Advertisment

Tamil Nadu News Highlights: 49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து

Tamil Nadu news today updates : தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu News Highlights: 49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து

Tn Nes Highlights - sedition Charge withdrawn by bihar police

Tamil Nadu news updates : ஜம்மு - காஷ்மீரில், குளிர்காலம் துவங்குவதற்கு முன், பயங்கரவாதிகளை ஊடுருவ வைக்க, பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது. இதற்காக. எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில், 20 பயங்கரவாத முகாம்களை நடத்தி வருகிறது. அதில் பயிற்சி பெறும் பயங்கரவாதிகள் மூலம், இந்தியாவில் தாக்குதல் நடத்தவும், திட்டமிட்டுள்ளது என, மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.

Advertisment

ரபேல் போர்விமானம் ஒப்படைப்பு : ஐரோப்பிய நாடான பிரான்சுடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி முதல் 'ரபேல்' போர் விமானம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. அதைப் பெற்றுக் கொண்ட பா.ஜ. மூத்த தலைவர்களில் ஒருவரான ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆயுத பூஜை செய்தார். பின்னர் அதில் அவர் பயணம் செய்தார். போர் விமானத்தைப் பெற்றுக் கொண்ட ராஜ்நாத் சிங் கூறியதாவது: நமது விமானப் படை உலகின் நான்காவது மிகப் பெரிய விமானப் படையாக உள்ளது. தற்போது 'ரபேல்' போர் விமானங்கள் இணைவதால் அது மேலும் வலு பெறுகிறது. விஜயதசமி தினத்தில் போர் விமானத்தை பெற்றது சிறப்பு. அதைவிட இந்திய விமானப் படை தினத்தில் இதைப் பெற்றுள்ளது மிகவும் சிறப்பானதாக அமைந்துள்ளது. இந்த நாள் விமானப் படையின் வரலாற்றில் மிகச் சிறப்பான நாளாகும். இந்தியா பிரான்ஸ் இடையேயான ராணுவ நட்புறவில் இந்த நாள் ஒரு மைல்கல்லாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Live Blog

Tamil Nadu and Chennai news today live updates of weather, traffic, rainfall, Breaking : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    21:44 (IST)09 Oct 2019

    தீபாவளிக்கு முந்தைய நாளான சனிக்கிழமை அன்று பள்ளிகளுக்கு விடுமுறை - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

    திபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான சனிக்கிழமை அன்று பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது விடுமுறையாக அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

    21:40 (IST)09 Oct 2019

    சீன அதிபர் வருகையையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம்

    சீன அதிபர் வருகையையொட்டி சென்னையில் தாம்பரம், குரோம்பேட்டை பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள் பல்லாவரம் ரேடியல் சாலையை பயன்படுத்தலாம். பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை 100 அடி சாலை வழியாக வாகனங்கள் திருப்பிவிடப்படும்.

    21:37 (IST)09 Oct 2019

    சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையை முன்னிட்டு அக்டோபர் 11, 12 தேதிகளில் சென்னையில் போக்குவரத்து மாற்றம்

    சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையை முன்னிட்டு அக்டோபர் 11, 12 தேதிகளில் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி சாலை, அண்ணா சாலை, படேல் சாலை, ராஜீவ் காந்தி சாலை, இ.சி.ஆர் ஆகிய இடங்களில் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல தடை

    21:10 (IST)09 Oct 2019

    விவோ புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்திய பெங்கால் வாரியர்ஸ்

    விவோ புரோ கபடி தொடரில் தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்கால் வாரியஸ் அணி 29-க்கு 33 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது.

    21:04 (IST)09 Oct 2019

    இயக்குநர் மணிரத்னம், எழுத்தாளர் ராமச்சந்திர குஹா உள்ளிட்ட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கை திரும்பப்பெற முடிவு

    இயக்குனர் மணிரத்னம், ராமச்சந்திர குஹா உள்ளிட்ட 49 முக்கிய பிரபலங்கள் இந்தியாவில் நடைபெற்றுவரும் கும்பல் தாக்குதல் படுகொலை பற்றி பிரதமருக்கு கடிதம் எழுதினர். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பீகார் காவல்துறை 49 பேர்கள் மீது வழக்குப் பதிவு செய்தது. இந்நிலையில், மணிரத்னம், ராமச்சந்திர குஹா உள்ளிட்ட 49 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. மேலும், அவர்கள் மீது புகார் அளித்த நபருக்கு எதிராக 182வது சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 49 பேர் மீது புகார் அளித்த நபர் தவறான தகவல்கள் அளித்ததை கண்டுபிடித்துள்ளதாக பீகார் காவல்துறை தெரிவித்துள்ளது.

    20:41 (IST)09 Oct 2019

    படைப்புழுக்களை கட்டுப்படுத்த ரூ.47.66 கோடி ஒதுக்கீடு - தமிழக அரசு அரசாணை

    தமிழக அரசு படைப்புழுக்களை கட்டுப்படுத்த உயிர்க்கொல்லி மற்றும் ரசாயன மருந்துகள் தெளிக்க ரூ.47.66 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என்று அரசாணை வெளியிட்டது.

    20:18 (IST)09 Oct 2019

    டெங்கு காய்ச்சலை தடுக்க பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்க தொண்டர்களுக்கு டிடிவி தினகரன் வேண்டுகோள்

    அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், டெங்கு காய்ச்சலை தடுக்க பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குங்கள் என்று கட்சித் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    20:02 (IST)09 Oct 2019

    ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம் - தமிழக அரசு

    தமிழக அரசு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை துறை மாற்றம் செய்து நியமனம் செய்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழக இணை மேலாண் இயக்குநராக வினீத் நியமனம். சுற்றுலா மற்றும் கலாசாரத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக அசோக் டோங்ரே நியமனம். நகர்ப்புற நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநராக அபூர்வ வர்மா நியமனம்.

    18:53 (IST)09 Oct 2019

    ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

    போக்குவரத்துத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் வருவாய் துறை முதன்மை ஆணையராக நியமனம் - தமிழக அரசு

    போக்குவரத்துத் துறை செயலாளராக சந்திர மோகன் நியமனம்

    அரியலூர் ஆட்சியராக இருந்த வினய் மதுரை ஆட்சியராக நியமனம் - தமிழக அரசு

    அரியலூர் ஆட்சியராக டி.ரத்னா நியமனம்

    18:52 (IST)09 Oct 2019

    ஜெயலலிதா இருந்திருந்தால்...

    ஜெயலலிதா இருந்திருந்தால் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருக்காது - நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட ஏர்வாடியில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம்

    கருணாநிதி, ஜெயலலிதா இருந்தபோது நீட் வரவில்லை, அவர்கள் இல்லாத நிலையில் தமிழகத்தில் நீட் தேர்வு புகுந்துள்ளது - ஸ்டாலின்

    18:29 (IST)09 Oct 2019

    நிர்மலா செரான் 4 ஆண்டுகள் விளையாட தடை

    ஊக்கமருந்து பயன்படுத்திய விவகாரத்தில், இந்திய தடகள வீராங்கனை நிர்மலா செரான் 4 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

    18:16 (IST)09 Oct 2019

    சீன அதிபர் பயன்படுத்தும் காரின் சிறப்புகள்

    தான் பயணிக்க மட்டும் தனியாக காரைத் தயாரிக்க எப்ஏ.டபிள்யு(FAW) கார் தயாரிப்பு நிறுவனத்திடம் ஜி ஜின்பிங் தெரிவித்து இருந்தார்.

    இதற்காக சீனாவில் பழமையான, மிகப்பெரிய உள்நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான எப்ஏடபிள்யு நிறுவனம் (Hongqi) ஹாங்கி எல்-5 ரக காரை சீன அதிபருக்காக உருவாக்கி உள்ளது.

    'ஹாங்கி' என்பதற்கு சீன மொழியில் 'சிவப்புக் கொடி' என்று பொருள். 10 வினாடிகளில் 100 கிலோமீட்டர் வேகத்தை அடையும் திறன் படைத்த 12 வால்வுகளைக் கொண்ட இன்ஜின் இதில் உள்ளது.

    சீனாவில் மிக விலை உயர்ந்த காரான இந்த ஹாங்கி எல் 5 ரக காரின் விலை இந்திய மதிப்பில் 5 கோடியே 60 லட்ச ரூபாய்..

    உருவத்திலும் பெரிய தோற்றம் கொண்ட இந்த காரானது, 3152 கிலோ எடை கொண்டது.

    105 லிட்டர் பெட்ரோல் அல்லது கேஸ் நிரப்பிக்கொள்ளும் வசதி இந்த காரில் உள்ளது. ஒருமுறை எரிபொருள் நிரப்பினால், 500 மைல்கள் வரை பயணிக்க முடியும்.

    17:15 (IST)09 Oct 2019

    49 பிரபலங்கள் மீது வழக்கு பதிந்ததற்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை - பிரகாஷ் ஜவடேகர்

    திரைப்படத் தயாரிப்பாளர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது, தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கும், மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சில சிறிய கூட்டங்கள், வேண்டுமென்றே மத்திய அரசு மீது, தவறான பிரச்சாரத்தை முன்னெடுத்து வருவதாக கூறினார்.

    17:14 (IST)09 Oct 2019

    கீழடி அகழ்வாராய்ச்சி - பரவும் தகவல் தவறானது

    கீழடி அகழ்வாராய்ச்சியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக பரவும் தகவல் தவறானது என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். 5ம் கட்ட அகழாய்வு வரும் 13ம் தேதி வரை நடைபெறும், 6ம் கட்ட அகழாய்வு பணிகள் ஜனவரி மாதத்தில் தொடங்கும் என அமைச்சர் கூறியுள்ளார்.

    17:09 (IST)09 Oct 2019

    மருத்துவமனையில் கடம்பூர் ராஜூ

    நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட களக்காடு பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு திடீர் உடல் நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதி.

    16:34 (IST)09 Oct 2019

    சீன அதிபர் வருகை : தலைமை செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம்

    சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடியில் கூட்டத்தை ஒட்டி பொதுத்துறை செயலாளர் செந்தில் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனையில் காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா, வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

    16:00 (IST)09 Oct 2019

    சீன அதிபர் வருகை : 34 சிறப்பு அதிகாரிகள் நியமனம்

    சீன அதிபரின் வருகையை ஒட்டி பாதுகாப்பு மற்றும் விழா ஏற்பாடுகளை சிறப்பாக மேற்கொள்ள 34 சிறப்பு அதிகாரிகளை நியமித்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. இது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    15:39 (IST)09 Oct 2019

    வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது

    செல்போன்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் அயன் பேட்டரி உருவாக்கத்தில் பங்கேற்ற ஜான் காட்எனெஃப், ஸ்டான்லி விட்டிங்கம், மற்றும் அகீரா யோஷினோ என மூன்று ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

    14:49 (IST)09 Oct 2019

    வழக்கறிஞர்களுக்கான தகுதி தேர்வில் வெற்றி பெறாதவர்களுக்கு நோட்டீஸ்

    வழக்கறிஞர்களுக்கான தகுதித் தேர்வில் வெற்றி பெறாதவர்கள் 1,547 வழக்கறிஞர்களுக்கு தமிழகம் மற்றும் புதுவை பார்கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இடைக்கால பணி நீக்கத்தை தவிர்க்கும் பொருட்டு அவர்கள் தங்களின் சான்றிதழ்களை வழங்க வேண்டும் என்று பார் கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.

    14:46 (IST)09 Oct 2019

    சீன அதிபருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் - மக்களுக்கு முதல்வர் வேண்டுகோள்

    சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. சீன அதிபரின் வருகை தமிழகத்துக்கு மட்டுமல்லாமல் இந்தியாவின் வரலாற்றிலும் மிக முக்கியமான நிகழ்வு என பேச்சு

    14:22 (IST)09 Oct 2019

    அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி

    மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெரும் முன்னாள் அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை செய்து முடித்த பின்பு பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு. இதனால் அரசுக்கு ரூ. 16 ஆயிரம் கோடி கூடுதலாக செலவாகும் என்றும் அறிவித்தார்.

    14:05 (IST)09 Oct 2019

    அக்டோபர் 20ம் தேதி முதல் ஆரம்பமாகும் வடகிழக்கு பருவமழை

    வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20ம் தேதிக்கு பின்பு துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், திருச்சி, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    14:03 (IST)09 Oct 2019

    பாதுகாப்பு வளையத்துக்குள் மாமல்லபுரம்

    மாமல்லபுரத்தில் சீன அதிபர் மற்றும் இந்திய பிரதமரின் சந்திப்பு நடைபெற உள்ள நிலையில், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. கடற்கரை கோவிலுக்கு பின்புறம் ஒரு நீர்மூழ்கி கப்பல் உட்பட 3 கப்பல்கள் பாதுகாப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளது.

    13:56 (IST)09 Oct 2019

    நீட் ஆள்மாறாட்ட விவகாரம் : ஜாமீன் மறுப்பு

    நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த உதித் சூர்யாவின் தந்தை டாக்டர் வெங்கடேசன் மற்றும் இர்ஃபானின் தந்தை சபியின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து அறிவித்தது தேனி நீதிமன்றம்,

    13:36 (IST)09 Oct 2019

    உள்ளாட்சி தேர்தல் நடந்தே தீரும் – அமைச்சர் செங்கோட்டையன்

    விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் செங்கோட்டையன், அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடந்தே தீரும் என தெரிவித்தார்.

    12:55 (IST)09 Oct 2019

    ஸ்டாலின், வைகோவுக்கு நன்றி – பொன்.ராதாகிருஷ்ணன்

    மோடி-ஷி ஜின்பிங் வருகையை ஆதரித்த மு.க.ஸ்டாலின், வைகோவிற்கு கட்சிக்கு அப்பாற்பட்டு நன்றி  தெரிவித்துக்கொள்வதாக முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    12:19 (IST)09 Oct 2019

    சிறையில் சலுகைகளைப் பெற சசிகலா லஞ்சம் தந்தார் – அறிக்கையில் தகவல்

    பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விதிமீறி சசிகலா வெளியே சென்றது குறித்து காவல் அதிகாரி ரூபா கூறிய புகார் உண்மையே என்று விசாரணைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறையில் சலுகைகளைப் பெற சசிகலா லஞ்சம் தந்தார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    12:16 (IST)09 Oct 2019

    சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை

    சென்னையின் சாலிகிராமம், விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தென்மேற்கு பருவமழை முடிவடைந்துள்ள நிலையில், வடகிழக்கு பருவமழையின் துவக்கமாக இந்த மழை கருதப்படுகிறது.

    11:34 (IST)09 Oct 2019

    வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

    வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட பாசன வசதிக்கு வினாடிக்கு 1,130 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    11:10 (IST)09 Oct 2019

    நாங்குநேரியில் ஸ்டாலின் பிரசாரம்

    ஆளும் கட்சியினர்தான் மக்களை சந்தித்து குறைகளை கேட்க வேண்டும், ஆனால் எதிர்கட்சியாகிய நாங்கள் தான் ஆளும் கட்சி செய்ய வேண்டிய பணியை செய்து கொண்டிருக்கிறோம். சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, அதைப் பற்றி கவலைப்படாத இந்த அரசுக்கு பாடம் புகட்டுங்கள் என நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் செய்தார். 

    10:38 (IST)09 Oct 2019

    ஆட்சியில் இருப்பவர்களுக்கு மக்கள் குறித்து கவலையில்லை – ஸ்டாலின்

    கடந்த 8 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கக் கூடியவர்கள் விவசாயம், பெண்கள் மேம்பாடு, நாட்டு மக்கள் குறித்து கவலைப்படாமல் இருந்து வருகின்றனர் என்று நெல்லை நொச்சிக்குளத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின் கூறினார்.

    10:01 (IST)09 Oct 2019

    பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

    சென்னையில், பெட்ரோல், டீசல் விலையில் நேற்றைய விலையில் இருந்து எவ்வித மாற்றமின்றி பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.43 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.57 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

    09:48 (IST)09 Oct 2019

    பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அதிரடி சோதனை

    பெங்களூரு நகர குற்றப்பிரிவு போலீசார், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையால், சிறை வளாகம் முழுவதும் பரபரப்பு நிலவி வருகிறது.

    09:36 (IST)09 Oct 2019

    ஸ்டாலினால் இனி ஆட்சிக்கு வரமுடியாது – அமைச்சர் உதயகுமார்

    இதுவரை ஆட்சிக்கு வந்து விடுவோம் என ஒரு லட்சத்து, 11 ஆயிரம் முறை சொல்லிவிட்டார் ஸ்டாலின், இனிமேல் சொன்னாலும் ஆட்சிக்கு, ஸ்டாலின் வர மாட்டார் என்று நாங்குநேரியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் அமைச்சர் உதயகுமார் கூறினார்.

    Tamil Nadu news today updates : அடித்துக் கொல்லுதல் என்ற வார்த்தை இந்திய வரலாற்றிலேயே கிடையாது. அது வேறொரு கலாசாரத்தில் இருந்து வந்தது. இந்தியாவை சிறுமைபடுத்த இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள்,'' என, ஆர்.எஸ்.எஸ்., எனப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் தலைவர், மோகன் பாகவத் கூறினார்.

    நாடு முழுவதும் செப்டம்பர் வரை 5.87 கோடி பேர் 2018 - 19ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் செப்டம்பர் வரை கணக்கு தாக்கல் செய்தோரின் விபரங்களை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. : நாடு முழுவதும் 5.87 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். இது 2017 - 18ம் நிதியாண்டில் 5.67 கோடியாக இருந்தது. முந்தைய நிதியாண்டை விட 20 லட்சம் பேர் அதிகமாக கணக்கு தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் தற்போது வரை 37.50 லட்சம் பேர் கணக்கு தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் மட்டுமே கணக்கு தாக்கல் செய்தோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Tamil Nadu Tamil Nadu Politics
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment