Tamil Nadu news today live updates 8 food processing projects in TN தமிழகத்தில் உணவு பதப்படுத்தும் தொழில்கள் தொடர்பான 8 திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. ரூ. 220 கோடி மதிப்பில் உருவாக உள்ள இந்த திட்டங்களின் வாயிலாக 8000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டங்களின் மூலமாக சுமார் 32 ஆயிரம் விவசாயிகள் நன்மை அடைவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. டெல்லியில் உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கௌர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ரூ. 301 கோடி மதிப்பிலான 10 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பிரதான் மந்திரி கிஸான் சம்பதா யோஜானா என்ற திட்டத்தின் கீழ் இந்த தொழில்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் சார்பில் வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அக்ரிகல்ச்சுரல் மார்க்கெட்டிங் மற்றும் அக்ரி பிசினஸ் ஆணைஇயர் சுன்சோன்கம் ஜதக் சிறு ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிங்காரச் சென்னை வரலாறு
சென்னையின் புராதானங்கள் என்ன? சென்னையின் வரலாறு என்ன? பன்முகத் தன்மை கொண்ட தமிழக தலைநகரின் வரலாற்றினைத் சென்ற பயணத்தின் முதல் வீடியோ தொகுப்பு உங்களுக்காக இங்கே! மேலும் படிக்க : சிங்காரச் சென்னை வரலாறு 1 : இது தங்கசாலை தெரு உருவான கதை…
சென்னைப் பல்கலைக்கழகம் தேடல் குழு
சென்னைப் பல்கலைகழகத்திற்கு துணை வேந்தரை தேர்வு செய்வதற்கு தேடுதல் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் தலைவராக ஜெகதீஷ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருக்கும் இவரை தற்போது தேடுதல் குழுவின் தலைவராக நியமித்துள்ளனர். ஜே.என்.யூ வளாகத்தில் இரு தரப்பு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட வன்முறை கலவரத்தை சரியான முறையில் கையாளவில்லை என்ற குற்றச்சாட்டு இவர் மீது எழுந்தது குறிப்பிடத்தக்கது. இவரின் நியமனத்திற்கு தமிழக தலைவர்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர். அது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"
Live Blog
Tamil Nadu news today updates : இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் லைவ் ப்ளாகிற்கு உங்களை வரவேற்கின்றோம். தமிழகத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் உடனுக்குடன் உங்கள் உங்கள் கையில்
மின்கணக்கீட்டாளர் பணிக்கான தேர்வை தமிழிலேயே எழுத முதல்வரிடம் பேசி அனுமதி பெற்றுள்ளோம்
மத்திய அரசின் கீழ் இயங்கும் நிறுவனம் ஆங்கிலத்தில் தேர்வை அறிவித்திருந்தார்கள்
தமிழகத்தின் பல்வேறு நலத்திட்ட வளர்ச்சிகளுக்காக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தோம்
- அமைச்சர் தங்கமணி
ரஜினியின் அண்ணாத்த படத்தில் முன்னணி தெலுங்கு நடிகர் கோபிசந்த் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறுத்தை சிவா இயக்கும் இந்த படத்தில் நயன்தாரா , கீர்த்தி சுரேஷ் , குஷ்பு , மீனா உட்பட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயம் படத்தில் நடித்த கோபிசந்தை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் கோபிசந்த் 18 வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் தமிழ் சினிமாவுக்கு திரும்புகிறார்.
சென்னை பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவிக்கான ஆய்வுக் குழுவுக்கு டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத் துணைவேந்தரை, அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது என திராவிட கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கல்வியாளர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டு விட்டதோ என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், ஆளுநரின் இந்த முடிவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
வருங்கால வைப்பு நிதிக்கு குறைந்தது 10 சதவீத வட்டி நிர்ணயிக்கப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தொழிலாளர்கள் ஓய்வு பெறும் போது குறைந்தபட்ச வசதிகளுடன் வாழ்க்கை நடத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மாசி திருவிழா எட்டாம் நாள் நிகழ்ச்சியில் சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் தங்க சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார். கடந்த மாதம் 28 ஆம் தேதி மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் ஒவ்வொரு நாளும் குமரவிடங்க பெருமானும், அம்பாளும் தனித்தனி சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றனர். இந்நிலையில் எட்டாம் நாளில் சுவாமி பெரிய வெள்ளி சப்பரத்தில் தையல் நாயகி வகையறா மண்டபத்திலிருந்து எழுந்தருளி எட்டு திரு வீதிகளிலும் உலா வந்தார்.
தமிழகம் முழுவதும் மார்க்கெட்டில் விற்கக்கூடிய மீன்களில் பார்மலின் என்கிற ரசாயனம் கலந்து விற்கப்படுகிறதா என ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து, கடலூர் மஞ்சகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் மீன்வளத்துறை இணை இயக்குனர் காத்தவராயன் உள்ளிட்ட அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, திருப்பாதிரிப்புலியூர் மற்றும் முதுநகர் மீன் மார்க்கெட் வெளிப்புறத்தில் சுமார் 100 கிலோ அழுகிய மீன்கள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்து அப்புறப்படுத்தினர். இதையடுத்து, இதுபோன்ற மீன்கள் விற்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விற்பனையாளர்களை அதிகாரிகள் எச்சரித்து சென்றனர்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ரஜினிகாந்த் தலைமையில் நேற்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர்களிடம் பல்வேறு விஷயங்கள் குறித்து ரஜினிகாந்த் பகிர்ந்து கொண்டதுடன் கருத்துக்களையும் கேட்டறிந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் அமைப்பு ரீதியாக வலுவான கட்டமைப்பை உருவாக்கிய பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் கட்சியின் பெயரை அறிவிக்கலாம் என ரஜினி அந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூறியதாக தெரிகிறது. வரும் நான்கு மாதங்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுரை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. பிரதான கட்சிகளே கூட்டணி அமைத்து செயல்படும் நிலையில், நாமும் கூட்டணி அமைத்தால் தான் சரிவரும் என ரஜினி கூறியதாகவும், கமல் உள்ளிட்ட சில கட்சிகளை கூட்டணியில் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மாவட்ட செயலாளர்களிடம் ரஜினிகாந்த் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
யெஸ் வங்கியில் வாடிக்கையாளர்கள் செய்திருக்கும் டெபாசிட்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளது என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். வங்கி மற்றும் வாடிக்கையாளர்களின் நலனை பாதுகாக்க ஆர்பிஐ நடவடிக்கை எடுத்துவருகிறது என்றும் அவர் பேசியுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் நாட்டு வெடிகுண்டினை வீசிய மூன்று பேர், சதீஷ், ஹரிஷ், மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகியோர் தென்காசி மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். அவர்கள் சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி முக ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். மனு மீதான விசாரணையை மார்ச் 23ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.
டெல்லி வன்முறை தொடர்பாக பேச முற்பட்ட 7 காங்கிரஸ் எம்.பிக்களை சஸ்பெண்ட் செய்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. பாராளுமன்றம் இந்திய ஜனநாயகத்தின் கோவில் என்று அடிக்கடி கூறப்படுவது உண்டு. அதனை பா.ஜ.க. அரசு அதனை மீண்டும் உறுதி செய்ய வேண்டிய தருணம் இது என்று ட்வீட்
It is unfortunate to hear that 7MPs have been suspended by the Speaker for trying to bring about a discussion on #DelhiRiots2020
Parliament is often said to be the Temple of Democracy and the BJP Govt will do well to remember this.
Urge Hon'ble Speaker to revoke the suspensions
— M.K.Stalin (@mkstalin) March 6, 2020
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மாயமான பள்ளி மாணவிகள் நான்கு பேரை காவல்துறையினர் காட்பாடி ரயில் நிலையத்தில் கண்டுபிடித்துள்ளனர். வெளியூர் செல்லும் முனைப்பில் வீட்டில் இருந்து வெளியேறிய நான்கு நபர்களையும் காவல்துறையினர் பத்திரமாக பெற்றோர்களிடத்தில் ஒப்படைத்தனர்.
நோய் தொற்றுகளை கண்டறியும், அவை தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் ஒரே மையம் மகாராஷ்ட்ராவில் தான் இருக்கிறது. இந்த எண்ணிக்கை போதாது. இது போன்று பல்வேறு இடங்களில் ஆராய்ச்சி மையங்கள் துவங்க வேண்டுமென்று கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights