Advertisment

வறண்ட வானிலை- பனி: அடுத்த சில நாட்கள் மழைக்கு வாய்ப்பு இல்லையா?

புத்தாண்டை ஒட்டி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான வானிலை அறிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
வறண்ட வானிலை- பனி: அடுத்த சில நாட்கள் மழைக்கு வாய்ப்பு இல்லையா?

Weather Forecast in TN

Weather Forecast in TN : புத்தாண்டை ஒட்டி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான வானிலை அறிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisment

தென்தமிழகத்தில் லேசான மழை பெய்துள்ளது. வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

publive-image

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, டிசம்பர் 31ஆம் தேதியன்று தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

வடதமிழக மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

ஜனவரி 1ஆம் தேதி மற்றும் ஜனவரி 2 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில், தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Weather Chennai Weather Report Weather Forecast Report
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment