Tamil Nadu news today updates coronavirus death tolls rise 2 in India : இந்தியாவில் கொரொனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வர பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவில், வழிபாட்டுத் தலங்கள், மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் ஆகியவற்றிற்கும் மக்கள் வரவேண்டாம் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் ஆகியவையும் மூடப்பட்டுள்ளது. மேலும் படிக்க : கொரோனா பாதிப்பு: கோவிலுக்கு வராதே என்றால் அது பக்தியா? பகுத்தறிவா? – ஆ.ராசா
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"
Jammu Kashmir Former Chief Minister Farooq Abdullah released
ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஃபரூக் அப்துல்லா நேற்று விடுதலை செய்யப்பட்டார். விடுதலைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஃபரூக் அப்துல்லா, “இன்று எனக்கு பேச வார்த்தைகள் இல்லை. நான் இன்று சுதந்திரமாக இருக்கிறேன். இப்போது, நான் டெல்லிக்குச் சென்று பாராளுமன்றத்தில் கலந்துகொண்டு உங்களுக்காக பேச முடியும்” என்றும் “தடுப்புக்காவலில் இருக்கும் அனைவரும் விடுதலை செய்யப்பட்டால் தான் அது முழுமையான சுதந்திரம்” என்றும் அவர் கூறினார். முழுமையான செய்திகளைப் படிக்க
Live Blog
Tamil Nadu news today updates : ரஜினி அரசியல் வருகை, தமிழகத்தின் வானிலை, அரசியல் நிலவரங்கள், கொரொனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து அப்டேட்களையும் இங்கே அறிந்து கொள்ளுங்கள்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேராசிரியர் அன்பழகன் படத்தை திறந்துவைத்து பேசிய, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “தனிப்பட்ட முறையில் எனக்கு தனிப்பட்ட இழப்பு; எனக்கு தொடர்ந்து தோள் கொடுத்தவர் பேராசிரியர் அன்பழகன். அவர்
வழிகாட்டியாக மட்டுமல்ல தந்தையாகவும் பேராசிரியர் இருந்தார் என்றால் அது மிகையல்ல.” என்று உருக்கமாக பேசினார்.
சென்னையில் அண்ணா அறிவாலயத்தில், மறைந்த திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் படத்தை திமுக தலைவர் ஸ்டாலின் திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன், “தி.மு.க எனும் மாபெரும் இயக்கத்தின் இரட்டைக் கோபுரமாக கலைஞரும், பேராசிரியரும் விளங்கினார்கள். அந்தக் கோபுரங்களை அடுத்தடுத்து காலன் சாய்த்துவிட்டான். நாங்கள் கலங்கி நிற்கிறோம். ஸ்டாலின் தான் இனிமேல் எங்களுக்கு கலைஞர்; பேராசிரியர்” என்று கூறினார்.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இந்தியா உள்ளிட்ட சார்க் நாடுகளுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்த உள்ளார். பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று சார்க் நாடுகளின் தலைவர்கள் நாளை மாலை 5 மணிக்கு காணொலியில் ஆலோசனை நடத்த உள்ளனர்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், செல்போன்களுக்கான ஜிஎஸ்டி வரியை 12%-ல் இருந்து 18%ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. செல்போன்களின் குறிப்பிட்ட பாகங்களுக்கான ஜிஎஸ்டி வரியும் 12%-ல் இருந்து 18%ஆக உயர்த்தப்படும் என்று கூறினார்.
விசிக தலைவர் திருமாவளவன்: “தமிழகத்தில் மதவாதமும், சாதியவாதமும் சூழும் நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிகப்பெரிய சவாலை சந்திக்கவுள்ளார். சமூகநீதியை காப்பாற்றும் என்ற நோக்கில் தான் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம்; திமுக அழிந்தால் சமூகநீதியை அழித்துவிடலாம் என சிலர் நினைக்கிறார்கள்” என்று கூறினார்.
சிஏஏ தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய மமக தலைவர் ஜவாஹிருல்லா, சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தினோம். என்பிஆர்-ல் சில அம்சங்களை நீக்குவது தொடர்பாகவும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினோம் என்று கூறினார்.
எல்கேஜி, யூகேஜிக்கு விடுமுறை நிறுத்திவைப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி: எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு விடுமுறை தான். முறையான அறிவிப்பு நாளை வெளியாகும். கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினோம். கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து விரைவில் அறிக்கை வெளியிடப்படும் என்று விளக்கம் அளித்துள்ளார்.
தெலங்கானா சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெலங்கானாவில் இன்று மேலும் ஒரு நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தாலி சென்று வந்துள்ள அந்த நபருக்கு தெலங்கானா அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சை அளித்து ககண்காணிக்கப்பட்டு வருகிறார் என்று தெரிவித்துள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக இஸ்லாமியர்களிடையே ஏற்பட்டுள்ள சந்தேகங்களை களைய தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு 43 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தலைமைச் செயலாளர் அழைப்பு விடுத்திருந்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையிலான ஆலோசனையில் டிஜிபி, காவல் ஆணையர், ஹஜ் கமிட்டியின் அபுபக்கர், ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்ற்றுளனர்.
அகில இந்திய கால்பந்து சம்மேளனம் (ஏஐஎஃப்எஃப்): அனைத்து ஹீரோ - 1 லீக் போட்டிகளையும் மார்ச் 15 முதல் நிறுத்தியுள்ளது. மேலும், அனைத்து ஹீரோ 2 வது பிரிவு, ஹீரோ யூத் லீக்ஸ், கோல்டன் பேபி லீக்ஸ் மற்றும் தேசிய போட்டிகளும் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளன.
கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ செலவுகளை மாநில அரசே நிர்ணயிக்கும் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதோடு கொரொனாவை தேசிய பேரிடராகவும் அறிவித்தது.
கொரோனா எதிரொலியாக திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வரர் கோவிலில், பக்தர்களின் வருகை வெகுவாக குறைந்துள்ளது. முன்னதாக, வெளிநாட்டவர், சளி, இருமல் உள்ளவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்கும் படியும், அரசு அறிவுறுத்தி இருந்தது. சனிக்கிழமைகளில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும் நிலையில், கொரோனா அச்சம் காரணமாக, குறைவான பக்தர்களே வருகை புரிந்தனர்.
நடிகர் ரஜினிகாந்த் அவரது பலம் எது, பலவீனம் எது என்று ஆராய்ந்து பேசியிருப்பதாக திமுக எம்பி தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், வரலை என்று சொன்னவரை விட்டு விடுங்கள் என்றும், திரும்ப திரும்ப தொந்தரவு படுத்த வேண்டாம் என்றும் கூறியதோடு, ரஜினி எங்கே இருந்தாலும் அவருக்கு வாழ்த்துக்கள் என்றும் தயாநிதி மாறன் கூறினார்.
அரசியல் மாற்றம் குறித்து கூறிய கருத்துகளை மக்களிடம் கொண்டு போய் சேர்த்த ஊடகவியலாளர்களுக்கு நன்றி என நடிகர் ரஜினி ட்வீட்
அரசியல் மாற்றம்... ஆட்சி மாற்றம்
இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை
என்கிற கருத்தை பாமர மக்களும் பேசுகின்ற,சிந்திக்கின்ற வகையில்
கொண்டு போய் சேர்த்த
ஊடகங்களுக்கும்,பத்திரிகைகளுக்கும், சமூக வலைதளங்களுக்கும், மன்ற உறுப்பினர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. 🙏🏻— Rajinikanth (@rajinikanth) March 14, 2020
கொரொனாவை முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் வென்றிடுவோம். அனைவரும் பாதுகாப்பாகவும், விழிப்புணர்வுடனும் இருங்கள். வருமுன் காப்பதே சிறந்தது. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ட்வீட் செய்துள்ளார்.
Let's stay strong and fight the #COVID19 outbreak by taking all precautionary measures. Stay safe, be vigilant and most importantly remember, prevention is better than cure. Please take care everyone.
— Virat Kohli (@imVkohli) March 14, 2020
யெஸ் வங்கியில் கௌதம் தப்பார் என்பவருக்கு சொந்தமான அவந்தா ரியாலிட்டி நிறுவனத்திற்கு நிபந்தனைகளை தளர்த்தி ரூ.2000 கோடியை கடனாக வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவ்வங்கி நிறுவனர் ராணா கபூர், அவரது மனைவி பிந்து மற்றும் அவந்தா ரியாலிட்டி நிறுவனத்தின் நிறுவனர் கவுதம் தப்பார் ஆகியோர் மீது சி.பி.ஐ. புதிய வழக்கு பதிவு செய்துள்ளது.
நோய் வந்தால் பக்தகோடிகள் கோவிலுக்குபோய் எல்லாம்வல்ல கடவுளிடம்தான் வேண்டமுடியும்; கோவிலுக்கு வராதே என்றால் அது பக்தியா பகுத்தறிவா? ஆன்மீகமா அறிவியலா? #coronavirus
— A RAJA (@dmk_raja) March 13, 2020
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights