வங்கக் கடலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உருவான காற்றதழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி, தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது.
இந்தப் புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் மாண்டஸ் எனப் பெயரிட்டுள்ளது. இந்த நிலையில், அதி கனமழை மற்றும் சூறாவளி காற்று வீசக்கூடிய காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாட்டின், திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை முதல் லேசானது முதல் மழை பெய்யும் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், புயல் மாமல்லபுரத்தில் இருந்து சுமார் 180 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து நிலை பெற்றுள்ளது. வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேசக் கடற்கரையில் இருந்து, ஸ்ரீரீஹரிகோட்டாவிற்கு இடையே மாமல்லபுரத்தைச் சுற்றி இன்று (டிச.9) நள்ளிரவு 11.30 முதல் நாளைக்குள் கரையை கடக்கிறது.
இதற்கிடையில், இன்று நள்ளிரவு மாண்டஸ் புயல் கரையை கடப்பதால், மாமல்லபுரத்தில் பாதுகாப்பான இடங்களில் மீனவர்கள் தங்களின் படகுகளை நிறுத்தி வைத்துள்ளனர்.
இதற்கிடையில் தமிழ்நாடு அரசு மகாபலிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்து சேவையையும் குறைத்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/