தமிழகத்தில் மழை எப்போது பெய்யத் தொடங்கும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் என்றழைக்கப்படும் பிரதீப் ஜான் இன்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள், கேரளா மற்றும் தமிழக மலைத் தொடர் பகுதிகளில் (வால்பாறை, நீலகிரி, பெரியார் நீர்ப்பிடிப்பு, நெல்லை மலைத் தொடர், கன்னியாகுமரி) வரும் திங்கட்கிழமை முதல் மழை அளவு அதிகரிக்கும்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதிகளை உள்ளடக்கிய KTC மற்றும் தமிழகத்தின் இதர பகுதிகளில் வெப்ப சலனத்தால் மழை உருவாகும். அங்கும் இங்குமாக மழை பெய்யத் தொடங்கும். ஆனால், ஆகஸ்ட் 10ம் தேதிக்கு பிறகு அனைத்தும் சிறப்பான நாளாக அமையப் போகிறது. ஆகஸ்ட் மாதத்தில் 10ம் தேதியிலிருந்து 20ம் தேதி வரை நீங்கள் நிறைய டமால் டுமீல்கள் மற்றும் ரெட் தக்காளி ஸ்பெல்களை பார்க்கலாம். யார் யாரெல்லாம் மழை நீர் சேமிப்புக்கு தயாராகவில்லையோ, அவர்களுக்கு அடுத்தக் கட்ட மழையில் சேமித்துக் கொள்ள ஒருவார காலம் நேரமிருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.