Tamil News Today bjp vel yatra murugan : அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விடுவதாக மிரட்டல் கடிதம்.அண்ணா பல்கலை.க்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தை திரும்பப் பெற கோரி மிரட்டல்.வீரப்பன் என்ற பெயரில் சூரப்பாவுக்கு வந்த கடிதத்தை கைப்பற்றி கோட்டூர்புரம் போலீசார் விசாரணை.
தங்களுடைய கடவுளை வழிபடுவது அடிப்படை உரிமை; அதன் அடிப்படையில் திருத்தணிக்கு செல்கிறேன் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பேட்டி.
அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆளும் குடியரசுக் கட்சியை சேர்ந்த அதிபர் டிரம்புக்கும், ஜனநாயக கட்சியின் ஜோ பைடனுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. வெற்றி பெற 270 இடங்கள் தேவைப்படும் நிலையில், ஜோ பைடன் 264 இடங்களில் முன்னிலையில் உள்ளார். இந்நிலையில், தேர்தலில் சட்டப்பூர்வமாக பதிவான வாக்குகளை எண்ணினால், தான் எளிதில் வெற்றி பெற்றுவிடுவேன் என்று டிரம்ப் தெரிவித்து உள்ளார்.
கோவை சென்ற முதலமைச்சர் பழனிசாமிக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Live Blog
Tamil News Today: சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “நவம்பர் 7 என் பிறந்த நாள் மட்டுமல்ல; என்னுள் நேர்மையையும் துனிச்சலையும் ஊட்டி வளர்த்த என் தந்தையின் நினைவு நாளும் கூட, ஊரே என்னைக் கொண்டாடிக் கொண்டிருக்க நானோ உள்ளூர தந்தையின் நினைவுகளில் ஆழ்ந்திருப்பேன்.” என்று தெரிவித்துள்ளார்.
தேடித் தீர்ப்போம் வா..... pic.twitter.com/fTRLkyxbaZ
— Kamal Haasan (@ikamalhaasan) November 6, 2020
சென்னையில் நடிகர்கள் கமல்ஹாசன், சரத்குமார் ஆகியோரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துப் பேசிய நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் கட்சியாக பதிவு செய்ய விண்ணப்பித்ததைத் தொடர்ந்து, அதற்கு நடிகர் விஜய் எதிர்ப்பு தெரிவித்தார். கட்சிக்கும் எனக்கும் தொடர்பு இல்லை. எனது பெயரையும் படத்தையும் பயன்படுத்தினால், நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கை வெளியிட்டார். இந்நிலையில், விஜய் பெயரில் பதிவு செய்யப்பட்ட கட்சியில் விஜயின் தாய் ஷோபா சந்திரசேகர் கட்சியில் இருந்து விலகிவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், “கமல்ஹாசன் கூறும் மூன்றாவது அணி குறித்து தற்போது ஏதும் கூற முடியாது; தேர்தல் நேரத்தில்தான் அது குறித்து கருத்து தெரிவிக்க முடியும்.” என்று தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை ஆய்வு செய்த முதல்வர் பழனிசாமி, “அரசின் நடவடிக்கையால் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்துள்ளது. கனவுத் திட்டமான அத்திக்கடவு - அவினாசி திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூ.948 கோடியில் திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி உருவாக்கப்பட்டு வருகிறது.” என்று கூறினார்.
“100 நாள் வேலை திட்டத்தில், அதிகாரிகள் நிதி முறைகேட்டிலும், பயனாளிகள் வேலை செய்யாமல் முறைகேட்டிலும் ஈடுபடுகின்றனர்” என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இய்ந்ந்திரங்களை பயன்படுத்தி சில நிமிடங்களில் முடிக்க வேண்டிய வேலைகளை ஏன் மனிதர்கள் மூலம் செய்யப்படுகிறது. 100 நாள் வேலை திட்டத்தில், அதிகாரிகள் நிதி முறைகேட்டிலும், பயனாளிகள் வேலை செய்யாமல் முறைகேட்டிலும் ஈடுபடுகின்றனர்” என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
ரூ.520 கோடி மதிப்பிலான நலத் திட்டப் பணிகளை நீலகிரி மாவட்டம் உதகையில் தொடங்கி வைத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டார் இபிஎஸ். இதனைத் தொடர்ந்து, மற்ற மாநிலங்களை விடத் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி : டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி. முதல் தகுதிச் சுற்றுப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது மும்பை அணி.
நடிகர் விஜய் பெயரில் புதிய அரசியல் கட்சியை தேர்தல் ஆணையத்தில் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பதிவு செய்த நிலையில், அந்தக் கட்சிக்கும், தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என, நடிகர் விஜய் அதிரடியாக அறிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் தொடர்பாக எதிர்காலத்தில் தனது தந்தை மேற்கொள்ளும் நடவடிக்கைகள், தன்னை கட்டுப்படுத்தாது என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights