Tamil news Today : ஜனவரி 9-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட இருக்கிறது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் இந்தக் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்தக் கூட்டத்தில் தேர்தலை எதிர்கொள்வது குறித்த முக்கிய வியூகங்கள், வேட்பாளர் தேர்வு, கூட்டணி ஆகியவை குறித்து முக்கிய ஆலோசனை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா , கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டும் அதே வானகரம் வெங்கடாசலபதி மகாலில்தான் இபிஎஸ்- ஓபிஎஸ் ஆகியோரும் பொதுக்குழுவை கூட்டுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. மகளிரணி இன்று ஆர்ப்பாட்டம்.
வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்று தான் ஆக வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்தார்.
வியாழன் மற்றும் சனி ஆகிய இரு கோள்களும் பூமிக்கு அருகே ஒரே நேர்க்கோட்டில் வரும் ஒருங்கமைவு இன்று நிகழ உள்ளது. 2வதாக, தென்கோடி பகுதிக்கு சூரியன் சென்று ஒளிர்ந்து மீண்டும் வடக்கு நோக்கிய பயணத்தை ஆரம்பிக்கிறது. 3வதாக இன்று ஓர்சிட்ஸ் என்ற எரிகற்கள் பொழிவும் நிகழ உள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றம்.ட்டியில் குவியும் சுற்றுலா பயணிகள். , அவலாஞ்சி, பைக்காரா போன்ற சுற்றுலா தளங்கள் திறக்கப்பட்டுள்ளன. அரசு தாவரவியல் பூங்காவில் புல்வெளிகளில் அமர்ந்தவாறு, பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் மலர்களை சுற்றுலா பயணிகள் ரசித்து வருகின்றனர். படகு சவாரி மற்றும் மழை ரயில்களில் பயணம் செய்து இயற்கை காட்சிகளை ரசித்து வருகின்றனர்.
Live Blog
News In Tamil : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்
நாடு முழுவதும் சிறுத்தைகள் எண்ணிக்கை 60 சதவீதம் உயர்ந்துள்ளது. நாட்டில் தற்போது 12,852 சிறுத்தைகள் உள்ளன என மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார். நாட்டில் உள்ள சிறுத்தைகள் எண்ணிக்கை குறித்த அறிக்கையை, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் தில்லியில் இன்று வெளியிட்டார்.
காங்கிரஸின் மிக மூத்த தலைவர்களில் ஒருவரான திரு மோதிலால் வோரா அவர்கள், மிக நீண்ட அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான அனுபவம் கொண்டவர். அவரது மறைவால் துயருற்றேன். அவரது குடும்பத்தினருக்கும் நலன் விரும்பிகளுக்கும் அனுதாபங்கள் ஓம் சாந்தி என்று பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார்.
”உலக நாடுகள் கேஸ் சிலிண்டர் விலையை குறைக்கும் நிலையில் - பாஜக அரசு மட்டும் தொடர்ந்து கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி மக்கள் மீது சுமையை ஏற்றி வருகிறது என திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி குற்றம் சாட்டினார்.
காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக நீண்டகாலம் பொறுப்பு வகித்து மோதிலால் வோரா மரணமடைந்தார். இவரது, மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே. எஸ் அழகிரி வெளியிட்ட செய்திக் குறிப்பில், " சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக, முதலமைச்சராக, மத்திய அமைச்சராக, ஆளுநராக, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக நீண்டகாலம் பொறுப்பு வகித்து காங்கிரஸ் கட்சிக்கு பெருமை சேர்த்த மூத்த தலைவர் திரு. மோதிலால் வோரா அவர்களின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், இயக்க நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.
இம்மாதம் 31 -ஆம் தேதி இரவு ஜனவரி 1-ஆம் தேதி அன்றும் அனைத்து கடற்கரைகளிலும் சாலைகளிலும் ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட அனுமதி கிடையாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
விவசாயம் தொடர்பான செயல்பாடுகள் அனைத்தையும் தேசிய மின்னணு நிர்வாக திட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்கு மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் கூறியுள்ளார்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையத்தின் உயர்நிலைக்குழு இன்று சென்னையில் ஆலோசனை மேற்கொண்டனர். தேர்தல் ஆணையத்தின் பொதுச் செயலர் திரு. உமேஷ் சின்ஹா, துணை ஆணையர்கள் சுதீப் ஜெயின், ஆஷிஷ் குண்டர் பீகார் தலைமைத் தேர்தல் அதிகாரி சீனிவாசா உள்ளிட்டோர் இந்தக்குழுவில் இடம் பெற்றனர். இன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்,வருமானவரித்துறை அதிகாரிகளுடன் அவர்கள் ஆலோசனை மேற்கொள்கின்றனர்.
.
பா. ரஞ்சித் இரங்கல்: தமுஎகச -வின் மாநில துணை பொதுச்செயலாளர், தோழர் கருப்பு கருணா அவர்களின் மறைவு பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், அனைத்து இயக்க தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள் என்று பா. ரஞ்சித் இரங்கல் தெரிவித்தார்
முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் பங்கேற்கும் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் ஜனவரி 9ம் தேதி காலை 8.50 மணிக்கு வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். பங்கேற்கும் அதிமுக பரப்புரை கூட்டம் சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் டிசம்பர் 27ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் நடுப்பட்டி கிராமத்தில், மயானத்திற்கு செல்ல சாலை வசதி இல்லை என்ற விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியினர் வசிக்கும் இடங்களில் குடிநீர், சாலை வசதிகள் உள்ளதா? என்று தமிழக அரசிடம் ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, “தமிழகத்தில் அவுட்சோர்சிங் முறையில் மின்வாரிய ஊழியர்கள் தேர்வு தொடர்பான அரசாணை திரும்பப் பெறப்படுகிறது. தொழிற்சங்கங்கள் வழக்கை வாபஸ் பெற்றால், 10 ஆயிரம் பேர் உடனடியாக பணி நியமனம் செய்யப்படுவர்.” என்று தெரிவித்துள்ளார்.
மின்வாரியத்தின் ஒரு பகுதியை திட்டமிட்டு தனியாருக்கு தாரை வார்ப்பதா? *.மின்வாரியத்தில் தனியார் மயத்தை உடனே கைவிட வேண்டும் .தமிழக அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல் . ஐடிஐ படித்த தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு அநியாயமாக பறிபோகும் . தமிழகம் முழுவதும் மின்வாரிய ஊழியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் ஸ்டாலின் அறிக்கை வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் குறைந்த கூலிக்கு வேலைக்கு வர தயாராக இருப்பதால் தமிழக இளைஞர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் கருத்து.
வரும் 23ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் திமுக சார்பில் கிராம சபை கூட்டம் *்.குன்னம் கிராமத்தில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தை ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் . நாளை மறுநாள் முதல் ஜனவரி 10-ஆம் தேதி வரை திமுக சார்பில் கிராம சபை கூட்டம் நடத்த திட்டம்.
: சென்னை தலைமைச் செயலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி . சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி 2019 - 2020 ஆண்டில் சிறப்பாக சேவையாற்றியவர்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கினார் முதல்வர்.
சென்னையில் தொடர்ந்து விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.86.51, டீசல் ரூ.79.21க்கு விற்பனை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights