Advertisment

விருதுநகர் பட்டாசு ஆலை தீ விபத்து : பலி எண்ணிக்கை 15-ஆக உயர்வு

விருதுநகர் பட்டாசு ஆலை தீவிபத்தில் பலி எண்ணிக்கை 15-ஆக உயர்வு

author-image
WebDesk
New Update
விருதுநகர் பட்டாசு ஆலை தீ விபத்து : பலி எண்ணிக்கை 15-ஆக உயர்வு

தமிழகத்தின் தென் பகுதியான விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சன்குளத்தில் இயங்கி வந்த பட்டாசு  தொழிற்சாலையில்  தொழிலாளர்கள் அறைகளில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பட்டாசுகளுக்கு மருந்து செலுத்தும்பணியின்போது உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த அறையில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியது.

Advertisment

இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள அங்கும் இங்குமாக ஓடினர். இதில் 11 தொழிலாளர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  காயமடைந்த 34 பேர் சிகிச்சைக்காக  சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி 4 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணைக்கை 15 ஆக உயர்ந்து உள்ளது. வெடிவிபத்து தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் உள்பட 3பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக அரசியல் தலைவர்கள் பலர் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டவிட்டர் பதிவில், தமிழ்நாடு விருதுநகரில் பட்டாசு தொழிற்சாலை தீ விபத்தில் பலியானவர்களுக்கு ஆழ்நத இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விபத்தில், இன்னும் உள்ளே சிக்கியிருப்பவர்களைப் பற்றி நினைப்பது மனம் வருந்துகிறேன். உடனடியாக மீட்பு, ஆதரவு மற்றும் நிவாரணம் வழங்க மாநில அரசிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன் என பதிவிட்டுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Fireworks Factory
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment