Tamil Nadu news today updates: இந்தியாவின் பொருளாதாரம் மந்தநிலையில் இருந்து மீட்டேடுக்க நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சில நாட்களுக்கு முன் உள்நாட்டு நிறுவனங்களுக்கு கார்பரேட் வரி 22 சதவீதமாக குறைக்கப்படுகிறது என்ற முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக , மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் புள்ளிகள் இன்று உயர்ந்த நிலையில் வணிகம் செய்யப்பட்டு வருகிறது. இன்று காலைநேர நிலவரப்படி, சென்செக்ஸ் 978 புள்ளிகளும், நிஃப்டி 291 புள்ளிகளும் உயர்ந்து காணப்பட்டன.
விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சை, திருவாரூர், நாகை, கரூர், தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
டெல்லி திகார் சிறையில் உள்ள ப. சிதம்பரத்தை இன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் இடைக்கால காங்.தலைவர் சோனியா காந்தி ஆகியோர் சந்திக்க உள்ளனர். இதுபோன்ற, முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லைவ் ப்ளாக்கைப் பின் தொடருங்கள்.
Live Blog
Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, train services and airlines: தமிழகம் மற்றும் சென்னையில் நடக்கும் முக்கிய சமூக நிகழ்வுகள், அரசியல் சூழ்நிலைகள், அரசின் முக்கிய நடவடிக்கைகள் மற்றும் பொழுதுபோக்கு செய்திகள் இங்கே உடனுக்குடன் காணலாம்.
ஐஎன்எக்ஸ் விவகாரத்தில் அதிகாரிகளின் பரிந்துரையை ஏற்றே ப.சிதம்பரம் ஒப்புதல் வழங்கினார்
அதிகாரிகள் தவறிழைக்கவில்லை எனில் அமைச்சர் மட்டும் தவறிழைக்க முடியுமா?
ஐஎன்எக்ஸ் வழக்கில் நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம் - மன்மோகன் சிங்
பேசுவதற்கான நேரம் முடிந்துவிட்டது; இனி செயல்பட வேண்டும்
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் குறித்து உலகளவில் விழிப்புணர்வை தீவிரப்படுத்த வேண்டும். நீர் மேலாண்மை, மழை நீர் சேகரிப்பு போன்ற திட்டங்களை தொடங்கியுள்ளோம்
இந்தாண்டு இந்திய சுதந்திர தினத்திற்கு ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக ஒரு பெரிய இயக்கத்தை தொடங்கியுள்ளோம். உலகளவில் இது விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.
- ஐ.நா.வின் பருவநிலை மாற்றத்திற்கான உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி உரை
மின் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், அதிக விலை கொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்கிறதா? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வரும் 26-க்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
மழை மீட்பு பணி - ரூ.38.52 கோடி ஒதுக்கீடு என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து அரசு வெளியிட்ட அறிக்கையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு குறித்து முப்படை
அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ஆய்வு செய்ய உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்ற தயார் நிலையில் மின் மோட்டார்கள் மற்றும் போதுமான அளவு மருந்து மற்றும் பிளீச்சிங் பவுடர் கையிருப்பு இருப்பதாகவும் நியாய விலைக் கடைகளில் 2 மாதங்களுக்குத் தேவையான பொருட்கள் கையிருப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மழை மீட்பு பணிக்கு 38 கோடியே 52 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இடைத்தேர்தலில் பாஜக சார்பாக வேட்பாளர் நிறுத்தப்படுவது குறித்து கட்சி தலைமை விரைவில் முடிவெடுக்கும். விஜய் அரசியல் கருத்தை கூறக்கூடாது என யாரும் கூற முடியாது; உண்மையான அரசியல் கருத்துகளை சொன்னால் யாருக்கும் வருத்தம் கிடையாது, அனைவருக்கும் மகிழ்ச்சியே - பொன்.ராதாகிருஷ்ணன்
பேனர் வைக்க வேண்டாம் என அறிக்கை வெளியிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் நடிகர்களுக்கு வாழ்த்துகள். ரஜினிகாந்த் படத்தில் தான் பஞ்ச் டயலாக் பேசுவார், மேடைகளில் எதார்த்தமாக பேசுவார். மற்ற நடிகர்களும் அதனை பின்பற்ற வேண்டும், எதார்த்தமாக நடந்து கொள்ள வேண்டும் - இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்
"அதிமுக-வை சீண்டினால் பெரிய ஆள் ஆகிவிடலாம்": அமைச்சர் ஜெயக்குமார் கருத்துக்கு கே.எஸ்.அழகிரி பதில்
"அதிமுக-வை சீண்டினால் பெரிய ஆள் ஆகிவிடலாம்": அமைச்சர் ஜெயக்குமார் கருத்துக்கு கே.எஸ்.அழகிரி பதில் || https://t.co/C1LoXzyqjR#AIADMK | #Jayakumar | #KSAlagiri
— Thanthi TV (@ThanthiTV) September 23, 2019
ஆந்திர மாநிலத்தின் ஜெகன்மோகன் ரெட்டி அமைச்சரவையில் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராகவும், துணைமுதல்வராகவும் பதவி வகித்து வர் உபவர் புஷ்பா ஸ்ரீவானி. இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை மையப்பட்டுத்தி எடுக்கப்பட்டுவரும் ‘அம்ருத பூமி’ திரைப்படத்தில் ஆசிரியராக நடிக்கிறார்.
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் 11 பேர் விருப்ப மனு; பாஜக சார்பில் 6 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர்.
புதுச்சேரி காமராஜ் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை சோனியாகாந்தி முடிவு செய்வார்
செப்.25ஆம் தேதி முதல்வர் நாராயணசாமியுடன் டெல்லி சென்று வேட்பாளர் குறித்து ஆலோசிக்கப்படும்
அதிமுக, பாஜக சார்பில் யார் நின்றாலும் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் - நமச்சிவாயம்
கப்பலூர் சுங்கச்சாவடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய கார்த்திகேயனுக்கு பதில் அவரது தந்தை சட்டப்படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி
கார்த்திகேயன் சிறையில் உள்ளதால், அவருக்கு பதில் அவரது தந்தை கலந்தாய்வில் பங்கேற்க ஐகோர்ட் மதுரை கிளை அனுமதி.
வெங்காயம் வெளி சந்தைகளில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் உணவு பொருள் சார்ந்த பல அதிகாரிகள் கலந்துகொண்டனர். மழையின் காரணமாக நாசிக் மற்றும் ஆந்திராவில் இருந்து வெங்காயம் வரத்து குறைந்ததன் காரணமாக அதன் விலை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது, நாசிக் மற்றும் ஆந்திராவில் இருந்து வெங்காயம் அதிக அளவில் லாரிகளில் வந்து கொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதை தொடர்ந்து, இன்னும் 2 அல்லது 3 நாட்களில் வெங்காயம் விலை குறையும் என தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
13ஆம் நூற்றாண்டுகளில் வடமாநிலங்களில் இருந்து இந்தி மொழி நுழைவிற்கு இப்போது போன்றே எதிர்ப்பு இருந்திருக்க வாய்ப்பு உள்ளதாக தமிழகத் தொல்லியல்துறையின் முன்னாள் உதவி இயக்குநர் சாந்தலிங்கம் தெரிவித்தார். மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள 13ஆம் நூற்றாண்டு காலத்தில் எழுதப்பட்ட கல்வெட்டுகள் குறித்து சாந்தலிங்கம் தலைமையிலான 3பேர் கொண்ட குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.மேலும், கோயிலில், 800 ஆண்டுகளில் நடைபெற்ற பணிகள் குறித்த வரலாற்றை ஆய்வு செய்து, கல்வெட்டுகளில் உள்ள எழுத்துக்களை ஆவண படுத்தி ஆறு மாதங்களுக்குள் புத்தகமாக வெளியிட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மதுரை - தூத்துக்குடி வரையிலான இரட்டை தண்டவாளம் வழிப்பாதை அமைக்கும் பணியில், சட்ட விரோதமாக தனியார் நிறுவனங்கள் மணல் அள்ளுவதாக வழக்கு.
மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
மத்திய அரசின் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் தமிழக அரசுக்கு ஒதுக்கும் நிதி எங்கு செல்கிறது? என ஐகோர்ட் கேள்வி
செவிலியர்களின் ஊதிய விவகாரம் தொடர்பாக குழு அமைத்து முடிவெடுக்க பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என செவிலியர் சங்கம் உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.
செவிலியர் ஊதிய பிரச்சனைக்கு தீர்வு காண ஏன் இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை - ஐகோர்ட் கேள்வி
அக்.15ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக சுகாதாரத் துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
மத்திய அரசின் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் தமிழக அரசுக்கு ஒதுக்கும் நிதி எங்கு செல்கிறது? என ஐகோர்ட் கேள்வி
செவிலியர்களின் ஊதிய விவகாரம் தொடர்பாக குழு அமைத்து முடிவெடுக்க பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என செவிலியர் சங்கம் உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.
செவிலியர் ஊதிய பிரச்சனைக்கு தீர்வு காண ஏன் இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை - ஐகோர்ட் கேள்வி
அக்.15ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக சுகாதாரத் துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
வடகிழக்கு பருவமழைக் காலத்தையொட்டி ரேஷன் கடைகளில் போதிய பொருட்களை இருப்பு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேவையான உபகரணங்களுடன் மீட்புக்குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும், கூடுதல் உபகரணங்களை வாங்க ரூ.38.52 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். பருவமழை முன்னேற்பாடு குறித்து தலைமைச்செயலர் தலைமையில் முப்படை ஆய்வுக்கூட்டம் நடத்தவேண்டும். அக்டோபர் முதல் வாரத்திலிருந்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும், மழைக்காலத்தில் உயிர்சேதத்தை தவிர்க்க அனைத்துத்துறை செயலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நீதிபதி: பதில்மனு, விளக்கமனு தாக்கல் செய்யப்பட்டதா?
சிபிஐ தரப்பு:விசாரணை அறிக்கை, பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
ப.சி தரப்பு: விளக்கமனுவை தாக்கல் செய்தோம், தற்போது எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்கிறோம்.
நாசிக் மற்றும் ஆந்திராவில் இருந்து 3 நாட்களுக்குள் வெங்காயம் சென்னை வந்து சேரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. வெங்காயம் பதுக்கல் செய்யப்படாமல் மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசின் சிறப்பு நடவடிக்கையால், குறைவான விலைக்கு வெங்காயம் கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2008ம் ஆண்டு அருப்புக் கோட்டையில் கண்டெடுக்கப்பட்ட 6 சிலைகளை ரூ.6 கோடிக்கு விற்றதாக டி.எஸ்.பி காதர் பாட்ஷா மீது சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவினர் 2017ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை எதிர்த்து மனு கொடுத்தார் காதர் பாட்ஷா. ஆனால் அவ்வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்துவிட்டது.
திமுக இளைஞரணி செயலாளராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று திமுக எம்.பி. கவுதம சிகாமணி விருப்ப மனு அளித்துள்ளார். தன்னுடைய சொந்த செலவில் விருப்பமனுவை தாக்கல் செய்துள்ளார் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.
12ம் தேதி அன்று, பள்ளிக்கரணையில் சாலையில் இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்ற சுபஸ்ரீ என்ற பெண்ணின் மீது பேனர் விழுந்தது. நிலை தடுமாறி கீழே விழுந்த பெண் மீது லாரி ஏறியதால் அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், அந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மீது ஏன் நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று உயர் நீதிமன்றம் கேள்வி.
மழைகாலத்தை எதிர் கொள்ள தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் அறிவித்துள்ளார். அனைத்துத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை மாவட்டங்கள் தோறும் அமைத்திட வேண்டும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
அனைத்து விதமான பயன்பாடுகள் மற்றும் சேவைகளுக்கு ஒரே அடையாள அட்டை தேவைப்படுகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். 2021ம் ஆண்டுக்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார். மேலும் மக்கள் தொகை கணக்கெடுப்புகளுக்கு மொபைல் செயலிகள் பயன்படுத்தப்படும் என்றும் டிஜில் கணக்கெடுப்புக்கான மாற்றமாக இது இருக்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார். பாஸ்போர்ட், வங்கி கணக்குகள், ட்ரைவிங் லைசென்ஸ், ஆதார் அடையாள அட்டை என அனைத்தையும் ஒருங்கிணைக்கும் விதமாக டிஜிட்டல் கணக்கெடுப்பு அமையும் என்று அவர் கூறியுள்ளார்.
விஜகாந்தின் பிறந்தநாள் முன்னிட்டு ஆவடியில் நடந்த பொதுக் கூடத்தில் பேசிய தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா, " பேனர் வைக்க கூடாது என்று சொன்ன முதல் கட்சி தேமுதிக தான். சுப ஸ்ரீ மரணம் விதியால் நடந்தது. பேனர் விழுந்ததும், அதே நேரத்தில் லாரி வந்ததும் எதிர் பாராத விஷயம். ஆனால், இதை எதர்க் கட்சியினர் பெரிது படுத்துகின்றனர். ஆளும் கட்சியின் பேனர் என்பதால் தான் இவ்வவளவு சர்ச்சைகள்" என்று தெரிவித்துள்ளார்.
நாட்டில் பண நடமாட்டத்தை அதிகப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி பல முயற்சிகளை எடுத்து வந்திருந்தது. உதாரணமாக, ரெப்போ மற்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்தையும் படிப்படியாக குறைத்தது. ரெப்போ விகிதம் குறைந்தாலும், வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்காமலே இருந்து வந்தனர்.
இந்நிலையில், இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா - வீடு, வாகனம், சிறு மற்றும் குறுந்தொழில்களுக்கான கடன் வட்டி விகிதத்தை குறைத்துள்ளதாக தற்போது அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு , வரும் அக். 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக கட்சியில் போட்டியிட்ட கனிமொழி வெற்றி பெற்றார். பாஜக கட்சியில் போட்டியிட்ட தமிழிசை சௌந்தரராஜன் தோல்வியைச் சந்தித்தார். இதனைத் தொடர்ந்து, கனிமொழியின் வெற்றி செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழிசை மனுத் தாக்கல் செய்திருந்தார். சில , நாட்களுக்கு முன்பு தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கான மாநிலத்தின் ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார் . இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் செய்த மனுவை வாபஸ் செய்வதாக தமிழிசை தற்போது அறிவித்துள்ளார்.
I have asked my family to tweet on my behalf the following:
I am honoured that Smt. Sonia Gandhi and Dr. Manmohan Singh called on me today.
As long as the @INCIndia party is strong and brave, I will also be strong and brave.
— P. Chidambaram (@PChidambaram_IN) September 23, 2019
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் இடைக்கால காங்.தலைவர் சோனியா காந்தி இருவரும் திகார் ஜெயில் சென்று சிதம்பரத்தை சந்தித்து தற்போது கிளம்பியுள்ளனர். பின்னர், ட்விட்டரில் ப.சிதம்பரம், " சோனியா காந்தி, மன்மோகன் சிங் இருவரும் என்னை வந்து சந்தித்தை நான் பெருமையாகவே உணர்கிறேன். காங்கிரஸ் கட்சி தைரியமாகவும், வலுவாகவும் இருக்கும் வரை நானும் தைரியாமாக இருப்பேன்" தெரிவித்துள்ளார்.
ப.சிதம்பரத்தின் பதிலாக அவரது குடும்பத்தினர் இந்த ட்வீட் செய்வார்கள் என்பது குறிப்பிடத் தக்கது
கடந்த 5ம் தேதி முதல் ஐஎன்எக்ஸ் நிதி மோசடி வழக்கில் நிதிமன்றக் காவலில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ப.சிதம்பரம். டெல்லி திகார் சிறையில் இருந்தாலும், அவ்வபோது தனது கருத்துகளை ட்விட்டரில் தனது குடும்ப உதவியுடன் பதிவு செய்து வருகிறார். இந்நிலையில், இன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் இடைக்கால காங்.தலைவர் சோனியா காந்தி திகார் ஜெயில் சென்று சிதம்பரத்தை சந்தித்தனர்.
சிதம்பரத்தை சந்தித்து விட்டு இருவரும் வெளியேறும் காட்சிகள் தற்போது கிடைத்துள்ளன.
மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் புள்ளிகள் இன்று உயர்ந்த நிலையில் வணிகம் செய்யப்பட்டு வருகிறது. சென்சக்ஸ் 978 புள்ளிகள் உயர்ந்து 38,993 என்ற எண்ணிகையில் வணிகம் செய்யப்பட்டு வருகிறது. அதே போல், நிஃப்டியிலும் 291 புள்ளிகள் உயர்ந்து 11,565 என்ற எண்ணிக்கையில் வணிகம் செய்யப்பட்டு வருகிறது.
விஜய்- நயன்தாரா நடிப்பில் வெளியாக இருக்கும் பிகில் படத்தின் ஆடியோ லாஞ்ச், கடந்த செப்.19 ம் தேதியன்று சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடந்தது. இந்த ஆடியோ லாஞ்சில் விஜய் சுபஸ்ரீ விவகாரத்தைப் பற்றி பேசும் போது, " யார் மீது பழிபோடுறதுன்னு தெரியாம லாரி டிரைவர் மேலயும் பேனர் அச்சடிச்சவங்க மேலயும் பழிபோடுறாங்க" . யாரை எங்க உட்கார வைக்கணுமோ, அவங்களை அங்க உட்கார வச்சா நல்லா இருக்கும்” என்று சொல்லியிருந்தார். ஆளும் கட்சியில் இருக்கும் முன்னணி அமைச்சர்கள் இந்த பேச்சுக்கு தங்களது கண்டனத்தை தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்," படம் ஓட வேண்டும், அதற்கு விளம்பரம் வேண்டும், அதற்காக தான் ஒவ்வொரு ஆடியோ லாஞ்சிலும் இவ்வாறு விஜய் பேசி வருகிறார்" என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலை திமுக – காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றனர். பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்த அதிமுக-பாஜக இந்த இடைத் தேர்தலிலும் போட்டியிடுமா? நாங்குநேரி தொகுதியை அதிமுக, பாரதிய ஜனதாவிற்கு ஒதுக்குமா? என்ற கேள்விக்கு இன்னும் ஓரிரு நாட்களில் பதில் தெரிய வரும் என்று நம்பப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights