Tamil news : இன்றைய முக்கியச் செய்திகள் தொடர்பான தமிழ் லைவ் பிளாக் இது. இதில் தமிழகம், இந்தியா, உலகம் சார்ந்த முக்கிய செய்திகளின் அப்டேட்டை உடனுக்குடன் தமிழில் காணலாம்.
உலகப் புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 800 காளைகள் பங்கேற்றன. அவற்றை அடக்க 655 மாடுபிடி வீரர்கள் களத்தில் குதித்தனர். ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தனர்.
தமிழகம் முழுவதும் 166 மையங்களில் இன்று முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்படுகின்றன. தடுப்பூசி போடும் திட்டத்தை மதுரையில் முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார், தமிழகத்தில் முதற்கட்டமாக 5.36 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தொடர்ந்து தோல்வியில் முடிந்து வருகிறது. வரும் 19ஆம் தேதி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
Live Blog
Today Tamil News : இன்றைய முக்கியச் செய்திகள் தொடர்பான தமிழ் லைவ் பிளாக் இது. இதில் தமிழகம், இந்தியா, உலகம் சார்ந்த முக்கிய செய்திகளின் அப்டேட்டை உடனுக்குடன் தமிழில் காணலாம்.
தமிழகத்தில் கோவிட்_19 தடுப்பூசி முதல்நாளான இன்று 2,783 பேருக்கு செலுத்தப்பட்டதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இன்று தடுப்பூசி போட்டுக் கொண்ட யாருக்கும் பக்க விளைவு ஏதும் ஏற்படவில்லை என்றும் கூறினார்.
உத்தரப்பிரதேசத்திலுள்ள பாஷா சங்கம் அலகாபாத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவ முதல்வர் ஆதித்ய நாத்திடம் கோரிக்கை விடுத்து பல ஆண்டுகளாகக் காத்திருக்கிறது. வள்ளுவரை வைத்து தமிழ்நாட்டில் அரசியல் செய்ய விரும்புவோர் உத்தரப்பிரதேச பாஜக அரசிடம் வலியுறுத்துவார்களா? என விழுப்புரம் எம். பி ரவிக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்
இந்தியத் தொழில்நுட்ப கழகங்கள் எதற்காகத் தொடங்கப்பட்டதோ, அந்த நோக்கத்தை முற்றிலும் சிதைக்கிற வகையில் மத்திய பாஜக அரசு சமஸ்கிருத மொழியைப் புகுத்தி நடவடிக்கை எடுத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே. எஸ் அழகிரி தெரிவித்தார்.
இதுதொடர்பாக வெளியிட்ட செய்திக் குறிப்பில், "இந்தியாவில் சமஸ்கிருத மொழியைப் பரப்புவதற்காகக் கடந்த மூன்றாண்டுகளில் ரூ.643.83 கோடியை பாஜக அரசு செலவழித்திருக்கிறது. செம்மொழி தகுதி பெற்றுள்ள தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய ஐந்து மொழிகளுக்கு மொத்தமாக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.29 கோடி மட்டும்தான். இந்தி, சமஸ்கிருதத் திணிப்பையும், இதற்காக மத்திய அரசு நிதியை வாரி வழங்குவதையும், தமிழ் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட மொழிகளைப் புறக்கணிப்பதையும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். இத்தகைய போக்கு தொடருமேயானால் மத்திய பாஜக அரசு கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும் என எச்சரிக்கிறேன்" எனத் தெரிவித்தார்.
பருவம் தவறி பெய்த மார்கழி மழையில் பயிர்கள் மூழ்கி விவசாயிகள் பெருந்துயர் அடைந்திருக்கிறார்கள். நிவர் புயல் நிவாரணம் ரூ.600 கோடி என்ன ஆனது என்ற மர்மமே விலகாத சூழலில், இனிமேல்தான் மழை பாதிப்பை கணக்கெடுக்கிறோம் என காலம் தாழ்த்தாமல், நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.30000 வழங்க வேண்டும் என மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று முதல் தொடங்கியுள்ள நிலையில், ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி அவர்கள் முன்னிலையில் முன்கள பணியாளர்கள் 100 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 2 தடுப்பூசிகள் குறைவான காலக்கட்டத்தில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு அனுமதி கிடைத்துள்ளதால் இந்தியாவின் திறமை மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் திருக்குறள் குறித்து விரிவாக ஆய்வு செய்ய தனி இருக்கை ஏற்படுத்தப்படும் என துணைவேந்தர் பார்த்தசாரதி அறிவித்தார். இதற்கு தமிழ் ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights