Advertisment

Tamil Nadu news today updates : சேலத்தில் 66 ஏக்கரில் பஸ் போர்ட் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

Tamil Nadu news today updates : தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates

Tamil Nadu news updates 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு : தமிழகத்தில், பெரும்பாலான மாவட்டங்களில், இன்றும், நாளையும் மழை பெய்யும்; 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வேலுார் ஆலங்காயத்தில், ஒரே நாளில், 15 செ.மீ., மழை பெய்தது. வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக, வட மாவட்டங்களின் வறட்சி நிலை மாறுகிறது. தொடர் மழையால், பல பகுதிகளில் ஏரிகள் நிரம்புவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisment

நிலவை நோக்கி சந்திரயான்-2 பயணம் : இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான, 'இஸ்ரோ' நிலவில் ஆய்வுகள் மேற்கொள்ள அனுப்பியுள்ள, 'சந்திரயான் - 2' விண்கலம், செப்டம்பர், 7ல், அங்கு தரையிறங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

பராமரிப்புபணி காரணமாக, சென்னையின் பலபகுதிகளில் நாளை (ஆகஸ்ட் 20) மின்விநியோகம் தடைசெய்யப்பட உள்ளது. சென்னையில் நாளை மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள்

பவானிசாகர் அணை, இன்று, 65வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. சேலம் மாவட்டம், மேட்டூர் அணைக்கு அடுத்த பெரிய அணை மற்றும் தென் மாநிலங்களில், மிகப்பெரிய மண் அணை என்ற பெருமை, ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணைக்கு உண்டு.அணையின் மொத்த உயரம், 105 அடி. 32.8 டி.எம்.சி., நீர் தேக்க முடியும். அணையின் முழு நீர்தேக்கப் பரப்பு, 30 சதுர மைல். கரையின் நீளம், 8.78 கி.மீ., ஆகும்.கீழ்பவானி பிரதான கால்வாயின் நீளம், 200 கி.மீ.,யாக உள்ளது. பிரதான கால்வாயில் இருந்து, 800 கி.மீ.,க்கு கிளை வாய்க்கால்களும், 1,900 கி.மீ.,க்கு, பகிர்மான வாய்க்கால்களும் வெட்டப்பட்டு உள்ளன.

வேலூரில் கனமழை, காட்டாற்று வெள்ளம் தமிழகத்தில் மழைப்பொழிவு குறித்து அறிந்துகொள்ள

Live Blog

Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, rainfall, Breaking : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    19:21 (IST)19 Aug 2019

    போரூர் மருத்துவமனையில் வைகோ

    சென்னை போரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுரையிலிருந்து சென்னை திரும்பிய வைகோ உடல்நலக்குறைவு காரணமாக போரூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

    18:57 (IST)19 Aug 2019

    சேலத்தில் பிரம்மாண்ட பஸ் போர்ட் - முதல்வர்

    சேலத்தில் 66 ஏக்கர் நிலப்பரப்பில் மிகப்பெரிய பிரமாண்ட பஸ் போர்ட் அமைக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    18:39 (IST)19 Aug 2019

    நீலகிரியில் விளையாட்டு மையங்கள் அமைக்க கோரிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்

    நீலகிரி போன்ற மலைப்பகுதிகளில் சிம்லா மற்றும் இமயமலை பகுதிகளில் உள்ளது போன்று விளையாட்டு மையங்களை அமைக்க வேண்டும் என மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது - அமைச்சர் செங்கோட்டையன்

    18:01 (IST)19 Aug 2019

    வெளி மாநில மாணவர்களுக்கு நோட்டீஸ்

    தமிழகத்தில் மருத்துவப்படிப்பு கலந்தாய்வில் பங்கேற்றதாக கூறப்படும் வெளி மாநில மாணவர்கள் 126 பேருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ்

    17:59 (IST)19 Aug 2019

    அனந்தசரஸ் குளத்தில் ஆழ்துளைக் கிணற்றின் நீரை நிரப்ப வேண்டும் - ஐகோர்ட்

    அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தில் ஆழ்துளைக் கிணற்றின் நீரை நிரப்ப வேண்டும்; பொற்றாமரைக் குளத்தின் நீரை அனந்தசரஸ் குளத்தில் நிரப்பக்கூடாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    பொற்றாமரைக் குளத்தின் நீர் இளம்பச்சை நிறத்தில் உள்ளதால் பாசி படிய வாய்ப்பு என மாசுக்கட்டுப்பாடு வாரியம் தகவல் தெரிவித்ததால் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

    17:06 (IST)19 Aug 2019

    கர்நாடக அமைச்சரவை நாளை காலை பதவி ஏற்கிறது

    குமாரசாமி ஆட்சி கடந்த மாதம் கலைக்கப்பட்ட பிறகு முதல்வராக பி.எஸ். எடியூரப்பா ஆட்சி பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனால் அமைச்சரவையில் யாரும் பொறுப்பினை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில் நாளை காலை 10:30 மணி முதல் 11:00 மணி வரை ஆளுநர் மாளிகையில் கர்நாடக அமைச்சரவை பதவி ஏற்கிறது.

    16:47 (IST)19 Aug 2019

    கல்விக்கென புதிய தொலைக்காட்சி

    பள்ளிக்கல்வித் துறை சார்பில் கல்விக்காக புதிய தொலைக்காட்சி ஒன்றை அறிமுகம் செய்யும் திட்டம் வெகு நாட்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட நிலையில் ஆகஸ்ட் 26ம் தேதி முதல் அந்த தொலைக்காட்சி ஒளிபரப்பாகிறது. காணொளி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த திட்டத்தை துவங்கி வைக்கிறார்.

    16:32 (IST)19 Aug 2019

    செய்தியாளர்கள் சந்திப்பில் ஜெ. தீபா

    எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையை அதிமுகவுடன் இணைப்பதாக அறிவித்தார் ஜெ. தீபா . நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கருத்துகள் அடிப்படையில் இந்த முடிவினை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளார் ஜெ. தீபா. தொண்டர்கள், உறுப்பினர்கள், நிர்வாகிகள் அனைவரும் இணைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கடிதங்கள் மூலமாக வற்புறுத்திக் கேட்டுக் கொண்டதன் விளைவாக இந்த முடிவை எட்டியுள்ளதாகவும் அவர் அறிவிப்பு.

    16:20 (IST)19 Aug 2019

    மத உணர்வை தூண்டும் படி பேசிய ஜீயருக்கு சம்மன்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மத உணர்வை தூண்டும் படி பேசியதாக காவல்துறை அவருக்கு சம்மன் அளித்துள்ளது. ஜூலை மாதம் 22ம் தேதி “கடந்த காலத்தில் இஸ்லாமியர்களின் நடவடிக்கைகளுக்கு அஞ்சியே அத்தி வரதர் குளத்துக்குள் வைக்கப்பட்டார். தற்போது அப்படி ஒரு நிலை இல்லை” என்று அவர் பேசியதால் காவல்துறை நடவடிக்கை.

    15:45 (IST)19 Aug 2019

    மாநிலங்களவை உறுப்பினரானார் மன்மோகன் சிங்... போட்டியின்றி தேர்வு

    ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். போட்டியின்றி எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அறிவிப்பு.

    15:43 (IST)19 Aug 2019

    கொடநாடு கொலை சம்பவத்துடன் முதல்வரை ஒப்பிட்டு ஸ்டாலின் பேசிய விவகாரம்

    கொடநாட்டில் நடைபெற்ற மர்ம கொலைகளை முதல்வருடன் ஒப்பிட்டு பேசினார் ஸ்டாலின். முதல்வர் குறித்து அவதூறு பேசியதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. தமிழக அரசாணைப்படி, மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2 வழக்குகள் தொடரப்பட்டன. தற்போது மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்துக்கு அவ்வழக்கு மாற்றம்.

    15:37 (IST)19 Aug 2019

    ரூ. 100 கோடியில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஒப்புயர்வு மையம்

    புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ. 100 கோடியில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஒப்புயர்வு மையம் அமைக்கப்படும் என்று சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு.

    15:34 (IST)19 Aug 2019

    ரூ. 500 கோடியில் 1,829 ஏரிகள் தூர்வாரப்படும் - முதல்வர்

    தமிழகத்தில் வீடு இல்லாதவர்களே இல்லை என்ற நிலை உருவாகும். அதற்கான தொடர் முயற்சியில் நாங்கள் ஈடுபடுவோம் என்றும், நாட்டில் மருத்துவ வசதி மற்றும் உட்கட்டமைப்பில் முதன்மையான மாநிலமாக தமிழகம் விளங்குவதாக முதல் அமைச்சர் அறிவிப்பு. மேலும் ரூ. 500 கோடியில் 1,829 ஏரிகள், குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

    15:27 (IST)19 Aug 2019

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடரும் மழை

    நீலகிரி, ஈரோடு, மற்றும் வேலூர் மாட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    14:51 (IST)19 Aug 2019

    கட்டாயமாகும் மழை நீர் சேகரிப்பு முறை

    தொழில் நிறுவனங்கள், வீடுகள், உள்ளிட்ட அனைத்து கட்டிடங்களிலும் மழை நீர் சேகரிப்பு முறையை அடுத்த மூன்று மாதங்களுக்குள் நிறுவ வேண்டும் என உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உத்தரவு. மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் அரசு தக்க நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் எச்சரிக்கை

    14:41 (IST)19 Aug 2019

    முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு அமலாக்கதுறை சம்மன்

    ப. சிதம்பரம் இந்தியாவின் முன்னாள் நிதி அமைச்சராக இருந்த போது ஏர் இந்தியா நிறுவனத்திற்கு தேவையான விமானங்களை வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் அளித்துள்ளது. 23ம் தேதி விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

    14:08 (IST)19 Aug 2019

    வேலூரில் நில அதிர்வு

    அதிகப்படியாக கொட்டித்தீர்த்த மழையால் ஏற்கனவே வேலூரின் பல்வேறு பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வேலூர் வாணியம்பாடி அருகே உள்ள கபூராபாத், வேப்பம்பட்டு, ஜனதாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

    14:03 (IST)19 Aug 2019

    நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது எப்போது ?

    தென் தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களின் நீர் நிலைகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை எப்போது அகற்றுவீர்கள் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி. தலைமைச் செயலாளர் தலைமையில் குழுவை விரைவில் அமைத்து, எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அக்டோபர் 3ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவு. 

    14:01 (IST)19 Aug 2019

    பாஜக கூட்டணி கட்சி தான் ஆட்சி அமைக்கும்

    பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி தான் அடுத்த முறை தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேச்சு.

    13:52 (IST)19 Aug 2019

    மீம்ஸ் இல்லாமல் சமூக வலைதளம் இல்லை - மாஃபா பாண்டியராஜன்

    கார்ட்டூனகள் இல்லாமல் பத்திரிக்கைகள் இல்லை. அதைப் போலத்தான் தற்போது மீம்ஸ்கள் இல்லாமல் சமூக வலைதளங்களும் இல்லை. மீம்ஸ்களை அவமதிப்பது நேரடியாக கார்ட்டூன்  என்ற கேலிச்சித்திரங்களை அவமதிப்பதாகும் என்று மாஃபா பாண்டியராஜன் அறிவித்துள்ளார். 

    13:32 (IST)19 Aug 2019

    காஷ்மீர் விவகாரம் : டில்லியில் 22ம் தேதி ஆர்ப்பாட்டம் – ஸ்டாலின்

    காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லி ஜந்தர்மந்தரில் 22ம் தேதி திமுக சார்பில் அனைத்துக்கட்சி எம்பிக்களின் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று  திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    13:00 (IST)19 Aug 2019

    சென்னையில் மாலை அல்லது இரவில் மிதமான மழைக்கு வாய்ப்பு

    சென்னையில் மாலை அல்லது இரவு நேரத்தில் இடியுடன் கூடிய  மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மேலடுக்கு சுழற்சி காரணமாக, மதுரை, சிவகங்கை, நாமக்கல் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    12:38 (IST)19 Aug 2019

    தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பில்லை - அமைச்சர் கருப்பணன்

    தமிழகத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பில்லை என்று அமைச்சர் கே.சி. கருப்பணன் தெரிவித்துள்ளார்.  உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரி திமுக தொடர்ந்த வழக்கை திரும்ப பெற்றால் டிசம்பரில் தேர்தலை நடத்த தயார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

    11:40 (IST)19 Aug 2019

    டூவீலரின் பின்னால் அமர்ந்திருப்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்

    தமிழகத்தில் இனி இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவர்களும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காதவர்களிடம் இ-சலான் இயந்திரம் மூலம், அபராதம் வசூலிக்கும் முறை தொடங்கப்பட்டுள்ளாக அவர் மேலும் கூறினார்.

    11:01 (IST)19 Aug 2019

    தமிழகத்தில் சிறப்பு குறை தீர்க்கும் திட்டங்கள் துவங்கின

    தமிழகத்தில் முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டங்கள் துவங்கின. மக்களின் மனுக்கள் கணினியில் பதியப்பட்டு ஒரு மாதத்திற்குள் தீர்வு எட்டுவதற்காக புதிய திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே பெரிய சோரகை பகுதியில் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார் .

    10:49 (IST)19 Aug 2019

    எலி மருந்துக்கு தடைவிதிக்க அரசுக்கு பரிந்துரை - அமைச்சர் விஜயபாஸ்கர்

    தமிழகத்தில் தற்கொலை செய்துகொள்பவர்கள் எலி மருந்தையே  அதிகம் பயன்படுத்துவதால், அந்த மருந்துக்கு தடை விதிக்க அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக கணிசமாக அதிகரித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

    10:46 (IST)19 Aug 2019

    ரஜோரி மாவட்டத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் 2 வாரங்களுக்கு பிறகு, இன்று ( ஆகஸ்ட் 19ம் தேதி) மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை மத்திய அரசு நீக்கியதை தொடர்ந்து பதற்ற நிலை ஏற்படும் என்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    10:28 (IST)19 Aug 2019

    இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

    இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு வந்த இ.மெயிலை தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் உள்ள இந்திய அணி வீரர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    09:48 (IST)19 Aug 2019

    வளைகுடா நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம்

    பிரதமர் மோடி வரும் 23ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டிற்கும் தொடர்ந்து இரண்டு நாட்கள் பஹ்ரைன் நாட்டிற்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருப்பவதாவது: இந்தியாவில் இருந்து பஹ்ரைன் நாட்டிற்கு செல்லும் முதல் பிரதமர் மோடி ஆவார். 

    09:26 (IST)19 Aug 2019

    சென்னையில் குறைந்தது பெட்ரோல், டீசல் விலை

    சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 7 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.74.62 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 9 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.68.86 காசுகளாகவும் உள்ளது.

    09:23 (IST)19 Aug 2019

    ஆவின் பால் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது

    தமிழகத்தில் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் கடைகளில் டீ, காபி விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு நான்கு ரூபாயும் விற்பனை விலையை லிட்டருக்கு ஆறு ரூபாயும் உயர்த்தியுள்ளது.

    Tamil Nadu news today updates : காஷ்மீர் பிரச்னையில், மத்திய அரசின் நிலையை ஆதரித்த ரஜினிக்கு நன்றி. அவருடன் கூட்டணி அமையுமா என்பதற்கு, காலம் தான் பதில் சொல்லும்,'' என, பா.ஜ., மாநிலத் தலைவர், தமிழிசை கூறினார்.

    ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் மாற்றம்: ''தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப, பல நாடுகளுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலை மாற்றி அமைக்க வேண்டும். ''பயங்கரவாதத்தை ஒழிக்க அனைத்து நாடுகள் இடையிலும் கூட்டு முயற்சி தேவை. பயங்கரவாதத்தை ஆதரித்து வரும் நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும்,'' என்று, லிதுவேனியா சென்றுள்ள, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வலியுறுத்தினார்.

    Tamil Nadu Tamil Nadu Politics
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment