சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவு தொடங்கி கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வருகின்ற நவம்பர் 15ம் தேதி வரை மழை நீடிக்கும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கும் தகவலைவிட தமிழ்நாடு வெதர்மேன் கூறும் தகவல் துல்லியமாக இருப்பதாக மக்கள் கருதுகின்றனர். இவரது முகநூல் பக்கத்தை அனைவரும் சென்று பார்ப்பதற்கு இது முக்கிய காரணம். இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மான் கூறுகையில் “ சென்னை பொருத்தவரை நாள் முழுவதும் மழை தொடரும். இந்த காற்றழுத்த பகுதி மெகுவாக நகர்ந்து 13-ம் தேதி அரபிக் கடலை கடக்கும். 11 மற்றும் 12ம் தேதி கடலோர மாவட்டங்களில் மழை தீவிரமாக இருக்கும். இந்நிலையில் உள்மாவட்டங்களில் 13-ம் தேதி வரை நன்றாக மழை இருக்கும். சென்னையில் இருப்பவர்கள் இந்த மூன்று நாள் கவனமாக இருக்க வேண்டும்.