Advertisment

சென்னை மற்றும் காரைக்காலில் கனமழை... காரைக்கால் பள்ளி மாணவர்களை விரைவில் வீட்டிற்கு அனுப்ப உத்தரவு!

Heavy Rainfall Alert in Tamil Nadu Delta Region: அடுத்த இரண்டு நாட்களுக்கு நாகை முதல் புதுவை வரை 30 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. மணிக்கு 70 கி.மீ வேகத்தில் காற்று வீசலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamilnadu Weather Today

Tamilnadu Weather Today

Heavy Rain Alert in Tamil Nadu Delta Region in Next 2 Days: கஜவின் தாக்கம் ஓய்வதற்கே இன்னும் மாதக்கணக்கான நாட்கள் தேவைப்படும் இந்த தருணத்தில் மீண்டும் தமிழகத்தில் மீண்டும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

Advertisment

சென்னையில் கனமழை

சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யத் தொடங்கியதால், பள்ளிகள் முடியும் முன்னரே மாணவ மாணவிகளை பாதுகாப்பாக அனுப்ப பள்ளி நிர்வாகங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் எழும்பூர், செண்ட்ரல், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அயனாவரம் மற்றும் சேத்துப்பட்டு ஆகிய இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Nadu Weather News Update : வங்கக் கடலில் உருவான புதிய காற்றழுத்த  தாழ்வு நிலை

காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.  தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நீடித்து வருவதாகவும், அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

மேலும் படிக்க : முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பணம் அனுப்புவது எப்படி  ?

இந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் காராணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு நாகை முதல் புதுவை வரை 30 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், மணிக்கு 70 கி.மீ வேகத்தில் காற்று வீசலாம் என்றும் கடலூர் மாவட்டத்தில் இருக்கும் கண்காணிப்பு அதிகாரி ககன்தீப் சிங் தெரிவித்திருக்கிறார்.

சென்னை புறநகர் பகுதியில் இன்று மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.

Tamil Nadu Weather News Updateமாநில பேரிடர் ஆணையம் ட்விட்டர்

தமிழ்நாடு மாநில பேரிடர் மீட்பு மையம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ”தென் மேற்கு வங்கக் கடலில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதாக கூறியுள்ளது. அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும்” தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறது.

Rain In Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment