Tamil News Today : தமிழகத்தில் 2-வது கட்டமாக அவர் இன்று (பிப்.27) தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் ராகுல் காந்தி.
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் காலை 11 மணிக்கு தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்துக்கு வருகிறார்.
தொடர்ந்து காலை 11.30 மணிக்கு தூத்துக்குடி வஉசி கல்லூரி கூட்ட அரங்கில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர்களுடன் கலந்துரையாடுகிறார். இந்நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் சந்திரமோகன், இணைத் தலைவர் மகேந்திரன் ஆகியோர் தலைமை வகிக்கின்றனர்.
தொடர்ந்து மதியம் 1 மணி அளவில் தூத்துக்குடி குரூஸ்பர்னாந்து சிலை அருகே பொதுமக்களிடையே ராகுல் காந்தி பேசுகிறார். அதன்பிறகு கடற்கரை சாலை வழியாக முத்தையாபுரத்தை அடுத்த கோவங்காடு விலக்கு பகுதியில் உப்பள தொழிலாளர்களுடன் கலந்துரையாடுகிறார்.
பின்னர் அங்கிருந்து முக்கானி, ஆத்தூர், சாகுபுரம், குரும்பூர் வழியாக ஆழ்வார்திருநகரிக்கு வருகிறார். அங்கு காமராஜர் சிலை அருகே பொதுமக்களிடம் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கேட்டு பேசுகிறார். பின்னர் நாசரேத் வழியாக சாத்தான்குளத்துக்குச் செல்கிறார். அங்கு காமராஜர் சிலை அருகே பொதுமக்களிடம் உரையாற்றுகிறார்.
அதன்பிறகு திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சென்று அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மார்ச் 7ம் தேதி திமுக பொதுக்குழு நடைப்பெறவுள்ளது.
கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் ,பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னையில் விலை மாற்றம் இன்றி பெட்ரோல் லிட்டர் ரூ.92.90-க்கும், டீசல் ரூ.86.31-க்கும் இன்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் 2ம் நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதனால மிகக்குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளன்.
புதுச்சேரியில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமலுக்கு வருவதாக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். புதுச்சேரியில் அரசு கலைக்கப்படுவதாகவும் ,குடியரசுத்தலைவர் ஆட்சி அமல் என அரசிதழில் வெளியீடப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைப்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் ஆலோசனை நடத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சட்டபேரவை தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட வரும் 3-ம் தேதி முதல் விருப்ப மனு பெறப்படும் என்று அக்கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
Live Blog
Latest Tamil News : அரசியல்- வானிலை- சமூகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த செய்திகளின் தொகுப்பாக இந்தத் தளம் அமையும்.
தமிழகத்தில் நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் பயணவிபரம் :
காலை 10.45 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் வரவேற்பு
காலை 11.15 மணிக்கு தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் வழக்கறிஞர்களுடன் சந்திப்பு
மதியம் 12.45 மணிக்கு குரூஸ் பெர்னாண்டஸ் சிலை சந்திப்பில் வரவேற்பு
மதியம் 1.20 மணிக்கு ரோச் பூங்காவிற்கு அருகில் உள்ள கடற்கரையில் உப்பள தொழிலாளர்களுடன் சந்திப்பு
மதியம் 2.30 மணிக்கு தூத்துக்குடியில் உள்ள முக்கானியில் வரவேற்பு
மதியம் 2.45 மணிக்கு தூத்துக்குடி குருன்பூரில் வரவேற்பு
மாலை 3.20 மணிக்கு தூத்துக்குடியில் ஆழ்வார் திருநகரில் வரவேற்பு
மாலை 4.00 மணிக்கு செயின்ட்ஜான்ஸ் கதீட்ரல் நாசரேத்
மாலை 5.00 மணிக்கு தூத்துக்குடி சாத்தான்குளத்தில் வரவேற்பு
மாலை 6.15 மணிக்கு திருநெல்வேலி நாங்குநேரி டோல் பிளாசா அருகே பொதுக்கூட்டம்
சினிமாவில் 11 ஆண்டுகள் நிறைவு செய்த சமந்தா இயக்குநர் கெளதம் மேனனுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான விண்னைத்தாண்டி வருவாயா தமிழ் படத்தில் 2-வது நாயகியாக நடித்த சமந்தா, தெலுங்கில் நாயகியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.
மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20% இடஒதுக்கீடு 3 ஆக பிரித்து உள் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
மிகவும் பிற்படுத்தப்பட்ட தொகுப்பில் உள்ள வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்க இந்த சட்டம் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. சீர்மரபினருக்கு 7 சதவீதம் உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய பிரிவினருக்கு 2.5% ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் பழனிசாமி, “உலக வங்கியின் விதிகளுக்கு உட்பட்டே இ-டெண்டர் முறாஇ அமல்படுத்தப்படுகிறது. இ-டெண்டர் முறையில் ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று கூறினார்.
தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் பழனிசாமி, “ஆட்சியைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் சதி செய்தனர். இடைத்தேர்தலில் கணிசமான தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்தோம். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்டோம்.” என்று கூறினார்.
புயல், மழை, வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கையை ஏற்று பயிர்க்கடனும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், மக்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் பழனிசாமி, “அனைத்து மாநிலங்களும் கடன் வாங்கிதான் நிர்வாகத்தை நடத்துகின்றன. எந்த மாநிலமும் கையில் பணத்தை வைத்துக்கொண்டு திட்டங்களை அறிவிப்பதில்லை. வளர்ச்சித் திட்டங்களுக்கு கடன் வாங்க வேண்டிய அவசியம் இருப்பதால் கடன் வாங்கப்படுகிறது. எந்த திட்டத்தை அறிவித்தாலும் அதை அரசே நிறைவேற்றும் என்பதை உறுதி செய்துள்ளோம்” என்று கூறினார்.
தமிழகத்தில் பின்பற்றப்படும் 69% இடஒதுக்கீடு முறைக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. பின்தங்கிய பிரிவினரை முன்னேற்றவே 69% இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதாக ஏற்கனவே தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தில் ஏற்கனவே பின்தங்கிய பிரிவினரை முன்னேற்றவே 69% இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், தமிழகத்தில் பின்பற்றப்படும் 69% இடஒதுக்கீடு முறைக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சகோதரர் தா.பாண்டியன் காலமான செய்தியறிந்து அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அவரது குடும்பத்தாருக்கும், கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அன்னாரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சகோதரர் திரு.தா.பாண்டியன் அவர்கள் காலமான செய்தியறிந்து அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அவரது குடும்பத்தாருக்கும், கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அன்னாரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். pic.twitter.com/WyjHAD92TC
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) February 26, 2021
அற்புதம்மாள் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “அய்யா த.பா அவர்களின் மறைவு பெரும் வேதனைதருகிறது. ராஜீவ் காந்தீன் அன்றைய பொதுக்கூட்டத்தில் மொழிபெயர்ப்பாளராக உடனிருந்தவர். கடுங்காயமுற்றவர். அரசுதரப்பு சாட்சியாளர். உலகமே கேட்குமாறு 'அறிவு நிரபராதி' என ஆணித்தரமாக அவர் கூறியது உள்ளபடியே எங்களுக்கு பெரும் ஆறுதலை தந்தது.” என்று அற்புதம்மாள் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அய்யா த.பா. அவர்களின் மறைவு பெரும் வேதனைதருகிறது. ராஜிவ்காந்தி அவர்களின் அன்றைய பொதுக்கூட்டத்தில் மொழிபெயர்ப்பாளராக உடனிருந்தவர். கடுங்காயமுற்றவர். அரசுதரப்பு சாட்சியாளர். உலகமே கேட்குமாறு 'அறிவு நிரபராதி' என ஆணித்தரமாக அவர் கூறியது உள்ளபடியே எங்களுக்கு பெரும் ஆறுதலை தந்தது.. pic.twitter.com/adB4fltKix
— Arputham Ammal (@ArputhamAmmal) February 26, 2021
தா.பாண்டியன் மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தம் வாழ்நாள் முழுவதும் பொதுவுடைமைக் கொள்கைக்காகப் பாடுபட்டு வந்த தா.பாண்டியன் தம் முச்சை நிறுத்திக்கொண்டார். தா.பாண்டியன் தமிழ்நாட்டு அரசியல் மேடைகளில் தன்னிகரற்ற சொற்பொழிவாளர். ஆற்றொழுக்குபோல தங்கு தடையின்றி தமது கருத்துகளை எடுத்து உரைப்பவர். மிகச் சிறந்த எழுத்தாளர், இலக்கியவாதி எண்ணற்ற கட்டுரைகள், நூல்களை எழுதியவர். நாடாளுமன்றத்தில் தமது வாதங்களைத் திறம்பட எடுத்து உரைப்பவர். தா.பா-வின் மறைவு பொதுவுடைமை இயக்கத்திற்கும் தமிழ்நட்டின் பொது வாழ்விற்கும் ஈடு செய்யமுடியாத இழப்பு. தா.பா மறைவால் வேதனையில் தவிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் தா.பா அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். மேலும், “அவரது மறைவு ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்திற்கும் நேர்ந்த பேரிழப்பாகும். ஈழத் தமிழர்களின் நலன்களில் அக்கறையோடு பணியாற்றியவர். முற்போக்கு சிந்தாந்த தளத்தில் அவரது பங்களிப்பு மகத்தானது. அவருக்கு எமது வீரவணக்கம்.” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தோழர் தா.பா அவர்களின் மறைவு மிகுந்த வேதனை யளிக்கிறது.
அவரது மறைவு ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்திற்கும் நேர்ந்த பேரிழப்பாகும்.
ஈழத் தமிழர்களின் நலன்களில் அக்கறையோடு பணியாற்றியவர்.
முற்போக்கு சிந்தாந்த தளத்தில் அவரது பங்களிப்பு மகத்தானது.
அவருக்கு எமது #வீரவணக்கம்.#CPI pic.twitter.com/B7SxH3HNxL
— Thol. Thirumavalavan (@thirumaofficial) February 26, 2021
தா.பாண்டியன் மறைவு பொதுவுடைமைக் கொள்கையில் நம்பிக்கையுள்ள அனைவருக்கும் பேரிழப்பு என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் தா.பாண்டியன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இது குறித்து மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “பொதுவுடைமைப் போராளி - ஒடுக்கப்பட்டோரின் போர்க்குரல் - பண்பாளர் - தமிழ் மண்ணை அடிமையாக விடமாட்டோம் என சிம்மக்குரல் எழுப்பிய தா.பாண்டியன் மறைவு பொதுவுடைமைக் கொள்கையில் நம்பிக்கையுள்ள அனைவருக்கும் பேரிழப்பு” என்று தெரிவித்துள்ளார். மேலும், உங்கள்தொகுதியில் ஸ்டாலின் நிகழ்வில் அஞ்சலி செலுத்தினோம். ஆழ்ந்த இரங்கல்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தா.பாண்டியனின் மறைவு தமிழகம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை 2% குறைத்து துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். வாட் வரி குறைப்பால் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ1.40 குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திருக்குறளை வாசித்து வருவதாக ட்வீட் செய்துள்ளார். திருக்குறளின் கருத்தாழம் என்னை வியப்பில் ஆழ்த்தியது என்று தெரிவித்துள்ளார்.
Have been reading "Tirukkural”. Am stunned by its depth.
Listening
Through your ears to hear, to listen and to understand.
Is to make gold of grain and golden grain of sand.
— Rahul Gandhi (@RahulGandhi) February 26, 2021
”பாலகோட் தாக்குதலை முறியடித்த இந்திய விமானப்படை வீரர்களின் செயல் போற்றத்தக்கது .பாலகோட் தாக்குதலின் வெற்றி, பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் பலத்தை நிரூபித்துள்ளது ” என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ட்வீட் செய்துள்ளார். இன்றுடன், பாலகோட் தாக்குதல் நடைபெற்று ஒரு ஆண்டு நிறைவடைந்த நிலையில் ராஜ்நாத் சிங் அதனை நினைவு கூர்ந்துள்ளார்.
தமிழகத்தில் 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் என அறிவிப்பு வெளியான நிலையில் மாணவர்கள் நாளை முதல் பள்ளிகளுக்கு வர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1 முதல் 24 மணி நேரமும் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights