Advertisment

Tamil Nadu news today updates : ரயில்வேயில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை- காந்தி ஜெயந்தி முதல் அமல்

Tamil Nadu news today updates : தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tejas train booking

tejas train booking

Tamil Nadu news updates : சிதம்பரத்திற்கு ஜாமின் மறுப்பு - மும்பையைச் சேர்ந்த, ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனத்திற்கு, அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி வழங்கியதில், முறைகேடு நடந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர், சிதம்பரம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில், முன் ஜாமின் கோரி, அவர் தாக்கல் செய்த மனுவை, டில்லி உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. அதனால், கைது நடவடிக்கையை தவிர்க்க, உச்ச நீதிமன்றத்தை அவர் அணுகியுள்ளார். உச்ச நீதிமன்றத்தில், சிதம்பரம் தாக்கல் செய்துள்ள, மேல் முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டால், அவர் கைதாவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

Advertisment

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் இரண்டாவது இடம் : தமிழகம், தொழில் சார்ந்த உதிரிபாகங்கள் உற்பத்தி செய்வதில், தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. தொழில் துறையில் முன்னேறிய மற்றும் தொழில் துவங்க உகந்த மாநிலமாகவும், தமிழகம் உள்ளது.சட்டம் - ஒழுங்கு பிரச்னை இல்லாத, சாலை, ரயில், கப்பல் போக்குவரத்து வசதி உடைய மாநிலமாகவும் உள்ளது.மேலும், 37 ஆயிரத்து, 720 தொழிற்சாலைகளுடன், எண்ணிக்கையில், இந்திய அளவில், முதல் இடத்தில் உள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், மகாராஷ்டிராவுக்கு அடுத்து, இரண்டாவது இடத்தில் உள்ளதாக தொழில் துறை அமைச்சர், எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.

சேலம், திருச்சி மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு உள் தமிழகத்தில் தொடரும் கனமழை... பொதுமக்கள் மகிழ்ச்சி

Live Blog

Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, rainfall, Diwas, Breaking : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    17:12 (IST)21 Aug 2019

    தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்

    தமிழ்நாடு தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்தார்கள். இதனால் சென்னையில் குடிநீர் வினியோகம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

    சென்னை பெருநகர குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் ஹரிஹரனுடன், தமிழ்நாடு தண்ணீர் லாரி உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை மேற்கொண்டிருக்கிறார்கள்.

    16:59 (IST)21 Aug 2019

    பிரியங்கா சோப்ரா மீது பாகிஸ்தான் புகார்- ஐ.நா.வுக்கு கடிதம்

    பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக பேசி வருவதால், ஐ.நா.வின் அமைதிக்கான நல்லெண்ண தூதரகராக உள்ள அவரை நீக்க வேண்டும் என ஐ.நா. சபைக்கு பாகிஸ்தான் அரசு கடிதம் எழுதியிருக்கிறது.

    16:44 (IST)21 Aug 2019

    ரயில்வேயில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை- காந்தி ஜெயந்தி முதல் அமல்

    இந்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘50 மைக்ரானுக்கு குறைவான தடிமன் கொண்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. அக்டோபர் 2ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும். பயணிகள் மறு சுழற்சி செய்யக்கூடிய பைகளை உற்பத்தி செய்யவும் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறது’ என கூறப்பட்டிருக்கிறது.

    16:37 (IST)21 Aug 2019

    சிதம்பரம் மீண்டு வருவார்: துரைமுருகன்

    திமுக பொருளாளர் துரைமுருகன் அளித்த பேட்டியில், ‘சிதம்பரம் சிறந்த வழக்கறிஞர் என்பதனால் அவர் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றங்கள் குறித்த விசாரணையை எவ்வாறு சமாளிப்பது என்று அவருக்கே தெரியும். அவர் மீண்டு வருவார்’ என்றார்.

    15:04 (IST)21 Aug 2019

    நாளை சென்னைக்கு 380-வது பிறந்த நாள்

    கிழக்கு இந்திய நிறுவனம் வர்த்தக காரணங்களுக்காக 1639-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ல் அன்றைய நாயக்கர்களிடம் இருந்து வாங்கியது.சென்னை தினத்தை முன்னிட்டு மக்கள் மாநகரத்தின் பல பகுதிகளில் சிறப்பு ஏற்பாடு செய்து கொண்டாடி வருகின்றனர்.

    14:08 (IST)21 Aug 2019

    சந்திராயன் -2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை மாற்றம் - இஸ்ரோ

    நிலவின் சுற்றுப்பாதையில் சுற்றிவரும் சந்திராயன் -2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை வெற்றிகரமாக மாற்றப்பட்டப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    14:03 (IST)21 Aug 2019

    சிதம்பரம் மீதான நடவடிக்கைகளுக்கு அரசியல் காழ்ப்புணர்வே காரணம் – ஸ்டாலின்

    சிதம்பரம் மீதான நடவடிக்கைகளுக்கு அரசியல் காழ்ப்புணர்வே காரணம், ப.சிதம்பரம் ஒரு சட்ட வல்லுனர்,வழக்கை சட்டரீதியாகவே அவர் சந்திப்பார்  என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

    13:29 (IST)21 Aug 2019

    சிதம்பரம் வழக்குகளை எதிர்கொள்ள வேண்டும் – அமைச்சர் ஜெயக்குமார்

    காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், தன்மீதான வழக்குகளை எதிர்கொள்ள வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

    13:18 (IST)21 Aug 2019

    சிதம்பரத்திற்கு லுக்அவுட் நோட்டீஸ் - ஹெச்.ராஜா கருத்து

    நிதிமோசடி செய்தவர்கள் வெளிநாடு தப்பிச்சென்றிருப்பதை கருத்தில்கொண்டு ப.சிதம்பரம் விவகாரத்தில் சிபிஐ நடவடிக்கை எடு்ததுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே ப.சிதம்பரத்திற்கு எதிராக லுக்-அவிட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பா.ஜ. தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

    அவர் மற்றொரு பதிவில் தெரிவித்துள்ளதாவது, ப.சிதம்பரம் Scam Kingpin என்று டில்லி உயர்நீதிமன்றம். விசாரணையில் ஒத்துழைக்க மறுத்தார். மழுப்பலாக பதிலளித்தார் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே அவரை கஸ்டடியில் எடுத்து விசாரித்தால் தான் உண்மை வெளிவரும் என்று கூறியுள்ளார்.

    13:00 (IST)21 Aug 2019

    தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

    தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கிருஷ்ணகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    12:28 (IST)21 Aug 2019

    கிரண்பேடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

    புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் துணை நிலை ஆளுநர் தலையிட கூடாது என்ற உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மத்திய உள்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவுக்கு செப். 4-ம் தேதிக்குள் பதிலளிக்க கிரண்பேடிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

    12:25 (IST)21 Aug 2019

    ஊழல் செய்தால் தண்டனை அனுபவித்துதான் தீர வேண்டும் – பிரேமலதா

    உப்பைத் தின்றால் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும், ஊழல் செய்தால் தண்டனை அனுபவித்துதான் தீர வேண்டும் என்று சிதம்பரம் விவகாரத்தில் பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

    12:00 (IST)21 Aug 2019

    அவலாஞ்சி மின் நிலையத்தில் மழையால் ரூ. 8 கோடி சேதம்

    அவலாஞ்சி மின் நிலையத்தில் மழை பாதிப்பு சேத மதிப்பீடு, 8 கோடி ரூபாய்,' என, கணக்கிடப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே அவலாஞ்சியில், கடந்த, 7,8,9 தேதிகளில், 2,978 மி.மீ., மழை அளவு பதிவானது குறிப்பிடத்தக்கது.

    11:02 (IST)21 Aug 2019

    சிதம்பரம் மீதான நடவடிக்கை அரசியல் பழிவாங்கல் அல்ல – தமிழிசை

    சிதம்பரம் மீதான நடவடிக்கை அரசியல் பழிவாங்கல் அல்ல என்று தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

    10:33 (IST)21 Aug 2019

    கேரள முதல்வர் பினராயி விஜயன் மீண்டும் தமிழில் டுவீட்

    கேரளாவை புனரமைப்போம் முதலமைச்சர் நிவாரண நிதியில் நமது பங்களிப்பை செலுத்துவோம்  என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழில் டுவீட் செய்துள்ளார்.

    இத்துடன் முதலைமச்சர் பேரிடம் நிவாரண நிதி வங்கி கணக்கையும் இணைத்துள்ளார்.

    09:58 (IST)21 Aug 2019

    அத்திவரதர் உற்சவத்தில் ரூ.9 கோடி உண்டியல் வசூல் – அறநிலையத்துறை

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நடைபெற்ற அத்திவரதர் வைபவத்தில் ர;.9.89 கோடி காணிக்கையாக பெறப்பட்டுள்ளதாக இந்து அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. மொத்தம் 48 நாட்கள் நடைபெற்ற வைபவத்தில் உண்டியல் காணிக்கையாக ரூ.9,89,71,731 வசூலாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    09:33 (IST)21 Aug 2019

    பாஜக அரசின் தவறுகளை சுட்டிக்காட்டியவர் சிதம்பரம் – பிரியங்கா

    காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்திற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது, நாட்டிற்காக விசுவாசமாக பணியாற்றியவர் சிதம்பரம். அரசின் தோல்விகளை வெளிப்படுத்தியதால் சிதம்பரம் வேட்டையாடப்படுகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

    09:24 (IST)21 Aug 2019

    பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

    சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.74.62 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.68.79 காசுகளாகவும் உள்ளது. 

    09:00 (IST)21 Aug 2019

    தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் இன்றுமுதல் வேலை நிறுத்தம்

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று முதல் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    Tamil Nadu news today updates : இரண்டு தேஜஸ் ரயில்கள் தனியார்மயம் : குறிப்பிட்ட ரயில்களை தனியார்மயமாக்கும் திட்டத்தின் கீழ், ஆமதாபாத் - மும்பை சென்ட்ரல் - தேஜஸ் எக்ஸ்பிரஸ் மற்றும் டில்லி - லக்னோ தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில்கள், சோதனை அடிப்படையில் தனியார் மூலம் இயக்கப்பட உள்ளன.உலகத் தரம் வாய்ந்த வசதிகளை தரும் வகையில், குறிப்பிட்ட ரயில்களை, தனியார் மூலம் இயக்குவதற்கு, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    டிஸ்கவரி சேனலில் பிரபலமான, 'மேன் வெர்சஸ் வைல்டு' என்ற நிகழ்ச்சிக்காக, தொகுப்பாளர் பியர் கிரில்சுடன் இணைந்து, பிரதமர் மோடி, அடர்ந்த காடுகளில் மேற்கொண்ட சாகச பயண நிகழ்ச்சி ஒளிபரப்பு, உலகின் மிகவும் பிரபலமான டி.வி. டிரெண்டிங் நிகழ்ச்சியில் முதலிடம் பெற்றுள்ளது.

    Tamil Nadu Tamil Nadu Politics
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment