Tamil News : லடாக் எல்லை பிரச்சினை குறித்து, மாநிலங்களவையில் இன்று விளக்கமளிக்கிறார் அமைச்சர் ராஜ்நாத் சிங் .
தமிழகத்தில் பெட்ரோல் விலை 90 ரூபாயை கடந்துள்ளது. கடந்த சில தினங்களாகவே பெட்ரோல் விலை அதிகரித்து வந்த நிலையில், இன்று இந்த உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 90 ரூபாய் 18 காசுகளுக்கு விற்பனையாகிறது.
உத்தரகாண்ட் வெல்ளம், 4 நாட்கள் ஆன நிலையில் கடும் குளிர் நிலவும் மலைப்பகுதியில் வீரர்கள் போராடி வருகின்றனர். 37 பேரை மீட்டுவிடலாம் என்ற போராட்டம் தொடர்ந்து வருகிறது.
சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது என நோட்டீஸ் கொடுத்த விவகாரமத்தில், கிருஷ்ணகிரி டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
யானைகள் இறப்பு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கொடைக்கானலை சேர்ந்த மனோஜ் இமானுவேல் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு.
Live Blog
Tamil Nadu News : அரசியல்- வானிலை- சமூகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த செய்திகளின் தொகுப்பாக இந்தத் தளம் அமையும்.
உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் மதவாத சர்ச்சை காரணமாக தனது பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபருக்கு முன்னாள் கேப்டன் கும்ளே ஆதரவு தெரிவித்துள்ளார்.
1. I recommended Jay Bista for captaincy not Iqbal but CAU officials favoured Iqbal.
2. I did not invite Maulavis
3. I resigned cos bias of selectors-secretary for non-deserving players
4. Team used to say a chant of Sikh community, I suggested we can say "Go Uttarakhand" #Facts https://t.co/8vZSisrDDl— Wasim Jaffer (@WasimJaffer14) February 10, 2021
With you Wasim. Did the right thing. Unfortunately it’s the players who’ll miss your mentor ship.
— Anil Kumble (@anilkumble1074) February 11, 2021
கொரோனா சிகிச்சையிலிருந்து சூர்யா வீடு திரும்பியுள்ளதாக நடிகர் கார்த்தி ட்வீட் செய்துள்ளார்.
சென்னை கோயம்பேடு பகுதியில் பாஜகவின் மாநில தேர்தல் அலுவலகம் புதிதாக திறக்கப்பட்டது. அதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பா.ஜ.க தலைவர் முருகன். ஒரு அரசியல்வாதி என்ற முறையில் சசிகலாவுக்கு தொண்டர்களால் அளிக்கப்பட்ட வரவேற்பு இயல்பானதுதான் என்று தெரிவித்துள்ளார். மேலும் சசிகலாவின் அரசியல் நிலைபாடு என்ன என்பதை பொறுத்தே தங்கள் நிலையை பற்றிக் கூற இயலும் என்றும் முருகன் கூறியுள்ளார்.
கொரோனா பாதிப்புக்குள்ளான 60% தினக்கூலிகளுக்கு பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை. இப்படிப்பட்ட மத்திய அரசின் பட்ஜெட் மக்களுக்கு எப்படி உதவப் போகிறதுஎன்று மாநிலங்களவையில் தி.மு.க எம்.பி டி.கே.எஸ்.இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி வரும் 13 ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. பல்வேறு ஊர்களில் இருந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் டிக்கெட்டுகளை வாங்கிச் சென்றுள்ளனர். ஆன்லைன் பதிவு மூலமாகவும் டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது.
கொரோனா நெருப்பு இன்னும் அணையாத நிலையில், விலை ஏற்றம் என்ற பெட்ரோலை ஊற்றி மக்களை வதைப்பதா என்றும் மக்களின் சுமையைக் குறைக்க வேண்டியதே அரசின் பொறுப்பு என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் பெட்ரோல் விலை ஏற்றம் பற்றி குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னாள் மற்றும் தற்போதைய எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகள் மட்டுமே சிறப்பு நீதிமன்றங்கள் முன் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மற்ற வழக்குகள் விசாரணை முன்பு போலவே தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யத்தின் நிரந்தர தலைவராக கமல்ஹாசன் தொடர்வார் என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேர்தல் கூட்டணி, வேட்பாளர் தேர்வு உள்ளிட்டவற்றில் முழு அதிகாரம் கமல்ஹாசனுக்குதான் உள்ளது எனவும் தீர்மானம்.. இன்று காலை முதல் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
9,10ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணிணி இல்லை; பதிலாக 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் உறுதி செய்துள்ளார்.
லடாக் எல்லை விவகாரத்தில் ஒரு ‘இன்ச்’ நிலத்தை கூட யாருக்கும் விட்டுக் கொடுக்கமாட்டோம். எல்லையில் பதற்றத்தைத் தணிக்க பாங்காங் ஏரி அருகே படைகளை விலக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என மாநிலங்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். லடாக் எல்லை பிரச்சனை குறித்து ராஜ்நாத் சிங் இன்று பதில் அளிப்பார் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது.
கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யத்தின் முதல் பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.பொதுக்குழு கூட்டத்தில் வருகிற சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது பற்றியும், கூட்டணி குறித்தும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. மேலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 4வது ஆண்டு தொடக்க விழா மாநாட்டை நடத்துவது பற்றியும், தேர்தல் பிரசாரம் குறித்தும் பல்வேறு முடிவுகள் எடுக்கப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 33 மாவட்டங்களில் கொரோனாவுக்கு எந்த உயிரிழப்பும் இல்லை.
முகமது நபிகள் குறித்து அவதூறு பேசியதாக கைது செய்யப்பட்ட பாஜகவை சேர்ந்த கல்யாணராமனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights