Advertisment

News Highlights: சசிகலா வருகையால் பாதிப்பு இல்லை- முதல்வர் பழனிசாமி

Tamil news : குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

author-image
WebDesk
New Update
sasikala elder brother sundaravadanam passes away, vk sasikala's brother death, சசிகலா அண்ணன் மரணம், சசிகலா அண்ணன் சுந்தரவதனம் மரணம், டிடிவி தினகரன் மாமனார் மரணம், அமமுக, sasikala brother death, ttv dinakaran father in law death, ammk, vk sasikala, ttv dinakaran

Tamil news Today new year 2021 : சேலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த திமுக மக்களவை தொகுதி எம்.பி. பார்த்திபனுக்கு கொரோனா உறுதியானது .கொரோனா உறுதியானதையடுத்து மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்.

Advertisment

சென்னை கடற்கரை சாலைகளில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பில் போலீஸார் ஈடுப்பட்டுள்ளனர். 3வது டெஸ்ட் போட்டிக்கு தயார்: இந்திய அணியுடன் இணைந்த ரோகித் சர்மா.

இஸ்ரோ தலைவர் சிவனின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இஸ்ரோ தலைவர் சிவனின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்தது மத்திய அரசு. சிவனின் பதவிக்காலம் ஜன.14ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், 2022 ஜனவரி 14 வரை நீட்டிப்பு

சிபிஎஸ்இ தேர்வை ஆன்லைனில் நடத்துவது குறித்து தற்போது பரிசீலிக்கவில்லை சிபிஎஸ்இ தேர்வு குறித்து நாளை அறிவிப்பு வெளியிடப்படும் - மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்.

ஜனவரி 4ஆம் தேதி விவசாயிகளுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று நரேந்திர சிங் தோமர் அறிவித்துள்ளார்.

Live Blog

Tamil News Today : அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த நேரலையில் எங்களுடன் இணைந்திருங்கள்



























Highlights

    21:37 (IST)31 Dec 2020

    ரஜினி வீட்டின் முன்பு ரசிகர் தீக்குளிக்க முயற்சி

    போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டின் முன்பு அவரை அரசியலுக்கு வர வலியுறுத்தி முருகேசன் (55) என்ற ரசிகர் தீக்குளிக்க முயற்சி செய்தார். அவரை, அங்கிருந்த போலீசார் மீட்டு மருத்துவமனைகு அனுப்பி வைத்தனர்.

    21:02 (IST)31 Dec 2020

    மே 4 -ம் தேதி முதல் சிபிஎஸ்இ 10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு

    சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 4 முதல் ஜூன் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். மேலும், தேர்வு முடிவுகள் ஜூலை 15ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

    20:22 (IST)31 Dec 2020

    அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும் - முதல்வர் பழனிசாமி

    முதல்வர் பழனிசாமி: “கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிமுக கூட்டணியில் ஏற்கனவே உள்ள கட்சிகள் தற்போதும் நீடிக்கிறது. ஆளுநரிடம் திமுக அளித்த புகாரில் எந்த உண்மையும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

    20:07 (IST)31 Dec 2020

    சசிகலா வருகையால் அரசியலில் எவ்வித மாற்றமும் ஏற்படாது - முதலமைச்சர் பழனிசாமி

    முதல்வர் பழனிசாமி, “சசிகலா வருகையால் அரசியலில் மாற்றமும் ஏற்படாது” என்று தெரிவித்துள்ளார்.

    18:04 (IST)31 Dec 2020

    புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை; பொதுமக்கள் மெரினாவுக்கு வரவேண்டாம் - காவல்துறை

    புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை என்பதால் பொதுமக்கள் மெரினா, பெசண்ட் நகர் உளிட்ட கடற்கரைகளுக்கு வர வேண்டாம் என்று சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.

    18:01 (IST)31 Dec 2020

    காணும் பொங்கலன்று கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை - தமிழக அரசு

    காணும் பொங்கலன்று மெரினா கடற்கரை உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

    17:13 (IST)31 Dec 2020

    சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி நியமனம்; ஜனாதிபதி ஒப்புதல்

    சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி நியமனம் செய்யப்பட்டுள்ளதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். அதே போல, தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி எஸ்.முரளிதர் ஒடிஸா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    17:05 (IST)31 Dec 2020

    தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31 வரை நீட்டிப்பு - தமிழக அரசு

    தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31ஆம் தேதி ஊரடங்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளுடன் ஜனவரி 31ஆம் தேதி ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

    17:00 (IST)31 Dec 2020

    தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி பாஸ்கரன் நியமனம்

    தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி பாஸ்கரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    12:45 (IST)31 Dec 2020

    தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு

    தமிழகத்தில் திருப்பூர், நாமக்கல், கரூர் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    12:42 (IST)31 Dec 2020

    எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல்

    குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திரமோடி இன்று அடிக்கல் நாட்டினார்.

    12:39 (IST)31 Dec 2020

    வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் - கேரளா சட்டமன்றத்தில் தீர்மானம்

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி கேரளா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு முழுமையாக கேட்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    12:37 (IST)31 Dec 2020

    பிரிட்டனில் இருந்து மதுரை வந்த நபருக்கு கொரோனா இல்லை - சுகாதார செயலாளர்

    பிரிட்டனில் இருந்து மதுரை திரும்பிய ஒருவருக்கு உருமாறிய கொரோனா இல்லை என தெரிவித்துள்ள தமிழக சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன், உருமாறிய கொரோனா பாதித்தோருக்கான சிகிச்சையில் மாற்றம் தேவையில்லை என தெரிவித்துள்ளார்.

    12:30 (IST)31 Dec 2020

    தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் நடத்த வாய்ப்பில்லை - தலைமை தேர்தல் அதிகாரி

    கூடுதல் வாக்குச்சாவடிகளை அடையாளம் காணவேண்டி இருப்பதால், தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

    12:29 (IST)31 Dec 2020

    தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர் சந்திப்பு!

    தமிழகத்தில் முன்கூட்டியே சட்டமன்ற தேர்தல் நடத்த வாய்ப்பில்லை  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல். "கூடுதல் வாக்குச்சாவடி மையங்களை அடையாளம் காண வேண்டி உள்ளதால் முன்கூட்டியே தேர்தல் நடத்த வாய்ப்பில்லை" 67 ஆயிரமாக இருந்த வாக்குசாவடி மையங்களை, 95 ஆயிரமாக அதிகரிக்க திட்டம் என்று சத்யபிரதா சாகு  தெரிவித்துள்ளார். 

    12:27 (IST)31 Dec 2020

    இந்தியாவில் உருமாறிய கொரோனா!

    இந்தியாவில் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25ஆக உயர்வு . புனேவில் 4 பேருக்கும், டெல்லியில் ஒருவருக்கும் உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது . 

    12:25 (IST)31 Dec 2020

    சித்ரா மரனம் விசாரணை அறிக்கை!

    சித்ரா மரணம் தொடர்பாக ஆர்டிஓ விசாரணை நடத்தி 16 பக்க அறிக்கை சித்ராவுடன் தொடர்புடையவர்கள் 15 பேரிடம் விசாரணை நடத்தி போலீசில் அறிக்கை தாக்கல். 

    12:23 (IST)31 Dec 2020

    ஒருவருக்கு மட்டுமே உருமாறிய கொரோனா!

    தமிழகத்தில் ஒருவருக்கு மட்டுமே உருமாறிய கொரோனா .பிரிட்டனில் இருந்து மதுரை வந்த நபருக்கு உருமாறிய கொரோனா தொற்று இல்லை .ருமாறிய கொரோனா பாதித்தோருக்கான சிகிச்சையில் மாற்றம் தேவையில்லை  சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி. 

    11:44 (IST)31 Dec 2020

    உருமாறிய கொரோனா தொற்று !

    இந்தியாவில் மேலும் 5 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று  மத்திய சுகாதாரத்துறை தகவல். 

    10:31 (IST)31 Dec 2020

    முதல்வர் பழனிசாமி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம்!

    தேர்தல் பிரசாரத்துக்கு திருச்சி சென்றுள்ள முதல்வர் பழனிசாமி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் முதல்வர் பழனிசாமிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது  ஸ்ரீரங்கம் கோயில் யானை ஆண்டாளிடம் ஆசி பெற்றார் முதல்வர் பழனிசாமி

    10:29 (IST)31 Dec 2020

    டெல்லியில் புத்தாண்டு கொண்டாட தடை!

    டெல்லியில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது.  பொது இடத்தில் 5 பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்படுள்ளது. 2 நாட்களுக்கு 2 நாள் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுல்ளது. 

    09:54 (IST)31 Dec 2020

    சிபிஎஸ்இ பொதுத்தேர்வு தேதி!

    சிபிஎஸ்இ பொதுத்தேர்வு தேதி இன்று வெளியிடப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

    Tamil News Today : மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

    நேற்றைய செய்திகள்

    பொங்கல் பரிசு தொகையாக ரேசன் அரிசி அட்டைத்தாரர்களுக்கு 2500 ரூபாய் என தமிழக அரசு அறிவித்திருந்தது. டோக்கன்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், டோக்கனில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்களின் படங்கள் மற்றும் அதிமுக சின்னம் இடம் பெற்றிருப்பதாக புகார் எழுப்பிய திமுக, இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

    இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, தமிழகத்தில் இரு இடங்களில் மட்டுமே அதிமுக தலைவர்களின் படங்கள் இடம்பெற்ற டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டதாக கூறினார். அதிகாரப்பூர்வ டோக்கன்களுக்கு மட்டுமே பரிசுப்பொருள் மற்றும் பரிசுத்தொகை வழங்க வேண்டுமென ரேசன் கடைகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அதனை பதிவு செய்த நீதிபதிகள், அரசின் சுற்றிறிக்கையை நாளை மாலை 5 மணிக்குள் தமிழக அரசு வெளியிட வேண்டும் என அறிவுறுத்தினர். அவ்வாறு வெளியிடாவிட்டால் நீதிமன்றத்தை திமுக நாடலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment