Advertisment

தி.மு.க. மறந்த 75 சதவீத இடஒதுக்கீடு.. நிதிஷ் குமாருக்கு ஓர் வேண்டுகோள்.. சீறும் நாம் தமிழர் சீமான்

அரசியல் வியூகர் பிரசாந்த் கிஷோர், சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய ஒரு நாள் கழித்து காவல்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Tamil nationalist Seeman booked for remarks on north Indians says was not my intention

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

அருண் ஜனார்த்தனன்

Advertisment

வட இந்தியாவைச் சேர்ந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் பேசியதாக தமிழ் தேசியவாதி சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் அவர் பேசுகையில், “வட இந்திய மாநிலங்களில் உள்ள மக்களுடன் தொடர்புடைய குற்ற விகிதங்கள் அதிகரிப்பு பற்றி அரசாங்கத்தை எச்சரிப்பது மட்டுமே எனது நோக்கம்” என்றார்.

மேலும், சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் வியூகவாதியான பிரசாந்த் கிஷோர் கோரிக்கை விடுத்த ஒரு நாள் கழித்து காவல்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

முன்னதாக, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தின்போது, "தமிழ்நாட்டிற்கு வேலைக்காக வரும் வட இந்தியர்களின் பிரச்சனையில் இருந்து விடுபட கடும் நடவடிக்கை தேவை” எனப் பேசியிருந்தார்.

அதே உரையில் தலித் அருந்ததியர் சமூகத்தைப் பற்றி அவர் கூறியதற்காக பிப்ரவரி 22 அன்று காவல்துறை அவர் மீது வழக்குப் பதிவு செய்தது.

இந்தி பேசுபவர்களைப் பற்றிய கருத்துக்களால் இப்போது மேலும் அவர் வழக்கில் சிக்கியுள்ளார். இதற்கிடையில், கடந்த ஒரு வாரமாக, இந்தி பேசும் புலம்பெயர்ந்தோரை தமிழ் மக்கள் தாக்குவதாக வதந்திகள் பரவுவதால் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

சீமான் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தனது உரையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் பற்றி குறிப்பாக பேசவில்லை, ஆனால் “வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் அதிகரிப்பது குறித்து கவனத்துக்கு கொண்டுவந்தேன் என்றார்.

மேலும், "எங்களுக்கு இடம்பெயர்வு தெரியும். நாங்கள் நீண்ட காலமாக இடம்பெயர்ந்தோம். நாமும் கடுமையாக உழைக்கவில்லையா? அப்படித்தான் நாங்கள் முன்னேறினோம். எனவே, தமிழகத்தின் வளர்ச்சிக்கு வட இந்தியாவில் இருந்து வருபவர்கள் அவசியம் என்று எங்களிடம் கூறாதீர்கள்,'' என்றார்.

பல மாநிலங்கள் தங்கள் குடிமக்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்யும் வகையில் திருத்தங்களை கொண்டு வந்துள்ளதாக சீமான் கூறினார்.

அது குறித்து அவர், “திமுகவும் தேர்தலின் போது தமிழர்களுக்கு 75 சதவீத இடஒதுக்கீடு பற்றி பேசுகிறது. ஆனால் அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு வார்த்தை கூட பேச மாட்டார்கள். குற்றங்கள் அதிகரித்துள்ளன, ஏடிஎம் கொள்ளைகள் மற்றும் நிதிக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன என்பது உண்மைதான். பல போலீஸ் விசாரணைகள் ஹரியானா மற்றும் பல மாநிலங்களுக்கு இட்டுச் செல்கின்றன, அங்கு எங்கள் போலீசார் சென்று வெறுங்கையுடன் திரும்புவார்கள்” என்றார்.

பிரசாந்த் கிஷோரின் கருத்துகளைப் பற்றிக் குறிப்பிடுகையில், அவர் தனது புதிய கட்சியைத் தொடங்க ஆசைப்படுவதால், தேர்தல் வியூகவாதி தன்னைக் குறிவைத்ததாகக் கூறினார்.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் போன்றவர்களுக்கு எனது வேண்டுகோள், உங்கள் மக்களுக்கு வேலை கொடுங்கள். அதை முதலில் செய்யுங்கள், அவர்களுக்கு உங்கள் மாநிலத்தில் வேலையும் கௌரவமும் கொடுங்கள்” என்று சீமான் கூறினார்.

சீமானின் அரசியல் வாழ்க்கையின் ஆரம்பம் பகுத்தறிவு மற்றும் பெரியார் சிந்தனைப் பள்ளியில் வேரூன்றி இருந்தது. ஆனால், பல ஆண்டுகளாக, அவர் ஒரு தூய்மையான தமிழ் அடையாளத்தின் முகமாக வெளிப்படுகிறார்.

குறிப்பாக விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட மற்றும் இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்த நேரத்தில். அரசியல் விஷயங்களில் ஆக்ரோஷமான நிலைப்பாட்டிற்கு பெயர் பெற்ற சீமான், பாரபட்சமான கருத்துகளை கூறி விமர்சிக்கிறார்.

முன்னதாக சீமான் 2021ஆம் ஆண்டு தி இந்தியன் எக்ஸ்பிரஸிற்கு அளித்த பேட்டியில், “தமிழர்கள் இந்துக்கள் மட்டுமல்ல, ஒரு காலத்தில் பௌத்த மதத்தைத் தழுவிய பலதரப்பட்ட சமூகம் என்றார்.

மேலும், “பிரிட்டிஷார் பலரை ஒன்றாக சேர்த்து, அவர்கள் வெளியேறும் முன் அதற்கு பெயரிடும் வரை இந்தியா ஒரு நாடாக இருக்கவில்லை.

ஆனால் இந்தியா உருவாவதற்கு முன்பு நாம் (தமிழர்கள்) இருந்தோம், தெலுங்கர்கள் இருந்தோம், மலையாளிகளும் இருந்தார்கள்.

மற்றவர்களை கேலி செய்வதற்காக எனது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் பற்றி நான் பேசவில்லை.

தமிழர்கள் மனிதாபிமானத்தை விட அதிகம் கொண்டவர்கள். வாழ்வதில் மட்டுமல்ல, மற்றவர்களையும் வாழ வைப்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்” என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Seeman
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment