Tamil News Today Updates: பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், “சட்டப்பேரவை தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணிகள் மாற வாய்ப்புள்ளது. இப்போதுள்ளது நாடாளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி. வரும் காலங்களில் அதிமுக, திமுக என எந்த கட்சியுடனும் பாஜக கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். அதிமுக-வில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்த ஆலோசனை இன்று அதிகாலை வரை தொடர்ந்தது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரிடையே மாறி மாறி 9 மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள் நிர்வாகிகள். அதிமுக-வின் முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது.
மத்திய அரசின் வேளாண் சட்ட திருத்த சட்டங்களுக்கு எதிராக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என முதல்வருக்கு, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு கூடுதல் சுதந்திரத்தைத் தருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் தெரிவித்தார். இரண்டாம் கட்ட பரிசோதனைக்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த், சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுய பிம்பத்தை கட்டமைப்பதில் மட்டுமே பிரதமர் செயல்படுவதாக, ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Live Blog
Tamil News Today
சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்கள் குவித்தது. 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சி.எஸ்.கே களம் இறங்கியது. சி.எஸ்.கே அணி கடைசி 1 ஓவரில் வெற்றி பெற 26 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில், கே.கே.ஆர் அணியின் ஆண்ட்ரே ரஸ்ஸல் வீசிய ஓவரில் சி.எஸ்.கே அணியின் கேதார் ஜாதவ் 1 ரன் அடித்தார். ரவீந்திர ஜடேஜா 14 ரன்கள் அடித்தார். இதனால், சி.எஸ்.கே 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டது.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சி.எஸ்.கே அணி வெற்றி பெற168 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.
மணிப்பூர், நாகலாந்து மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் அஷ்வனி குமார் ஷிம்லாவில் உள்ள தனது இல்லத்தில் இன்று தூக்கிட்ட நிலையில் இறந்துள்ளார். இந்த தகவலை ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் ஷிம்லா எஸ்.பி மோஹித் சாவ்லா தெரிவித்துள்ளார்.
பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான ரூ. 2,000 கோடி சொத்துக்களை வருமானவரித்துறை முடக்கியுள்ளது. முடக்கப்பட்ட சொத்துக்களில் சிறுதாவூர் பங்களா, கொடநாடு எஸ்டேட் சொத்துக்களும் அடங்கும். வருமானவரித்துறையால் முடக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு சுமார் ரூ. 2,000 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 2017ல் வருமான வரித்துறை அதிகாரிகள் சசிகலாவிற்கு சொந்தமான 200 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம், பொறியியல் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு ஆன்லைன் கலந்தாய்வுக்கு, 4 சுற்றுகள் கொண்ட அட்டவணையை வெளியிட்டது. தொழில் பிரிவு மாணவர்களின் பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு ஒரே சுற்றாக நடைபெறுகிறது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “மக்கள் நலனுக்காக அல்லாமல் தங்களின் நலனுக்காகவே ஓபிஎஸ்., ஈபிஎஸ் ஒன்று சேர்ந்துள்ளனர். அதிமுகவில் ஒருவரையொருவர் வீழ்த்த முயற்சித்து வருகிறார்கள். அதிமுகவிற்கு இது ஆட்சி அல்ல வீழ்ச்சி” என்று சாடியுள்ளார்.
பாஜகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், “சட்டப்பேரவை தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணிகள் மாற வாய்ப்புள்ளது. இப்போதுள்ளது நாடாளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி. வரும் காலங்களில் அதிமுக, திமுக என எந்த கட்சியுடனும் பாஜக கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
முகக் கவசம், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களை ஏன் கைது செய்யக் கூடாது? என்று
உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கான அபராத தொகையையும் 2 ஆயிரமாக உயர்த்தலாம் என்று பரிந்துரைத்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், பொதுமக்கள் தொற்று ஏற்பட்டால் தங்கள் குடும்பத்தினரும் பாதிக்கப்படுவார்கள் என்பதை பொதுமக்கள் உணர வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
எரிசக்தி அமைச்சகத்துடன், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. நடப்பு 2020-21 நிதியாண்டுக்கான இந்த ஒப்பந்தத்தில் மத்திய எரிசக்தி துறை செயலாளர் சஞ்சீவ் நந்தன் சகாய் மற்றும் பவர்கிரிட் நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் கே.ஸ்ரீகாந்த் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். நிதி மற்றும் திட்ட செயலாக்கம் தொடர்பான பல்வேறு இலக்குகளை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 67,57,131 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 72,049 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 67,57,132 ஆக உயர்ந்தது. புதிதாக 986 பேர் இறந்துள்ளனர்.
இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,04,555 ஆக உயர்ந்தது. தொற்றில் இருந்து ஒரே நாளில் 75,787 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 57,44,694 ஆக உயர்ந்துள்ளது.
அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சற்று நேரத்தில் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் கூட்டாக செய்தியாளர் சந்திப்பின் போது அறிவிக்கின்றனர். 2021 சட்டமன்ற தேர்தல் அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் குறித்து விரைவில் அறிவிப்பு
”காலை 10 மணிக்கு நல்ல செய்தி வரும். மீண்டும் அதிமுக ஆட்சி வருவதற்கான ஆக்கப்பூர்வ பணி நடக்கிறது" என சென்னையில் ஓபிஎஸ் உடன் ஆலோசனை நடத்திய துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் அதிகாலையில் பேட்டியளித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights