Advertisment

Tamil Nadu news today updates : பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் அறிவித்து அரசாணை

Tamil Nadu news today updates : தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today updates

Tamil Nadu news today updates

Tamil Nadu news updates : நிலவுக்கான அடுத்த பயணம் குறித்து ஆராய்ந்து வருகிறோம்,'' என, 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின்தலைவர், சிவன்தெரிவித்தார்.நிலவின் தென் துருவப் பகுதியை ஆராயும் வகையில், 'சந்திரயான் - 2' விண்கலத்தை,இஸ்ரோ சமீபத்தில் அனுப்பியது. அதன், 'ஆர்பிட்டர்' எனப்படும், நிலவை சுற்றி வந்து ஆய்வு செய்யும் சாதனம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.விக்ரம் லேண்டர் சாதனம் தொடர்பு இழந்தது குறித்து ஆராய, குழு அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Advertisment

தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பணப்புழக்கம் ஒரு பிரச்னை இல்லை: பெரிய அளவிலான நிதி நிறுவனங்களும், சிறிய அளவிலான மைக்ரோ நிதி நிறுவனங்களும் நாட்டில் மிக ஆழமாக வேரூன்றி உள்ளது. தேவை உள்ள பகுதிகளில் அவர்கள் கடன்களை நீட்டித்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் நேர்மறையான வளர்ச்சிக்கு குரல் கொடுத்து வருகின்றனர். பணப்புழக்கத்தில் சிக்கல் இருந்தால் அது மொத்தநிதி அமைப்பில் இருந்தது. சில்லறை வணிகத்தில் இல்லை.இந்த கூட்டம் உற்சாகம் தருவதாக இருந்தது. பல நல்ல விஷயங்களை நிர்வாகிகள் தெரிவித்தனர். பிரச்னை உள்ளதாக ஒருவர் கூட சொல்லவில்லை. பணப்புழக்கம் குறித்தும் ஒருவரும் புகார் தெரிவிக்கவில்லை.. என நிர்மலா சீதாராமன் கூறினார்.

Live Blog

Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, rainfall, Breaking : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    22:29 (IST)27 Sep 2019

    10 சதவீத போனஸ் அறிவித்து தமிழக அரசு அரசாணை

    தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு

    பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவுகளில் உள்ள பணியாளர்களுக்கு 10 சதவீத போனஸ் தொகை வரும் 30-ம் தேதி வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என அறிவிப்பு.

    22:28 (IST)27 Sep 2019

    தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழை சமர்ப்பித்தால் மட்டுமே ஒதுக்கீடு

    தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழை சமர்ப்பித்தால் மட்டுமே தமிழ் வழியில் படித்தவர்களுக்கான இடஒதுக்கீட்டை பெற முடியும் - சென்னை உயர்நீதிமன்றம்

    22:27 (IST)27 Sep 2019

    தமிழ் மொழிப்பாடம் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது

    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுகளில் இருந்து தமிழ் மொழிப்பாடம் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழே தெரியாமல் பிற மாநிலங்களிலிருந்து வருபவர்கள் தமிழக அரசு பணியில் சேர்வதற்கே இது வழிவகுக்கும், தமிழ அரசு இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும் - கனிமொழி

    21:24 (IST)27 Sep 2019

    டிசம்பர் 11ம் தேதி வாக்கு எண்ணிக்கை

    கர்நாடகாவில் ஒத்திவைக்கப்பட்ட 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் டிசம்பர் 5ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. டிசம்பர் 11ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    21:23 (IST)27 Sep 2019

    தீவிரவாதத்தை அதிதீவிர கோபத்துடன் அணுகுவோம்

    தீவிரவாதத்தை அதிதீவிர கோபத்துடன் அணுகுவோம், அதே நேரம் பேச்சுவார்த்தை நடத்தவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். தீவிரவாதிகளுக்கு சில நாடுகள் ஆதரவளித்து, எங்களை காயப்படுத்தி வருகின்றன - பிரதமர் மோடி

    20:35 (IST)27 Sep 2019

    யாதும் ஊரே யாவரும் கேளிர் - பிரதமர் மோடி

    யாதும் ஊரே யாவரும் கேளிர் என 3000 ஆண்டுகளுக்கு முன் எங்கள் நாடு கூறியது. எங்களுக்கென தனியாக கலை, கலாச்சாரம் இருக்கிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு முன்னுரிமை அளித்து வருகிறோம் - பிரதமர் மோடி

    20:32 (IST)27 Sep 2019

    2025ம் ஆண்டுக்குள் முற்றிலுமாக காசநோய் ஒழிக்கப்படும் - பிரதமர் மோடி

    கடந்த 5 ஆண்டுகளில் 11 கோடி கழிப்பறைகளை எங்கள் அரசு அமைத்துள்ளது. இந்தியாவில் 50 கோடி மக்களுக்கு காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் 370 மில்லியன் ஏழைகளுக்கு வங்கிக் கணக்குகள் துவங்கியுள்ளோம்.

    தண்ணீரை சிக்கனப்படுத்தும் வகையில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். 2025ம் ஆண்டுக்குள் முற்றிலுமாக காசநோய் ஒழிக்கப்படும். கடந்த 5 ஆண்டுகளில் 11 கோடி கழிப்பறைகளை எங்கள் அரசு அமைத்துள்ளது எனபிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    19:23 (IST)27 Sep 2019

    மொட்டை அடித்த நிர்மலா தேவி

    கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த பேராசிரியை நிர்மலா தேவி, உதவி பேராசிரியர் முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கிலிருந்து விரைவில் விடுதலையாக வேண்டி பேராசிரியர் நிர்மலா தேவி 2 வது முறையாக மொட்டையடித்தபடி நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அடுத்த மாதம் அக்டோபர் 4 ஆம் தேதி மூன்று பேரும் கண்டிப்பாக வழக்கறிஞர்களுடன் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.

    19:22 (IST)27 Sep 2019

    புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

    தமிழகத்தின் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுடன் காலியாக உள்ள புதுச்சேரியின் காமராஜர் தொகுதிக்கும் வரும் 23-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கு ஆளும் காங்கிரஸ் கட்சி மற்றும் பிரதான எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் ஆகியவை இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.

    இந்நிலையில் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பிரவீனா மதியழகன் உள்பட 3 பேர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    19:19 (IST)27 Sep 2019

    ஜெயகோபால் கைது செய்யப்பட்டிருப்பது ஆறுதல் - சுபஸ்ரீ பெற்றோர்

    பேனர் வழக்கில் ஜெயகோபால் கைது செய்யப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது. இந்த வழக்கில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து நீதி பெற்று தருவார்கள் என நம்புகிறோம் என சுபஸ்ரீ பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

    19:18 (IST)27 Sep 2019

    காய்ச்சலால் இறப்பு கூடாது

    தமிழகத்தில் காய்ச்சலால் இறப்பு கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    19:16 (IST)27 Sep 2019

    தமிழக ஆளுனரை சந்தித்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை

    சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சந்தித்து பேசியுள்ளார்.

    18:31 (IST)27 Sep 2019

    பத்து வருடம் கழித்து கிரிக்கெட்... வச்சு செய்த மழை

    பத்து வருடங்களுக்கு பின் இலங்கை அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் போட்டி கராச்சியில் இன்று தெடாங்க இருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக தொடர்ந்து அங்கு தொடர்ந்து மழை பெய்ததால் ஒரு பந்து கூட வீசாமல் போட்டி ரத்து செய்யப்பட்டது.

    18:26 (IST)27 Sep 2019

    நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்விலேயே பட்டியலிட வேண்டும்

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வழக்குகளை நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்விலேயே பட்டியலிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற பதிவுத்துறைக்கு வேதாந்தா குழுமம், அரசு துறைகள் கோரிக்கை விடுத்துள்ளது.

    18:25 (IST)27 Sep 2019

    காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் - பாஜக சார்பில் நேர்காணல் நிறைவு

    பாஜக சார்பில் நடைபெற உள்ள காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக 10 பேர் நேர்காணலில் கலந்துகொண்டனர். அடுத்த மாதம் 21ஆம் தேதி விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் காமராஜ் நகர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பாஜக சார்பில் இந்த நேர்காணல் நடைபெற்று நிறைவடைந்தது. நேர்காணல் நிறைவடைந்த நிலையில் பாஜக போட்டியிடுவது குறித்து கட்சி தலைமை அறிவிக்கும் என தகவல் தெரிவித்துள்ளனர்.

    18:23 (IST)27 Sep 2019

    குரூப் 2 முதல்நிலைத் தேர்வில் மொழித்தாள் நீக்கம்

    டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலைத் தேர்வில் மொழித்தாள் நீக்கம் - பிரதானத் தேர்வு அறிமுகம். முதல்நிலைத் தேர்வில் மொழித்தாளுக்கு பதிலாக பொது அறிவு வினாக்கள் அதிகரிப்பு.

    17:52 (IST)27 Sep 2019

    சுபஸ்ரீ பலியான விவகாரத்தில், பேனர் ஜெயகோபால் கைது

    சுபஸ்ரீ பலியான விவகாரத்தில், பேனர் ஜெயகோபால் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு வாரத்துக்கு மேலாக காவல்துறை தேடி வந்த நிலையில், கிருஷ்ணகிரியில் கைது.

    17:30 (IST)27 Sep 2019

    ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான உத்தரவு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு - டெல்லி உயர்நீதிமன்றம்

    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான உத்தரவை டெல்லி உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

    17:02 (IST)27 Sep 2019

    நீட் ஆள்மாறாட்ட விவகாரம் : உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசன் பணியிடை நீக்கம்

    நீட் ஆள்மாறாட்டம் விவகாரத்தில் உதித் சூர்யாவின் தந்தை மருத்துவர் வெங்கடேசனை பணியிடை நீக்கம் செய்து சுகாதாரத்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார். வெங்கடேசன் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார்.

    16:38 (IST)27 Sep 2019

    டாக்டராக விரும்பினேன் நல்ல மதிப்பெண் எடுக்காததால் நீதிபதி ஆகிவிட்டேன் - நீதிபதி கிருபாகரன் ஜாலி பேச்சு

    நீதிபதி கிருபாகரன்: எல்லோரும் டாக்டராக வேண்டும் என்று விரும்புவார்கள். நான் கூட டாக்டராக வேண்டும் என்று விரும்பினேன். நல்ல மதிப்பெண் எடுக்காததால் நீதிபதி ஆகிவிட்டேன் என்று ஜாலியாக தெரிவித்துள்ளார்.

    16:16 (IST)27 Sep 2019

    இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: இருவர் பலி

    இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் பூடானில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயிற்சி அளித்த இந்திய ராணுவ வீரரும், பயிற்சி பெற்ற பூடான் ராணுவ வீரரும் உயிரிழந்தனர்.

    15:57 (IST)27 Sep 2019

    அரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியும் என விதிகள் கொண்டு வந்தால் என்ன ? - நீதிபதி கேள்வி

    அரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியும் என விதிகள் கொண்டு வந்தால் என்ன ? என்று உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    15:20 (IST)27 Sep 2019

    திராவிட நாகரீகத்தின் தொட்டில் கீழடி - மு.க.ஸ்டாலின் கருத்து

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கீழடி அகழ்வாராய்ச்சி நடைபெறும் இடத்தை பார்வையிட்டது பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், “திராவிட நாகரீகத்தின் தொட்டிலாக, சங்கத் தமிழர்களின் புகழ் கூறும் வைகை ஆற்றங்கரையில் உள்ள புனித பூமியான கீழடியைப் பார்வையிட்டேன். இந்திய வரலாறு தெற்கிலிருந்து - தமிழகத்தில் இருந்து தான் தொடங்கப்பட வேண்டும் என்பதை கீழடி உறுதி செய்திருக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

    15:09 (IST)27 Sep 2019

    நான் கடவுள் நம்பிக்கை கொண்டவன் - நடிகர் சிவக்குமார்

    நடிகர் சிவக்குமார்: நான் கடவுள் நம்பிக்கை கொண்டவன். 5 வயதில் இருந்தே முருகனை வழிபட்டுவருகிறேன். கடவுள் என்பது உணரக்கூடிய விஷயம், கடவுளுக்கு வடிவம் இல்லை, ஆண்-பெண் என்ற வேறுபாடு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

    14:46 (IST)27 Sep 2019

    மும்பையைவிட தமிழகம் பிடித்துள்ளது - நீதிபதி விஜய் தஹில் ரமணி

    சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி விஜய் தஹில் ரமணிக்கு மெட்ராஸ் பார் அசோசியேஷன் சார்பில் பிரிவு உபசார விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய விஜய் தஹில் ரமணி: மும்பையில் இருப்பதை விட தமிழகம் பிடித்ததால்தான் சென்னையில் குடியேற விரும்புகிறேன்; அதற்காக இங்கு வீடு வாங்கியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

    14:28 (IST)27 Sep 2019

    கோவை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆள்மாறாட்டம் நடக்கவில்லை - மருத்துவக் கல்வி இயக்குனர்

    செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயண பாபு: கோவை மருத்துவ மாணவர்களின் புகைப்படங்களில் சிறு வித்தியாசம் இருந்தது, தவறு ஏதும் நடக்கவில்லை. ஆள் மாறாட்டங்களை தடுக்க, பயோ மெட்ரிக் முறையில்தான் இனி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று கூறினார்.

    14:23 (IST)27 Sep 2019

    மத்திய அரசு இந்திமொழியை திணிக்கவில்லை - தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா

    ஊடகங்களிடம் பேசிய சினிமா தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா: மத்திய அரசு இந்தி மொழியை திணிக்கவில்லை; மற்றொரு மொழியை தெரிந்துகொள்வதில் தவறு இல்லை. மக்களுக்கு பயன்படுகிறதா என்று பார்க்காமல் இதைவைத்து அரசியல் செய்கிறார்கள். பொதுமொழி ஒன்று இருப்பது அவசியம். ஒரு மொழி இருப்பதனால், இன்னொரு மொழி அழியும் என்ற பிரசாரம் ஒரு கும்பலால் தவறாகப் பரப்பப்படுகிறது. 90% தமிழர்களுக்கு மத்திய அரசின் திட்டம் தெரிவதில்லை. அதற்கு மொழி ஒரு காரணம் என்று தெரிவித்துள்ளார்.

    13:20 (IST)27 Sep 2019

    கீழடியில் அருங்காட்சியகம் – அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்பு

    கீழடியில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியகம் அமைக்கப்படும். மதுரை திருமலை நாயக்கர் மகாலை சர்வதேச தரத்திற்கு மாற்ற மத்திய அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளதாக கீழடி அகழாய்வு இடத்தை பார்வையிட்ட பின் பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்தார்.

    12:53 (IST)27 Sep 2019

    சென்னை காவல்துறைக்கு மத்திய அரசின் விருது

    சென்னை முழுவதும் பொதுமக்கள் உதவியுடன் மூன்றாவது கண் என்ற பெயரில் சி.சி.டி.வி கேமராக்களை நிறுவி செயல்படுத்தியமைக்காகவும், பணமில்லா பரிவர்த்தனையை சிறந்த முறையில் நடைமுறைபடுத்தியதற்காகவும் இவ்விருதுகள் வழங்கப்பட்டுள்ளது...

    12:25 (IST)27 Sep 2019

    தயார்நிலையில் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு தேவையான மருந்து வசதிகள்

    டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு தேவையான மருந்து வசதிகள் தமிழகம் முழுவதும் தயார் நிலையில் உள்ளது. டெங்கு காய்ச்சலால் தமிழகத்தில் ஒரு உயிரிழப்பு கூட நிகழக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். காய்ச்சல் ஏற்பட்டால் பொதுமக்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் எனறு அவர் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    11:56 (IST)27 Sep 2019

    கீழடி அகழாய்வு பணிகள் – திமுக தலைவர் ஸ்டாலின் பார்வை

    சிவகங்கை மாவட்டம் கீழடி பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிகளை, திமுக தலைவர் ஸ்டாலின் பார்வையிட்டார். கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் பழமையான பொருட்களை, அங்கு அருங்காட்சியகம் அமைத்து பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

    11:37 (IST)27 Sep 2019

    சுபஸ்ரீ மரண விவகாரம் : ஜெயகோபாலை பிடிக்க 5 தனிப்படை

    சுபஸ்ரீ மரண விவகாரத்தில் தலைமறைவாக உள்ள ஜெயகோபாலை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை திருச்சி, ஒகேனக்கல் பகுதிக்கு விரைந்துள்ளது. 

    பேனர் வழக்கு விசாரணையின் போது, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சரமாரி கேள்வி கேட்டதை தொடர்ந்து,  ஜெயகோபால் வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய நிலையில், தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    10:56 (IST)27 Sep 2019

    தமிழகத்தில் சொக்கத்தங்கத்தின் ஆட்சி நடக்கிறது – அமைச்சர் ஜெயக்குமார்

    தமிழகத்தில் பாரதிய ஜனதா ஆட்சி நடைபெறுகிறதா அல்லது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக ஆட்சி நடக்கிறதா என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியிருந்தார். திருமாவளவனின்  கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில் சொக்கத்தங்கத்தின் ஆட்சி நடப்பதாக தெரிவித்துள்ளார். 

    10:32 (IST)27 Sep 2019

    பொருளாதார மந்தநிலை குறைந்து விட்டது – நிர்மலா சீதாராமன்

    நாட்டின் பொருளாதார வளர்ச்சி, அடுத்த 6 மாதங்களில் சீரடையும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.பொருளாதார மந்தநிலை குறைந்து விட்டதாக குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன், வரவிருக்கும் பண்டிகை காலங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் என கூறினார். 

    09:54 (IST)27 Sep 2019

    ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று உரை

    ஐநா பொதுச்சபை கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் இன்று ( செப்டம்பர் 27ம் தேதி)  மாலை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் இரவு 8 மணியவில் பிரதமர் மோடி சர்வதேச தலைவர்கள் மத்தியில் பேச உள்ளார். மோடி ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பேசுவது இது 2வது முறையாகும். இதற்கு முன் 2014ம் ஆண்டும் அவர் ஐநா பொதுச் சபையில் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    09:23 (IST)27 Sep 2019

    விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை’ – நாசா

    நிலவின் தென்பகுதிக்கு சென்று தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட இஸ்ரோவின் விக்ரம் லேண்டரை, எங்கள் ஆர்பிட்டரால் கண்டுபிடிக்க முடியவில்லை என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.

    09:07 (IST)27 Sep 2019

    நீட் தேர்வுக்கு ‘பயோமெட்ரிக்’: தமிழக அரசு கடிதம்

    நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் கைரேகையை 'பயோமெட்ரிக்' முறையில் பதிவு செய்ய மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்படும்'' என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.  தமிழகத்தில் அடுத்தாண்டு முதல் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு வரும் மாணவர்களிடம் 'பயோமெட்ரிக்' முறையில் கைரேகை பதிவு செய்யப்படும். இந்த முறையை செயல்படுத்தும்படி 'நீட்' நுழைவு தேர்வு நடத்தும் தேசிய தேர்வு முகமைக்கு கடிதம் எழுதப்படும்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.

    08:32 (IST)27 Sep 2019

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு

    சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 16 காசுகள் அதிகரித்து ரூ.77.28 ஆகவும், டீசல், நேற்றைய விலையிலிருந்து 11 காசுகள் அதிகரித்து லிட்டர் ரூ.71.09 ஆகவும் உள்ளது

    08:29 (IST)27 Sep 2019

    அதிமுக வேட்பாளர்கள் 30ம் தேதி மனுத்தாக்கல்

    விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் செப்.,30 ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் முத்தமிழ்ச்செல்வனும், நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி நாராயணனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    Tamil Nadu news today updates : ஆதாருடன், 'பான்' எண்ணை இணைக்க தவறினால், பான் அட்டை பயனற்றதாகிவிடும் என, மத்திய நிதி துறை எச்சரித்துள்ளது. நாட்டில் உள்ள அனைவருக்கும், 12 இலக்க எண்களை கொண்ட, ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த அட்டையுடன், வருமான வரி கணக்கு தாக்கலுக்கு பயன்படும், பான் எண்ணை இணைக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கான கால அவகாசம், பலமுறை நீட்டிக்கப்பட்டது.இந்நிலையில், ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம், இம்மாதம், 30 உடன், முடிவுக்கு வருகிறது.

    தமிழகத்தில், 5,574 கோடி ரூபாய் முதலீட்டில், 28 ஆயிரத்து, 566 பேருக்கு, வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், புதிய தொழில்கள் துவங்க, 15 தொழில் நிறுவனங்களுடன், முதல்வர், இ.பி.எஸ்., முன்னிலையில், நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

    Tamil Nadu Tamil Nadu Politics
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment