குடியுரிமை திருத்த மசோதா ராஜ்யசபாவிலும் நிறைவேற்றம் (CAB) : மக்களவையில் நேற்று முன்தினம் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. நீண்ட விவாதத்திற்கு பிறகு நள்ளிரவு அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு குடியுரிமை சட்டதிருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 125 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் கிடைத்தன. திமுக, காங்கிரஸ் கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே மசோதா நிறைவேற்றப்பட்டது.
மகாகவி பாரதியாரின் பிறந்த நாளான நேற்று அவரை நினைவுப்படுத்தும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார். அதில் சமூக சீர்திருத்தம், தேசப்பற்று, கவிப்புலமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் என்று நினைவு கூறியுள்ளார் மோடி.
மகாகவி பாரதியார் என்றழைக்கப்படும் மாமனிதர் சுப்பிரமணிய பாரதியின் பிறந்தநாளன்று அவரை நினைவு கூர்கிறேன். தேசப்பற்று, சமூக சீர்திருத்தம், கவிப்புலமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர். அவரது எண்ணங்களும் பணிகளும் இன்றைக்கும் நம்மை எழுச்சியூட்டும் விதமாகவே உள்ளன.
— Narendra Modi (@narendramodi) December 11, 2019
மேலும் படிக்க : குடியுரிமை சட்ட திருத்த மசோதா (CAB) எங்கே செல்லுபடியாகாது?
Live Blog
Tamil Nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பினை நீங்கள் இந்த இணைப்பில் காணலாம்.
குடியுரிமை மசோதா மூலம் மதச்சார்பின்மை, சமத்துவம், சகோதரத்துவம் மீது நேரடித் தாக்குதல். குடியுரிமையை மதத்துடன் இணைப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. குடியுரிமை சட்டத்தை எதிர்க்காத அதிமுக அரசை கோடரிக்காம்பு என்றுதான் சரித்திரம் பதிவு செய்யும். பாஜகவின் கொள்கைதான் அதிமுகவின் கொள்கை என்றால், அதில் பேரறிஞர் அண்ணாவின் பெயர் எதற்கு? - மு.க.ஸ்டாலின்
இதுவரை 'ஊழல் ஆட்சி' - 'கொலைகார ஆட்சி' - 'கொள்ளைக்கார ஆட்சி' என்று நாம் சொல்லிக் கொண்டிருந்த எடப்பாடி ஆட்சி, இப்போது 'தமிழர்களுக்கு துரோகம் செய்யும் ஆட்சியாக' மாறியிருக்கிறது!
அதிமுக - பாஜக கூட்டணியின் உண்மை முகத்தை திமுக-வினர் மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து உணர்த்திட வேண்டும்.
தலையில் இடி விழுந்தது போல் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு திமுக கூட்டணி மேல் விழுந்துள்ளது
நீதிமன்றத்தை மேலும் மேலும் அணுகாமல் மக்களை சந்திப்பதே சிறந்த தீர்வாக இருக்கும்
உள்ளாட்சியிலும் நல்லாட்சி தொடர வேண்டும் என்ற அடிப்படையில் முதல்வர் ஆலோசனை வழங்கினார்
- அமைச்சர் ஜெயக்குமார்
இலங்கை தமிழர்களின் பிரச்சனைகள் தொடர்பாக கடந்த காலங்களில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது, தற்போது மற்ற 3 நாடுகளில் இருந்து வரும் பிரச்சனைகள் தொடர்பாக சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டம் இஸ்லாமியர்கள் மற்றும் சிறுபான்மையினரை எந்த விதத்திலும் பாதிக்காது - அமித்ஷா - உள்துறை அமைச்சர் அமித்ஷா
உச்ச நீதிமன்ற ஆணைப்படியே ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில்தான் வார்டு மறுவரையறை எனவே, டிச.9ம் தேதி வெளியிட்ட அறிவிப்பின்படி திட்டமிட்டபடி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் - மாநில தேர்தல் ஆணையம்
தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரவீந்திரநாத் எம்பியின் வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரி அத்தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் மிலானி தரப்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் அதிமுக எம்பி ரவீந்திரநாத் பதில் மனு தாக்கல் செய்யவில்லை என்றும்,பதில் மனு அளிக்கும் வரை அவர் எம்.பி. பதவி வகிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது இதையடுத்து, வரும் ஜனவரி 23ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என ரவீந்திரநாத் குமாருக்கு இறுதி கெடு விதித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் வழக்கின் விசாரணையையும் அன்றைய தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இலங்கை தமிழர்கள் உள்ளிட்டோரை நீக்கிய குடியுரிமை திருத்த மசோதாவை வங்க கடலில் தூக்கி எரியுங்கள் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். மாநிலங்களவையில் இந்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய அவர், இதனை தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சிகளில் இட ஒதுக்கீடு அளிக்கப்படும் மாநகராட்சி குறித்த அறிவிப்பை, நகராட்சி நிர்வாக முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ளார்.
அதன் படி, வேலூர் மாநகராட்சி எஸ்.சி பெண்களுக்கும், தூத்துக்குடி மாநகராட்சியில் எஸ்.சி பிரிவைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் இருவரும் போட்டியிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி, திருநெல்வேலி, நாகர்கோயில், திண்டுக்கல், மதுரை, கோவை, ஈரோடு ஆகிய மாநகராட்சிகளில் அனைத்து பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கான ரோமானிய நாட்டின் தூதர், ருமானியா நாட்டின் கவுரவ தூதர், ஸ்காட்லாந்து நாட்டு தொழிலதிபர், டெல்லியை சேர்ந்த சமூக செயல்பாட்டாளர், ருமானிய நாட்டு தூதரகத்தின் வர்த்தக ஆலோசகர் ஆகியோர் ஸ்டாலினை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி உடன் இருந்தார்.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 75வது ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது என்று, பிஎஸ்எல்வி ராக்கெட் வரிசையில் 50வது ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 50வது ராக்கெட்டான பிஎஸ்எல்வி சி-48 10 செயற்கைக்கோள்களையும் விண்ணில் நிலைநிறுத்தியது என இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்
10 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி-48. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது இந்த ராக்கெட். இந்தியாவின் ரீசாட் 2பிஆர்1 செயற்கைகோள் உட்பட 10 செயற்கைகோள்களுடன் விண்ணில் ஏவப்பட்டது.
தேர்தல் வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய தேனி எம்.பி. ரவீந்திரநாத் குமாருக்கு இறுதிக் கெடு. வாக்காளர் மிலானி தொடர்ந்த வழக்கில் ஜன.23க்குள் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பதில் மனு தாக்கல் செய்யாததால் பதவியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க கோரி நிலானி புது மனு தாக்கல் செய்துள்ளார்.
அரசியலமைப்பு சட்டத்தில் பிழை இருப்பின் திருத்தும் கடமை நமக்கு உள்ளது, ஆனால் பிழை இல்லா நல் அமைப்பை திருத்த முற்படுவது மக்களுக்கும், மக்களாட்சிக்கும் செய்யும் துரோகம். இந்தியாவை ஒருசாரார் மட்டுமே வாழும் நாடாக மாற்ற முயல்வது மடமை என குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஜெ.தீபா ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசு என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை ஏற்கெனவே வெளிவந்த புத்தகத்தை தழுவியே தலைவி திரைப்படம் எடுக்கப்படுகிறது. பல ஆண்டுகளாக புழக்கத்தில் உள்ள புத்தகத்துக்கு இதுவரை தடை ஏதும் கோரப்படவில்லை என ஏ.எல்.விஜய் தரப்பு உயர் நீதிமன்றத்தில் வாதிட்டது.
குடியுரிமை சட்ட திருத்த மசோதா இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்று தவறான தகவல்கள் பரபரப்படுகிறது. இந்திய முஸ்லீம்களுக்கும் இந்த மசோதாவுக்கும் என்ன சம்பந்தம் என்று அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் சிறுபான்மை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதை எதிர்கட்சிகள் நிறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இலங்கை தமிழ் அகதிகள் குறித்து குடியுரிமை மசோதாவில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என சிவசேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் அறிவிப்பு. குடியுரிமை சட்ட திருத்த மசோதா மூலம் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுவது சரியல்ல என்றும் அவர் பேச்சு
நடிகர் ரஜினி காந்த் அடுத்த ஆண்டு கட்சி துவங்குவார் என்றும், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திப்பார் என்றும் அவருடைய சகோதரர் சத்திய நாராயணராவ் பேட்டி அளித்துள்ளார். 2021ம் ஆண்டில் ரஜினி கூறிய அதிசயம் அற்புதம் நிகழும் என்றும் பேச்சு
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று என டெல்லியில் நடைபெற்ற பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி கருத்து. குடியுரிமை திருத்த மசோதா விவகாரத்தில் சில கட்சியினர் பாகிஸ்தானின் குரலில் பேசுகிறார்கள் என்றும் குற்றச்சாட்டு.
கடலூரில் சில நாட்களாக வெங்காயம் மிக குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று காலை 5 கிலோ வெங்காயம் ரூ. 100க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ஒரு கிலோ வெங்காயம் ரூ. 10க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெங்காயம் விலை மிக குறைவாக இருப்பதால் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வாங்கி சென்றனர்.
டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வின் நேர்காணலின் போது, மதிப்பெண்களை பென்சிலால் மட்டும் எழுத வேண்டும் என்று தேர்வு ஆணைய உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பது குறித்து வைகோ கருத்து. கிராமப்புறங்களை சேர்ந்த, பெரிய பின்புலம் ஏதும் இல்லாத தகுதி வாய்ந்த இளைஞர்களின் வாழ்க்கையில் விளையாடும் கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள்.
அசாரூதின் மகனுக்கும் சனியா மிர்சாவின் தங்கைக்கும் திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமண விழாவில் பங்கேற்க தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளனர். ஹைதராபாத்தில் உள்ள பிரகதி பவனிற்கு சனியா மிர்சாவும் அசாரூதீனும் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு கொடுத்தனர்.
இன்று இரவு 7 மணிக்கு மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெற உள்ளது. இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளில் ஒரு அணிகளும் தலா ஒவ்வொரு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights