Tamil News Today Live admk cm candidate: தனியார் மருத்துவக் கல்லூரிகளில் வெளிநாடுவாழ் இந்திய மாணவர்களுக்கு 15 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டியது கட்டாயமில்லை என உத்தரவிட்டது. மேலும், தொழில்நுட்ப கல்வியை அளிக்கும் தனியார் கல்லூரிகள், வெளிநாடுவாழ் இந்திய மாணவர்களுக்கு அளிக்கும் இடஒதுக்கீட்டின் அளவை, அந்த கல்லூரிகளே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்திற்கு, புதிய துணைவேந்தரை நியமிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதன்படி, 3 பேர் கொண்ட துணைவேந்தர் தேர்வுக் குழுவிற்கு ஆட்சிமன்றக்குழு பிரதிநிதியாக அழகப்பா பல்கலைக்கழக கல்வி தொழில்நுட்பத்துறை முன்னாள் தலைவர் மோகன் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட நிலையில், செனட் பிரதிநிதியாக காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் அழகப்பன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வரும் 17 முதல் தேஜாஸ் ரயில் சேவை தொடங்க உள்ளதாக, ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல-மகர விளக்கு பூஜையின்போது நாளொன்றுக்கு 250 பக்தர்களை அனுமதிக்க கேரள அரசு முடிவெடுத்து உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Tamil News Today: சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
இது வரை 23 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் வேலைகளுக்கான நேர்முகத் தேர்வுகள் அகற்றப்பட்டுள்ளன என்று பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதிய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று தெரிவித்தார்.
மத்திய அரசின் B பிரிவு (அரசிதழ் சாராத) மற்றும் C பிரிவு பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு முறை 2016 முதல் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து இது நடந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள தெற்கு திட்டை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவரை தரையில் உட்கார வைத்த விவகாரத்தில் ஊராட்சி செயலாளர், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மீது போலீஸார் எஸ்சி,எஸ்டி வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
“முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு என கூட்டம் கூட்டி - தெருத்தெருவாகப் பட்டாசு வெடித்து - கொண்டாட்டம் போடுகிறார்கள் . கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை காற்றில் பறக்க விடுவது அதிமுக அமைச்சர்களும் - முதலமைச்சரும்தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை” என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 3 கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் சேர மாணவர்கள் பெரிய அளவில் ஆர்வம். இதுவரை 15 ஆயிரம் நபர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஓரிரு நாட்களில் கவுன்சிலிங் துவங்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அறிவிப்பு.
லடாக் எல்லைப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள படை வீரர்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு லெஹ் விமான நிலையத்தில் தரையிறுங்கும், இந்திய விமானப்படையின் க்ளோப்மாஸ்டர் ட்ரான்ஸ்போர்ட் விமானம் சி-17.
#WATCH: Indian Air Force's C-17 Globemaster transport aircraft landing at the Leh airbase in Ladakh with supplies for troops deployed in forward areas. pic.twitter.com/QV6L7sQsQD
— ANI (@ANI) October 10, 2020
ஊரடங்கு தளர்வுகள் காரணமாக, கொரோனா சிறப்பு சிகிச்சை முகாம்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இத்தகைய சூழலில், அனுதினமும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பால், மருத்துவமனை செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மக்கள் முகக்கவசம் அணியாமல், சமூக விலகலை பின்பற்றாமல் அலட்சியத்துடன் இருப்பதே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. இந்த மாதம், நவம்பர் டிசம்பர் ஆகிய மூன்று மாதங்கள் வைரஸின் பாதிப்பு தீவிரத்தைக் காட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.
கால்நடை தீவன ஊழல் வழக்கில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத்திற்கு, ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது. எனினும், தும்கா கருவூலத்தில் இருந்து 3.5 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஜாமின் கிடைக்காத தால், தற்போது அவர் விடுதலையாக வாய்ப்பில்லை.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் சாமி தரிசனம் செய்தனர். புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை யொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை நடைபெற்ற வி.ஐ.பி. தரிசனத்தில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.சி.சம்பத், சரோஜா ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள், அவர்களுக்கு தீர்த்தப் பிரசாதங்களை வழங்கினர்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2020-21 ஆம் நடப்பு கல்வியாண்டில் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு ஆன்-லைன் மூலம் இன்று முதல் 20 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கான இணையதள முகவரியை வெளியிட்டார்.
நேற்றைய தமிழக செய்திகளை வாசிக்க
ஊராட்சி மன்றங்களின் அனுமதி இன்றி கிராம சாலை மேம்பாட்டுப் பணிகளுக்காக விடப்பட்டுள்ள 2 ஆயிரத்து 650 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர்களை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீர் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 தீவிரவாதிகள் உயிரிழப்பு. காமத் குழுவின் பரிந்துரைகள் அடங்கிய தொகுக்கப்பட்ட பிரமாண பத்திரத்தை ரிசர்வ் வங்கி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது . ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன.
தமிழகத்தில் மதுரை, தேனி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது- 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights