Advertisment

நகர்ப்புற உள்ளாட்சி: தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக பிப். 19-ல் தேர்தல்; அதிகாரபூர்வ அறிவிப்பு

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என தமிழ்நாடு மாநில தேர்தல் அணையர் பழனிககுமார் புதன்கிழமை அறிவித்தார்.

author-image
WebDesk
New Update
நகர்ப்புற உள்ளாட்சி: தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக பிப். 19-ல் தேர்தல்; அதிகாரபூர்வ அறிவிப்பு

Tamil Nadu urban local body election: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என தமிழ்நாடு மாநில தேர்தல் அணையர் பழனிக்குமார் புதன்கிழமை அறிவித்தார்.

Advertisment

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் நீங்கலாக மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. பிறகு கடந்த ஆண்டு அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் நெல்லை, தென்காசி, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை அறிவிப்பதற்காக தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று அறிவித்தார். மேலும், வேட்புமனு தாக்கல் ஜனவரி 28ம் தேதி தொடங்கும் என்றும் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் பிப்ரவரி 4ம் தேதி என்று அறிவித்தார். மேலும், வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 5 நடைபெறும் என்றும் வேட்பு மனுக்கள் திரும்பப் பெற கடைசி நாள் பிப்ரவரி 7ம் தேதி என்றும் அறிவித்தார்.

மேலும், தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று அறிவித்தார். வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு, வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பிப்ரவரி 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்தார். மேலும், தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நடத்தைவிதிகள் அமலுக்கு வருவதாகக் கூறினார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் தொடர்ந்து பேசுகையில், மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல் மார்ச் 4ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவித்தார்.

தேர்தலை நடத்த ஆயத்த நிலையில் உள்ள தேர்தல் ஆணையம். பல்வேறு காரணங்களால் தேர்தல் தள்ளி வந்த நிலையில் ஜனவரி 27ம் தேதிக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கொரோனா பரவலைக் காரணம் காட்டி தேர்தலை தள்ளிப்போட வேண்டும் என்று மருத்துவர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்தது. மேலும் தேர்தலை நடத்த எந்த விதமான தடையும் இல்லை என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment