news in tamil : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை சனிக்கிழமை தொடங்க உள்ளதாக தெரிவித்தார். கட்சி நிர்வாகிகளின் விருப்பத்தை ஏற்று, எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பெரிய சோரகையில் பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாகவும் அவர் கூறினார்.
கடந்த சில மாதங்களாக மாவட்ட வாரியாக பயணம் மேற்கொண்டு ஆய்வுப்பணிகளை மேற்கொண்ட முதலமைச்சர், தற்போது பிரச்சாரத்தை தொடங்குகிறார்.
முன்னதாக, தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது, தேர்தலுக்கான பணிகளை தொடங்கிவிட்டதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் தோழமை கட்சிகள் உண்ணாவிரத போராட்டம் . வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக உண்ணாவிரத போராட்டம். திமுக, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் பங்கேற்பு.
தமிழகம் மீட்போம் என்ற 2021 சட்டமன்ற தேர்தல் சிறப்பு பொது கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்று கடலூர் மாவட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சி காலத்தில் கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டார். அவற்றை 10 ஆண்டுகளாகியும் அதிமுக அரசு இதுவரை முடிக்கவில்லை என்று ஸ்டாலின் குற்றம் சாட்டினார். ’
லஞ்ச வழக்கில் தண்டனை பெற்ற காவல் ஆய்வாளர் மனைவியை கொன்றுவிட்டு தூக்கு போட்டு தற்கொலை. வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என விடுத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளாததால், டெல்லியில் விவசாய சங்கங்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
News In Tamil : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
பேட்டரி டார்ச் சின்னத்தை எம்ஜிஆர். மக்கள் கட்சி பயன்படுத்த தடைவிதிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி மக்கள் நீதி மய்யம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு விரைவில் விசரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் விவசாயிகளுக்கு ஆதரவாக, தடையை மீறி உண்ணாவிரத போராட்டம் நடத்திய திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 2000 பேர் மீது ஸ்டாலின் உள்ளிட்ட 2,000 பேர் மீது 4 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று 1,134 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,04,650 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் இன்று கொரோனாவால் 12 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம், இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் என்ணிக்கை 11,954 ஆக அதிகரித்துள்ளது.
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, “நங்கவள்ளியில் உள்ள சென்றாய பெருமாள் கோயிலில் வழிபாடு நடத்திவிட்டு நாளை என்னுடைய எடப்பாடி தொகுதியில் 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்க உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனான சுதாகரன் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றார். சிறையில் இருந்து அடுத்த 3 அல்லது நான்கு நாட்களில் அவர் விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் தற்கொலை செய்வதை தடுக்கும் வகையில் வேளாண் சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படும் என்றும் விவசாயிகளையும் வியாபாரங்களையும் இணைக்கும் வகையில் வேளாண் சட்டங்கள் உள்ளன. காங்கிரஸ் விவசாயிகள் பிரச்சனையில் இரட்டை வேடம் போடுகிறது. எதிர்க்கட்சிகள் வாக்குறுதிகளை மட்டுமே தருவார்களே தவிர ஆளும்கட்சி மட்டும்தான் அதை நிறைவேற்றும் என பிரதமர் பேச்சு.
அண்மையில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.1.37 கோடி பணம் உள்பட ரூ. 10 கோடி மதிப்பு சொத்துக்கள் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவரின் வங்கி லாக்கர்களை சோதனை செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு.
ஜாதி இல்லாத சமுதாயத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு ஏன் நடத்த வேண்டும் என்று ஜாதி வாரியாக கணக்கெடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனுவில் சென்னை உயர் நீதிமன்றம் பதில். மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகளை நடத்துவதற்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. நடத்தப்பட்ட பாடங்களுக்கு மட்டுமே தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும் தேர்வுக்காக தனியாக கட்டணங்கள் ஏதும் வசூலிக்கப்படக் கூடாது என்றும் உத்தரவு.
கல்லூரிகளில் சேர்ந்து, பின்னர் விலகிய மாணவர்களின் முழு கல்வி கட்டணத்தை திரும்ப செலுத்த வேண்டும் . அனைத்து கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவு ."உத்தரவை மீறி செயல்படும் கல்லூரி நிர்வாகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்"
நடிகர் கவுதம் கார்த்தியிடம் மர்ம கும்பல் செல்போன் பறித்தது. இந்த சம்பவம் வெளியாகி திரையுலகிலும், மக்கள் மத்தியிலும், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தவே, உடனடியாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கினர்.அங்கு பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணையை தீவிரப்படுத்திய மயிலாப்பூர் போலீசார், பெரும்பாக்கத்தை சேர்ந்த சரத் என்பவரும், மயிலாப்பூரை சேர்ந்த 17 வயது சிறுவனும் இணைந்து வழிப்பறியில் ஈடுபட்டத்தை கண்டுபிடித்தனர்.2 பேரையும் அதிரடியாக கைது செய்த போலீசார்,
திருட்டு செல்போன் எங்கே? என விசாரணை மேற்கொண்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights