துறையில் செயல்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களின் பணித்தரத்தின் மேம்பாடுகளைக் கண்டறிந்து அவற்றை தமிழகத்தில் செயல்படுத்த சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தினருடன் சந்திப்பு நடைபெற்று வருகிறது. #ISDC #TNGovt pic.twitter.com/KFDcVJd4S9
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) August 29, 2019
இயக்குனர் சாச்சி இயக்கத்தில் நடிகர் வைபவ் ரெட்டி, சதிஷ், ராதாரவி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் சிக்சர். இந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், நகைச்சுவை நடிகர் கவுண்டமணி படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், தன்னுடைய அனுமதி பெறாமல் புகைப்படம், வசனத்தை சிக்ஸர் படத்தில் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டியுள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான விபத்து காப்பீட்டு திட்டத்தின்படி, விடுமுறை நாளில், நீர் நிலைகளில் சிக்கி மாணவர்கள் இறந்தாலும் அரசின் நிவாரணம் வழங்கப்படும். பள்ளிகளில் மின் கசிவு மற்றும் ஆய்வக விபத்துகளில் மாணவர்கள் சிக்கினாலும் நிவாரணம் வழங்கப்படும். மேலும், விஷ பூச்சிகள் கடித்து மாணவர்கள் பாதிக்கப்பட்டாலும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என அறிவித்துள்ளார்.
அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் 22 மாவட்டங்களில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அம்மா ஆம்புலன்ஸ் சேவை விரைவில் துவக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியில் காரில் வந்தவர்கள் கட்டணம் செலுத்த மறுத்து தகராறில் ஏற்பட்டுள்ளது. அப்போது அவர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. துப்பாக்கியால் சுட்டவரை சுங்கச்சாவடி ஊழியர்களே மடக்கிப் பிடித்தனர். காரில் வந்தவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 4 பேர் தப்பி ஓடினர்.
உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்ற வழக்கு விசாரணையில், உள்நாட்டு பாதுகாப்பில் தமிழக காவல்துறைக்கு அக்கறை உள்ளதா? என்றும் எத்தனையோ உளவு அமைப்புகள் இருந்தாலும் உள்நாட்டு பாதுகாப்பு விஷயத்தில் அவர்களின் பணி என்ன..? உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்றுள்ள தமிழக முதல்வர் பழனிசாமிக்கு லண்டனில் லண்டன் வாழ் தமிழர்கள் சிறப்பான வரவேற்பு அளித்ததை தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில் “மருத்துவத்துறை மற்றும் பிற துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய தொழில்நுட்பங்களை கண்டறிந்து தமிழ்நாட்டில் செயல்படுத்திடவும், தமிழகத்திற்கு அதிக முதலீடுகளை ஈர்க்கவும் வெளிநாடு சென்ற மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு லண்டனில் லண்டன்வாழ் தமிழர்கள் சிறப்பு வரவேற்பு அளித்தனர்.” என்று தெரிவித்துள்ளார்.
மருத்துவத்துறை மற்றும் பிற துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய தொழில்நுட்பங்களை கண்டறிந்து தமிழ்நாட்டில் செயல்படுத்திடவும், தமிழகத்திற்கு அதிக முதலீடுகளை ஈர்க்கவும் வெளிநாடு சென்ற மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு லண்டனில் லண்டன்வாழ் தமிழர்கள் சிறப்பு வரவேற்பு அளித்தனர். pic.twitter.com/xHp48iVIpo
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) August 29, 2019
சென்னை அண்ணா அறிவாலையத்தில் திமுக எம்.பி.-க்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின்: “தலைவராகப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவுபெற்றதையடுத்து, என்னை ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். சாதனைகளையும் சோதனைகளையும் நன் எடைபோட்டு பார்ப்பதில்லை. சிலர் என்னை விமர்சித்து எழுதியுள்ளனர் அதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்று கூறினார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் மேற்குத்தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றின் வேகம் மாறுபாடு, வெப்பச்சலனம் காரணமாக மற்ற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் உடலை ஸ்கேன் செய்யும் கருவி ஓராண்டில் நிறுவப்படும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதே போல, நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் உடலை ஸ்கேன் செய்யும் கருவி 2 ஆண்டுகளில் அனைத்து விமான நிலையங்களிலும் கட்டாயமாக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லியில், ஃபிட் இந்தியா இயக்கத்தை தொடங்கிவைத்த பிரதமர் மோடி, மக்கள் அனைவரும் தினந்தோறும் உடற்பயிற்சி செய்வதைக் கட்டாயமாக்கிக்கொள்ள வேண்டும் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் உடற்பயிற்சி செய்வோம் என்று உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
காஞ்சிபுரம் அருகே அனுமந்தபுரம் பகுதியில் உள்ள ஏரியில் வெடிகுண்டு மற்றும் ராக்கெட் உதிரி பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் உதிரி பாகங்கள் 10 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்டவை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
மூல்லைப் பெரியாறு அணையில் இருந்து இன்று விவசாய பாசனத்துக்காக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தண்ணீர் திறந்துவைத்தார். இது குறித்து துணை முதலவர் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில், “இன்று (29.8.2019) முல்லைப் பெரியாறு அணையிலிருந்து முதல்போக சாகுபடி மற்றும் குடிநீர் தேவைக்காக தண்ணீரை திறந்து வைத்ததில் மகிழ்ச்சி.. #TNGovt #PeriyarDam” என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்று (29.8.2019) முல்லைப் பெரியாறு அணையிலிருந்து முதல்போக சாகுபடி மற்றும் குடிநீர் தேவைக்காக தண்ணீரை திறந்து வைத்ததில் மகிழ்ச்சி.. #TNGovt #PeriyarDam pic.twitter.com/CJ8M0XTMut
— O Panneerselvam (@OfficeOfOPS) August 29, 2019
தமிழக முதலமைச்சர் பழனிசாமி முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்றுள்ளார். இன்று இங்கிலாந்தில் சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்துடன் தமிழக அரசு மேற்கொண்ட 2 புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் முதலமைசர் பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது.
மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் பணி தரத்தினை மேம்படுத்திடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
பாக்கிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீர் என்பது இன்றைய ஜம்மு-காஷ்மீரின் ஒரு பகுதியாகும். 1947 இல் பாகிஸ்தானால் படையெடுக்கப்பட்டு அந்நாட்டின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் ஐந்தாம் தேதி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஜம்மு-கஷ்மீர்க்கான சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்து, அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.
இந்நிலையில், பாக்கிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீர் பகுதியில் தனி நாடாய் அமைக்கக் கோரி அங்கு மக்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.
#NationalSportsDay 2019
Join us in #FitIndia Movement to make sports a way of life for every Indian.#FitIndiaMovement #banegaswasthindia ⛹️🤸🚴🏻♀️🏊🏻♀️🏃🏻♀️@PMOIndia @KirenRijiju pic.twitter.com/feJF6sn9qK
— Dept of Sports MYAS (@IndiaSports) August 29, 2019
ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தியான் சந்தின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக ஆகஸ்ட் 29-ஐ தேசிய விளையாட்டுத் தினமாக கொண்டாடி வருகிறது இந்தியா.
Prime Minister @narendramodi arrives at Indira Gandhi Stadium to a loud crowd cheer
Will launch #FitIndiaMovement shortly pic.twitter.com/N0PErn80Ma
— PIB India (@PIB_India) August 29, 2019
பிரதம மந்திரி இன்று இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் பிட் இந்திய இயக்கத்தை தொடங்கி வைத்தார் நரேந்திர மோதி
பல முகங்கள் கொண்ட மைக்கல் ஜாக்சனுக்கு இன்று பிறந்த நாள். அதை முன்னிட்டு உலகம் முழுவதும் ரசிகர்கள் இன்று மைக்கல் ஜாக்சனை நினைவு கூர்ந்து வந்துக் கொண்டிருக்கின்றனர்
1958ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் கேரி என்ற ஊரில் வாழ்ந்த குடும்பத்தில் 8-வது குழந்தையாக பிறந்தவர் மைக்கேல் ஜாக்சன் என்பது குறிப்பிடத் தக்கது
நேற்று, லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி. முருகனுக்கு எதிரான பாலியல் வழக்கை தெலங்கானா காவல் துறைக்கு விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights