Advertisment

புரவிப் புயல் தமிழகத்தில் எங்கு கரையைக் கடக்கும்? வானிலை மையம் அறிக்கை

cyclone puravi Latest status : மேற்கு - தென்மேற்காக தென்தமிழ்நாடு கடற்கரையை கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கடக்க வாய்ப்புள்ளது

author-image
WebDesk
New Update
புரவிப் புயல் தமிழகத்தில் எங்கு கரையைக் கடக்கும்? வானிலை மையம் அறிக்கை

தென்மேற்கு, தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தம், மேற்கு நோக்கி நகர்ந்து, தற்போது  தென்மேற்கு வங்காள விரிகுடாவில் சுமார் 460 கி.மீ தூரத்தில் திருகோணமலை (இலங்கை) அருகிலும் கன்னியாகுமரிக்கு 860 கி.மீ தூரத்தில் தென்கிழக்கில் உள்ளது.

Advertisment

இது அடுத்த 12 மணி நேரத்தில் இது ஒரு சூறாவளி புயலாக மேலும் தீவிரமடைந்து மேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது. இது டிசம்பர் 3 ஆம் தேதி காலை மேற்கு நோக்கி, மன்னார் வளைகுடா மற்றும் அதனுடன் இணைந்த குமரிக் கடல் பகுதியை அடைய வாய்ப்புள்ளது. பின்னர் அது மேற்கு - தென்மேற்காக தென்தமிழ்நாடு கடற்கரையை கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கடக்க வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கையில் ஒரு சில இடங்களில் டிசம்பர் 2 மற்றும் 3ம் தேதிகளில் கனமழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளன.

தெற்கு கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா மற்றும் ஆலப்பழா ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் டிசம்பர் 3ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது .

தென் தமிழகத்தில் டிசம்பர் 2 மற்றும் 4ம் தேதியும், தெற்கு கேரளாவில் டிசம்பர் 3 மற்றும் 4ம் தேதியும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

வட தமிழகம், புதுச்சேரி, மாஹே மற்றும் காரைக்கால் மற்றும் வடக்கு கேரளாவில் டிசம்பர் 2 மற்றும் 3ம் தேதிகளில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தின் கடலோர பகுதிகளில் டிசம்பர் 1 மற்றும் 4ம் தேதிகளில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

 

publive-image

 

முதல்வர் வேண்டுகோள்: 

புதிய புயல் எச்சரிக்கை தொடர்பாக முதலமைச்சர்  சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்பு, வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார். மேலும்,  டிசம்பர் 1-4ம் தேதி வரை பெருமழை, புயல் வீசக்கூடும் என்பதால் எச்சரிக்கப்பட்ட மாவட்டங்களில் மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார்.

Cyclone
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment