Flash News in Tamil Nadu Today Updates : குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட 140க்கும் மேற்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது. இந்திய தலைமை நீதிபதி எஸ்.ஏ போப்டே தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, குடியுரிமை சட்டத்தை அரசியலமைப்பு வழிமுறையின் அடிப்படையில் செல்லுபடியாகுமா என்பதை ஆராயும். குடியுரிமை திருத்தம் சட்டம், இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பிற்கு எதிராக நிற்கிறது என்றும் சட்டவிரோதமானது என்று மனுக்கள் வாதிடுகின்றன. சில மனுக்கள் ஜனவரி 10 முதல் நடைமுறைக்கு வந்த அறிவிப்பானையை திரும்பப் பெறவும் கோரியுள்ளன.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
குடியுரிமை சட்ட திருத்தம், 2019 மசோதாவிற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் நடந்த போராட்டங்களில், குறிப்பிடும் படியாக அசாமில் மிகவும் தீவிரமாகவும் இருந்தது. குடியுரிமை சட்டம் திருத்த மசோதாவில் இருந்து விலக்கு அளிக்கப்பட இரண்டு வகையான பிரிவுகள் உள்ளன. ஒன்று இன்னர் லைன் பெர்மிட் மூலம் பாதுகாக்கப்பட்ட மாநிலங்கள், மற்றொன்று அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையின் கீழ் உள்ள பகுதிகள். அசாமின் பெரும்பகுதி குடியுரிமை சட்ட திருத்த மசோதாவின் கீழ் வருகிறது.
Live Blog
Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, rainfall, Breaking : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
சிறப்பு எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கில் பணப் பரிவர்த்தனைக்கு உதவியதாக ராமநாதபுரம், தேவிபட்டினத்தை சேர்ந்த பிச்சைக்கனி, அமீர், முகமது அலி ஆகிய 3 பேர் கடலூரில் கைது.
ஷேக் தாவூத் என்பவர் தப்பியோடிய நிலையில், 3 பேரும் ராமநாதபுரம் போலீசாரிடம் ஒப்படைப்பு.
2016ம் ஆண்டு ராசிபுரம் தொகுதியில் அமைச்சர் சரோஜா வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று திமுக துணை பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி வழக்கு தொடர்ந்தார். வி.பி.துரைசாமி கூறிய புகார்களுக்கு ஆதாரம் ஏதும் இல்லை என்று கூறி துரைசாமியின் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் சரோஜா வெற்றி செல்லும் என்றும் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது.
தேவப்பட்டு பகுதியில் நடைபெற இருக்கும் மஞ்சுவிரட்டு விழாவில் பட்டியல் இனத்தவர்களை சேர்க்க வேண்டும் என்று சிவகங்கையில் இருந்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு உடனடியாக பதில் அளிக்குமாறு சிவகங்கை மாவட்ட ஆட்சியருக்கு தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ககன்யான் திட்டம் மூலமாக மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது இஸ்ரோ. மனிதர்களுக்கு முன்பு ஆளில்லா ராக்கெட் மூலம் விண்வெளியில் ஆராய்ச்சி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதற்காக வயோம் மித்ரா என்ற ஹூயுமனாய்ட் ரோபை தயாரித்துள்ளது இஸ்ரோ.
பாஜக உடனான அதிமுக கூட்டணியை பிரிக்க முடியாது என்று கிராம தொழில் வாரிய துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தெரிவித்துள்ளார். இன்று காலை பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்து செல்லும் நேரத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம் என்று ஜி.பாஸ்கரன் தெரிவித்து இருந்தார் என்பது குறிபிடத்தக்கது.
முன்னதாக, ஜி.பாஸ்கரன் கருத்துக்கு பதில்கூறிய ஜெயக்குமார், ஜி.பாஸ்கரனின் கருத்து தனிப்பட்டது என்றும், இது கட்சியின் கருத்து இல்லை என்றும் தெரிவித்து இருந்தார்.
5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்க வேண்டும் என தொடக்க கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் 10,12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது போல், 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தது .
பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்து செல்லும் நேரத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம் என்று கிராம தொழில் வாரிய துறை அமைச்சர் ஜி,பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அமைந்திருக்கும் தேர்தல் கூட்டணியின் நிலை குறித்து கலகத்தை சேர்ந்த உடன்பிறப்புகள் தங்கள் தனிப்பட்ட கருத்துக்களையும், அரசியல் பார்வைகளையும் பொது வெளியிலோ, பேட்டிகள் என்ற பெயரில் ஊடங்களிலோ தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டு கொள்வதாக அதிமுக தலைமை அறிக்கை விடுத்து இருந்தது என்பதும் குறிபிடத்தக்கது.
உச்சநீதிமன்ற இன்று குடியுரிமை திருத்தம் சட்டத்தை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் நிலையில் , அசாம் மற்றும் வடகிழக்கில் உள்ள பல பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணிக்கின்றனர். திப்ருகார் பல்கலைக்கழகம், தேஜ்பூர் பல்கலைக்கழகம், கவுஹாட்டி பல்கலைக்கழகம், காட்டன் கல்லூரி, நாகாலாந்து பல்கலைக்கழகம், ராஜீவ் காந்தி பல்கலைக்கழகம் ஆகியவை அடங்கும்.
Shocked to hear that the Govt of India is considering relocating Intellectual Property Appellate Board from its principal seat in Chennai.
Any such move would be unfair and against the interests of the city and state.
I urge @PMOIndia to rescind this move at once.
— M.K.Stalin (@mkstalin) January 22, 2020
சென்னையில் உள்ள அறிவுசார் சொத்து மேல்முறையீட்டு வாரியத்தை மாற்றும் திட்டம் குறித்து தான் மிகவும் அதிர்ச்சியடைந்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவத்தார்.
மாநில நலன்களுக்கு எதிராக இருக்கும் இது போன்ற முடிவுகளை கைவிட வேண்டும் என்று பிரதமர் அலுவலகத்தை கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இனி நடைபெறும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் விண்ணப்பிக்கும் போது, வெளி மாவட்டங்களை தேர்ந்தெடுத்தால் அதற்கான முறையான காரணங்களை தெரியபடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி )தெரிவித்துள்ளது.
நடந்து முடிந்த குரூப் -4 தேர்வில் ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள், தேர்ச்சி பட்டியலில், முதல், 100 இடங்களுக்கான பட்டியலில் இடம்பெற்றனர். இதை அடுத்து வந்த புகாரை அடுத்து டிஎன்பிஎஸ்சி இது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது
குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட 140க்கும் மேற்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது. இந்திய தலைமை நீதிபதி எஸ்.ஏ போப்டே தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, குடியுரிமை சட்டத்தை அரசியலமைப்பு வழிமுறையின் அடிப்படையில் செல்லுபடியாகுமா என்பதை ஆராயும். குடியுரிமை திருத்தம் சட்டம், இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பிற்கு எதிராக நிற்கிறது என்றும் சட்டவிரோதமானது என்று மனுக்கள் வாதிடுகின்றன.
தமிழக பள்ளி கல்வி துறையில் காலியாக உள்ள முதுகலை வேதியியல் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் தொடர்பாக புது தேர்வு பட்டியலை தயாரிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights