Flash News in Tamilnadu Today Updates: பாராளுமறத்தில் நடந்து வரும் குளிர் கால கூட்டத்தொடரில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மஹாராஷ்டிரா ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப் பட்டதற்கான பிரகனடத்தை தாக்கல் செய்கிறார். மேலும், பிரிவு 356ன் விதியின் கீழ் மகாராஷ்டிர மாநில ஆளுநர் இந்தியா ஜனாதிபதிக்கு அனுப்பிய அறிக்கையையும் தாக்கல் செய்ய விருக்கிறார். மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் முடிவடைந்த எந்தவொரு கட்சியும் ஆட்சியமைக்க முன்வராததால், கவர்னர் கோஷ்யாரின் பரிந்துரையின்படி, அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டிருந்தது.
ஷஹாதத் ஹுசைன், வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளாரான இவர், உள்ளூர் லீக் போட்டியில் சகவீரரை மைதானத்தில் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஷஹாதத் ஹுசைன் செயலைக் கண்டிக்கும் வகையில், அவர் ஐந்து ஆண்டுகளில் கிரிக்கெட் போட்டிகளில் தடைவிதித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தண்டனை கொடித்திருக்கிறது
இதுபோன்ற, மேலும் சில முக்கிய செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.
Live Blog
Tamil Nadu news today updates : Chennai weather, traffic, petrol diesel price, இன்று தமிழகம் மற்றும் உலக அளவில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
மறைமுகத் தேர்தல் முறை மூலம் சர்வாதிகார முறையில் தேர்தல் நடத்த அரசு முயன்றுள்ளது
திமுக ஆட்சியில் அப்போதைய சூழலுக்கு ஏற்ப மறைமுகத் தேர்தல் நடத்தப்பட்டது; உள்ளாட்சியில் உறுப்பினர்கள் சுதந்திரமாக செயல்பட முடியாததால் மறைமுக தேர்தல் முறை மாற்றப்பட்டது - மு.க.ஸ்டாலின்
மேயரை மறைமுகமாக தேர்வு செய்ய அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது. உச்சநீதிமன்றத்தில் தந்த வாக்குறுதியை அதிமுக அரசு மீறுவது அவமதிக்கும் செயலாகும். கவுன்சிலர்களை விலைக்கு வாங்கி மேயர் பதவிகளை கைப்பற்றலாம் என்ற முயற்சியை முறியடிப்போம் - காங்கிரஸ்
ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்டதே இந்த மறைமுகத் தேர்தல் முறை. மறைமுகத் தேர்தல் என்பது சட்டத்திற்கு உட்பட்டதே; சட்டத்திற்கு புறம்பானது அல்ல. மறைமுகத் தேர்தலுக்கு அவசரச் சட்டம் பிறப்பித்தது வியூகம் என்பது அல்ல - அமைச்சர் ஜெயக்குமார்
பொன்.மாணிக்கவேல் விசாரணை விவரங்களை கூடுதல் டிஜிபி-யிடம் தாக்கல் செய்யவில்லை - தமிழக அரசு
சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பின் எத்தனை வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது"
பொன்.மாணிக்கவேல் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் ஊழியர் சங்க பொதுச்செயலாளர் ரமேஷ் கண்ணன் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘ஆயுள் காப்பீட்டு பிரிமியங்கள் மீது 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிப்பதை, பாலிசிதாரர்கள் பெரும் சுமையாக கருதுகிறார்கள். இதனால் பாலிசிதாரர்கள் சேமிக்கும் எண்ணத்தை ஜிஎஸ்டி வரி விதிப்பு குறைக்கிறது. எனவே மத்திய அரசு ஜி.எஸ்.டி வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும்’ என ரமேஷ் கண்ணன் வலியுறுத்தினார்.
கோவா திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில் ஆங்கிலத்தில் பேசிய ரஜினி, ‘என்னை வாழ வைக்கும் தமிழ் மக்களுக்கும், விருது வழங்கிய மத்திய அரசுக்கும் நன்றி’ என தமிழிலும் குறிப்பிட்டார். ‘என் திரைப்படங்களில் இணைந்து பணியாற்றியவர்களுக்கு இந்த விருதை சமர்ப்பணம் செய்கிறேன்’ என குறிப்பிட்டார் ரஜினிகாந்த்.
இந்த விழாவில் ரஜினிக்கு, ‘ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி’ விருது வழங்கப்பட்டது. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நடிகர் அமிதாப் பச்சன் இணைந்து ரஜினிக்கு விருதை வழங்கினர்.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், ‘தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. திருவள்ளுர், காஞ்சிபுரம், கடலூர், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும்’ என குறிப்பிட்டிருக்கிறது.
பல அரசியல் கட்சிகள் வந்தாலும் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் வராது. அமெரிக்க முதலீட்டார்களை ஈர்க்க சென்ற பயணம் முழுமையாக வெற்றியடைந்தது. பல்வேறு முதலீட்டாளர்களை சந்தித்து பேசினேன் என செய்தியாளர்கள் சந்திப்பில் துணை முதல்வர் ஒ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
குளிர்கால கூட்டத்தொடர் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தூத்துக்குடி எம்.பி. கனிமொழி “தூத்துக்குடி கடற்பகுதியில் ஏற்படும் கடல் அரிப்பை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.
திருச்சியில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலை மற்றும் ஆவடியில் அமைந்திருக்கும் போர் தளவாட தொழிற்சாலை உள்ளிட்ட எந்த தொழிற்சாலைகளையும் தனியார் மயமாக்கும் திட்டம் அரசுக்கு இல்லை என்று பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் அறிவித்துள்ளார்.
நடிகர்கள் ரஜினி, கமல், விஜய் போன்றவர்கள் மாய பிம்பங்கள், கானல் நீரைப் போன்று காணாமல் சென்றுவிடுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு. மேலும் அவர் அஜித் குமார் திரையுலக பக்தியும் நல்ல பண்பும் கொண்டவர் என்று கூறியுள்ளார் அவர். உள்ளாட்சி தேர்தல் குறித்து திமுகவினர் அச்சத்தில் இருப்பதாகவும், உள்ளாட்சித் தேர்தலை தடுக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு வருவதாகவும் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்தார்.
தமிழகத்தில் நடக்க விருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் 'அதிமுக தனித்து போட்டியிடத் தயார்' என்று பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார். எல்லா கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டால் தான் ஒவ்வொரு கட்சிகளுக்கும் அதன் பலம் புரியும் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் நியமனம் செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் வழக்கு நடந்து வருகிறது. இந்த நடைமுறைகேடு தொடர்பான முழுமையான விசாரணை நடத்த தற்போது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கூடங்குளம் அணுக்கழிவுகள் பற்றிய போதிய வெளிப்படைத்தன்மை இல்லாமல இருந்து வந்தது. திமுக எம்.பி ஞானதிரவியம் கேள்விக்கு, இன்று பாராளுமன்றத்தில் பதில் அளித்த ஜித்தேந்திர சிங் , கூடங்குளத்தில் இருந்து வெளியேறும் அணுக்கழிவுகள் தரையில் இருந்து 15மீ அடியில், விஞ்ஞான ரீதியில் சேமிக்கப்படுவதாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த இடத்தை தெரிவிக்க இயலாது என்றும் தெரிவித்தார்.
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் நவம்பர் 26ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. மேலும், ப.சிதம்பரம் ஜாமீன் மனு தொடர்பாக உரிய விளக்கம் கொடுக்கவேண்டும் என்று அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு சிறப்பு பாதுகாப்புக் குழு விலக்கப்பட்டதைக் கண்டித்து இன்று பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி தனது கருத்தை முன்வைத்தார். அப்போது, நாட்டில் உள்ள தலைவர்கள் காப்பாற்றுவது ஒரு அரசின் கடமையென்றும், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் வாஜ்பாய் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது என்றும் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த ஜே.பி.நாட்டா இதில் எந்த அரசியலும் இல்லை என்று, நெறிமுறையின் படி உள்துறை அமைச்சகம் எடுத்த முடிவு என்று தெரிவித்தார்.
MHA asks States to strictly enforce e-cigarette ban. Sub inspectors have been empowered to "enter, search and seize" prohibited items without any warrant.
— vijaita singh (@vijaita) November 20, 2019
எலக்ட்ரானிக் சிகரெட் தயாரிப்பு, ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் பயன்பாடு என அனைத்திற்கும் முழுமையாக தடை விதித்து இந்திய அரசு. இந்த தடையை மாநில அரசு முழுமையாக நடைமுறை படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுருத்தியுள்ளது. எந்தவொரு அரஸ்ட் வாரண்ட் இல்லாமல் தடைசெய்யப்பட்ட பொருட்களை ' தேடவும், கைப்பற்றவும்' துணை ஆய்வாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
விழுப்புரம் தொகுதி நாடுளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் இன்று பாராளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவருவதற்கான நோட்டிசை வழங்கியுள்ளார். அதில், இலங்கையின் உள்நாட்டு போர் மனித உரிமை மீறல் குறித்து தற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் நிலைப்பாடு என்ன? வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கரின் இலங்கையின் சுற்றுப்பயணத்தின் நோக்கம் என்ன? என்பதை பாராளுமன்றத்தில் விளக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழக மக்களுக்கு நன்மை பயக்குமானால் கமலுடன் சேர்ந்து பணியாற்றுவேன் என்று ரஜனிகாந்த் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்து இருந்தார். இது குறித்து இருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், கமல், ரஜினி, திரைக்கதையில் ஒன்றாக நடித்தால் நன்றாக இருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை இன்று உச்சநீதிமன்றம் விசாரிக்க இருக்கிறது. இந்த வழக்கில் , கடந்த செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதியில் இருந்து ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிபிஐ பதிவு செய்யப்பட்ட வழக்கில் இவருக்கு ஜாமீன் அளிக்கப்பட்ட போதிலும், அமலாக்கத்துறை பதிவு செய்யப்பட்ட வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் இவரின் ஜாமீன் மனுவை நிராகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையை தேசியவாத காங்கிரஸ் சரத் பவார், காங்கரஸ் கட்சி ட் தற்காலிக தலைவர் சோனியா காந்திக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது . இந்நிலையில், இன்று நாடாளுமன்ற வளாகத்திற்குள் மதியம் 12 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க விருக்கிறார். என்.சி.பி கட்சியைச் சேர்ந்த நவாப் மாலிக் இது குறித்து தெரிவிக்கையில், " விவசாயிகளின் பயிர்க்கடன் ரத்து செய்வது தொடர்பாக இந்த சந்திப்பு நடக்க இருக்கின்றது என்று தெரிவித்தார்.
இதற்கு கருத்து தெரிவித்த சிவ சேனா தலைவர் சஞ்சய் ராவத், சரத் பவாரை புரிந்துக் கொள்ள நூறு முறை பிறக்க வேண்டும் என்று கூறினார்.
மகாராஷ்டிரா அரசியலில் புதிய திருப்பமாக ஒரு முதல்வர், இரண்டு துணை முதல்வர்கள் என்ற அடிப்படையில், சிவசேனா , காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணியிலான அரசு விரைவில் அமைய உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights