Tamil Nadu news today live updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கோவை, தேனி, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டு அங்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான செய்தியைப் படிக்க
நாங்குநேரி - விக்கிரவாண்டி இடைத்தேர்தல்
நேற்று நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்தது. விக்கிரவாண்டி தொகுதியில் 84.36% வாக்குப்பதிவு நடைபெற்றது. நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் 66.10% வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் வருகின்ற 24ம் தேதி வெளியாக உள்ளது. இது தொடர்பான முழுமையான செய்திகள் மற்றும் அப்டேட்களை தெரிந்து கொள்ள
Live Blog
Tamil Nadu news today live updates Chennai weather, petrol diesel price, by election exit poll results : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்
விக்கிரவாண்டி, நாங்குேநரி இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்ற கருத்துக்கணிப்பை தந்தி டிவி நடத்தியது
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்
அதிமுக கூட்டணி - 46-52%
திமுக கூட்டணி - 44-50%
நாம் தமிழர் - 2 -5%
மற்றவை - 2-5%
நாங்குநேரி இடைத்தேர்தல்
அதிமுக கூட்டணி - 46-52%
காங்கிரஸ் கூட்டணி - 42-48%
நாம் தமிழர் - 4-7%
மற்றவை - 2-5%
காமராஜ் நகர் (புதுச்சேரி)
காங்கிரஸ் கூட்டணி - 47-53%
என்ஆர் காங்கிரஸ் கூட்டணி - 39-45%
நாம் தமிழர் - 4-7%
மற்றவை - 4-7%
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்து வரும் 2 தினங்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். குறிப்பாக, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கலில் மிக அதி கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மிக கனமழைக்கு மட்டுமே வாய்ப்பிருப்பதாக பாலச்சந்திரன் குறிப்பிட்டார். இதேபோல், சென்னை, விழுப்புரம், கடலூர், புதுவை, டெல்டா மாவட்டங்கள், அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சேலம், தஞ்சை உள்ளிட்ட 12 மாவட்ட ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் பொதுப்பணித்துறை அறிவுறுத்தியுள்ளனர்.
முரசொலி அலுவலகம் அமைந்துள்ள பஞ்சமி நிலத்தை உரியவர்களிடம் ஒப்படைக்காவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் என்று பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவரும் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் தேர்வு வாரியம் உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நவம்பர் 15ம் தேதி வரை நீட்டித்துள்ளது. இம்மாதம் இறுதியுடன் முடிய இருந்த நிலையில் அவகாசத்தை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
இந்திய வானிலை மையம் அறிவிப்பு: மேற்கு மத்திய வங்கக்கடல், அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுவையின் பெரும்பாலான பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு.
திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு.
சென்னை, கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, அரியலூர், பெரம்பலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சிவகங்கை, ராமநாதபுரம், நாமக்கல், சேலம், புதுக்கோட்டை, குமரியில் கனமழைக்கு வாய்ப்பு.
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்: முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாக வைகோ ஏற்கனவே ஆதாரத்தை காட்டியுள்ளார்; அலுவலகம் இருக்குமிடம் பஞ்சமி நிலம் என்றால் அதை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டியது அவர்களுடைய கடமை என்று கூறினார்.
மாநிலங்களை யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதால் கூட்டாட்சி கொள்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை - நீதிபதி கருத்து
காஷ்மீரைப் போல தமிழகத்தை பிரித்துவிடுவார்கள் என்ற சந்தேகங்களுக்கும், யூகங்களுக்கும் பதிலளிக்க முடியாது - நீதிபதி
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, குமரிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் குளச்சல்,முட்டம், புதூர், குறும்பனை உள்ளிட்ட மீனவ கிராமங்களில் 1000-க்கும் மேற்பட்ட படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வந்த 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் பாதியிலேயே மீண்டும் கரைக்கு திரும்பியுள்ளன.
சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில், டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார். மேலும், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து அவர் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார்.
பெற்றோர்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டுமென்றும், மருத்துவர்கள் கூறும் ஆலோசனையை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் விஜயபாஸ்கர் கூறினார். மேலும் டெங்கு குறித்து தவறான வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதாகவும், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தீபாவளி அன்று பிகில் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேட்டி அளித்த அமைச்சர், "இதுவரை தீபாவளிக்கு வெளியாகும் எந்த படத்திற்கும் அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்கவில்லை. அனுமதி கேட்கும் பட்சத்தில் அது குறித்து பரிசீலிக்கப்படும்" என்றும் தெரிவித்துள்ளார்.
பிகில் உட்பட எந்த திரைப்படத்திற்கும் அரசு அனுமதியின்றி சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை. அரசு அனுமதியின்றி சிறப்புக் காட்சிகள் ஒளிபரப்பினால் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தமிழக விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவிப்பு. தீபாவளிக்கும் இது வரை எந்த படத்திற்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜீயை இன்று சந்தித்து பேசியுள்ளார். இது குறித்து தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியை சந்தித்து பேசினேன். மனித வாழ்வின் மேம்பாட்டிற்காக அவர் காட்டும் ஆர்வம் வெளிப்படையானது. பல்வேறு விசயங்கள் குறித்து இருவரும் உரையாடினோம். இந்தியா அவருடைய சாதனையை நினைத்து பெருமிதம் அடைகிறது. அவருடைய வருங்கால திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்று ட்வீட் செய்திருந்தார்.
Excellent meeting with Nobel Laureate Abhijit Banerjee. His passion towards human empowerment is clearly visible. We had a healthy and extensive interaction on various subjects. India is proud of his accomplishments. Wishing him the very best for his future endeavours. pic.twitter.com/SQFTYgXyBX
— Narendra Modi (@narendramodi) October 22, 2019
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்தது தொடர்பாக புகார்கள் எழுந்தது. இது குறித்த அறிக்கைகளை சீலிடப்பட்ட கவரில் வைத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது இந்திய தேர்தல் ஆணையம். இந்த விவகாரம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரிப்பதாக கூறிய நீதிமன்றம் அக்டோபர் 30ம் தேதி விசாரணையை ஒத்திவைத்துள்ளது.
அடுத்த இரண்டு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையின் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சூறைக்காற்று வீச வாய்ப்புகள் இருப்பதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு மேற்கு வங்கக்கடல் பகுதியில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் 3900 பேர் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். காய்ச்சலுக்கான அறிகுறிகள் ஏற்பட்டால் காலம் தாழ்த்தாமல் விரைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் அவர்.
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தந்தி டிவிக்கு பேட்டி அளித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரின் விடுதலை மனுவை ஆளுநர் நிராகரித்து அறிவித்ததற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இதுவரை அரசுக்கு வரவில்லை என அவர் கூறியுள்ளார்.
ஐ.என்.எக்ஸ். மீடியா ஊழல் சி.பி.ஐ வழக்கில் இன்று ப.சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. ப.சிதம்பரம் வெளிநாடு செல்லக் கூடாது எனவும் பிணைத் தொலையாக ரூ. 1 லட்சம் செலுத்தவும் உத்தரவு. ஆனாலும் அமலாக்கத்துறையின் வழக்கில் அக்டோபர் 24ம் தேதி காவலில் இருக்க வேண்டிய சூழல் ப. சிதம்பரத்திற்கு ஏற்பட்டுள்ளது.
தீபாவளிக்கு ஒரே ஒரு நாள் மட்டும் விடுப்பு என்று இருந்த நிலையில் திங்கள் கிழமை சொந்த ஊர் சென்றவர்கள் திரும்பி வர பொதுவிடுமுறை வழங்கி உத்தரவிட்டது தமிழக அரசு. தற்போது அதே போன்று புதுவையிலும் 28ம் தேதி பொதுவிடுமுறை வழங்க தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார் முதல்வர் நாராயணசாமி.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் தற்போது திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது நீதிபதி ஆர்.பானுமதி தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு. ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி ஐ.என்.எக்ஸ் - சிபிஐ வழக்கில் கைது செய்யப்பட்டார் ப.சிதம்பரம்.
மொரீசியஸ் நாட்டில் திருமணமான பெண்களுக்கான திருமதி இந்தியா யுனிவர்ஸ் எர்த் என்ற அழகி போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் பங்கேற்ற கோவையை சேர்ந்த சோனாலி பிரதீப் பட்டம் வென்றார். இவருடைய வயது 38 ஆகும். 41 பேர் பங்கேற்ற இப்போட்டியில் மகுடம் சூட்டிய இவருக்கு உற்சாக வரவேற்பினை அளித்தினர் அவருடைய குடும்பத்தினர்.
தமிழகம் மட்டுமல்லாமல் கேரளாவிலும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகின்ற நிலையில் திருவனந்தபுரம், திருச்சூர், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் கனமழை காரணமாக 10க்கும் மேற்பட்ட ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights