Tamil News Today Live : மத்திய அரசு அதிகாரிக்கு ரூ. 4 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், விவி மினரல்ஸ் நிறுவனர் வைகுண்டராஜனுக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கி கஉள்ளது. வைகுண்டராஜனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையுடன், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. முதல் குற்றவாளியான அரசு அதிகாரி நீரஜ் கட்ரிக்கு 5 ஆண்டுகள் சிறையும், ரூ. 5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் சேவைக்கான கட்டணம் குறைப்பு இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது.
சென்னையில் அதிகபட்ச மெட்ரோ ரயில் கட்டணம் ரூ. 50ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் அடுத்தடுத்து 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா - காங். அரசுக்கு நெருக்கடி.6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவை தொடர்ந்து, கூட்டணி எம்.எல்.ஏக்களுடன் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.
யானை ஜெயமால்யதாவை தாக்கிய பாகன் வினில் குமார் பணியிடை நீக்கம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் நிர்வாகம்
அதிரடி நடவடிக்கை பாகனுக்கு உதவியாக இருந்த சிவபிராகசம் என்பவரும் பணியிடை நீக்கம்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும், என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
நல்லவர்கள் யார் வேண்டுமானாலும் எங்களுடன் கூட்டணிக்கு வரலாம் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் 4ஆவது தொடக்க விழாவில் கமல்ஹாசன் பேச்சு.
சமீபத்தில் வடகிழக்கு பருவமழை கொட்டித்தீர்த்து முடிந்திருந்த நிலையில், தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் சில இடங்களில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
Live Blog
Latest Tamil News : அரசியல்- வானிலை- சமூகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த செய்திகளின் தொகுப்பாக இந்தத் தளம் அமையும்.
தனது மனைவி மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள நடராஜன்!
Our little angel Hanvika❤️You are our life’s most beautiful https://t.co/SbBd57woyb are the reason why our life is so much happier.Thank you laddu for choosing us as ur parents.we love u always and forever👨👩👧 #4monthold#daughtersarethebest #familyiseverything pic.twitter.com/nB98ehE5f9
— Natarajan (@Natarajan_91) February 22, 2021
புதுச்சேரியில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த லட்சுமி நாராயணன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இழந்துள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சி புதுச்சேரியில் ஜனநாயக படுகொலையை அரங்கேறியுள்ளது, வரும் தேர்தலில், பாஜக கூட்டணிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என வைகோ தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிப். 24ஆம் தேதி தொண்டர்கள் அவரவர் வீடுகளில் ’என் இல்லம் அம்மாவின் இல்லம்’ என நினைத்து விளக்கேற்றி மாலை 6 மணிக்கு உறுதிமொழி ஏற்க வேண்டும் என ஓபிஎஸ் - ஈபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
புதுச்சேரியில் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த வெங்கடேசன் தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
"புதுச்சேரி மாநில முதலமைச்சராக நாராயண சாமி தேர்வு செய்யப்பட்ட அதே சமயத்தில் தான் துணைநிலை ஆளுநராக கிரண்பேடி அரசியல் உள்நோக்கத்தோடு நியமிக்கப்பட்டார். முதலமைச்சராக பொறுப்பேற்றது முதற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு செயல்படவிடாமல் தடுத்துக் கொண்டிருந்தவர் தான் கிரண்பேடி. துணைநிலை ஆளுநரின் ஜனநாயக விரோதப் போக்கை கண்டித்து ஒரு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அவரது மாளிகையின் நுழைவாயிலுக்கு வெளியே இரவு-பகல் என்று பாராமல் அங்கேயே உறங்கி தொடர் போராட்டம் நடத்த வேண்டிய அவலநிலை வேறு எந்த மாநிலத்திலும் நடந்திருக்க முடியாது" என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி ரவுடிகளை கணக்கெடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது எனவும், தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
ஊட்டியில் ரூ.46 கோடி மதிப்பில் கால்நடை இனப்பெருக்க ஆராயச்சி மையம் துவங்கப்படும் என்றும், கருமந்துறையில் ரூ.100 கோடி மதிப்பில் கலப்பின பசுக்கள் ஆராய்ச்சி மையம் ஒன்றும் துவக்கப்பட உள்ளது என்றும் முதல்வர் பழனிசாமி உறுதியளித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “தமிழகத்தில் தேர்தல் அறிவிப்புக்கு முன், திமுக - காங்கிரஸ் கூட்டணி உடைய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் அதிமுக கூட்டணி பலமாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.
“ஜனநாயக படுகொலையையே லட்சியமாக கொண்டுள்ள மத்திய பாஜக அரசு புதுச்சேரியிலும் அதனை செய்துள்ளது. பாஜகவின் ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து திமுக-காங்கிரஸ் கூட்டணி மக்கள் மன்றம் செல்லும்" என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொழிலதிபர்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கும் அ.தி.மு.க, ரூ.82,000 கோடி கடன் உதவி வழங்கியுள்ளது. பெண்கள் எதையும் சாதிக்கும் திறமை படைத்தவர்கள். மகப்பேறு நிதியுதவி திட்டத்தை ரூ.18,000ஆக உயர்த்தி வழங்குகிறோம்" என்று அ.தி.மு.க மகளிர் பூத் கமிட்டி கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேசியுள்ளார்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “நியமன எம்.எல்.ஏ.க்கள் மூலம் ஆட்சி கவிழ்ப்பு செய்த என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக பாஜக ஆகிய எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் தண்டனை கொடுப்பார்கள்.” என்று கூறினார்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவில் யானையை பாகன்கள் தாக்கும் வீடியோ வெளியான நிலையில், தேக்கம்பட்டி யானைகள் புத்துணர்வு முகாமில் பத்திரிகையாளர்கள் உட்பட யாருக்கும் அனுமதி இல்லை என்று இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் காங்கிரஸ் பெரும்பான்மையை நிரூபிக்க தவறியதையடுத்து சபாநாயகர் சிவக்கொழுந்து முதல்வர் நாராயணசாமி அரசு பெரும்பான்மையை இழந்ததாக அறிவித்தார். இதையடுத்து, முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை சந்தித்து தங்கள் ராஜினாமா கடிதத்தை அளித்தனர்.
புதுச்சேரி எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி, “புதுச்சேரி சட்டமன்றத்தில் அரசால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை கோரும் தீர்மானம் படுதோல்வியடைந்தது. நம்பிக்கை கோரும் தீர்மானத்தின்போது பேசிய முதல்வர் நாராயணசாமி தனது அரசு அவர் ஆண்ட காலங்களில் தனது சட்டமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றபட்டதைப் பற்றி கூறாமல் மத்திய அரசைப் பற்றி குறை சொல்லை பேசியுள்ளார். எங்களுடைய கேள்வி நீங்கள் கொடுத்த வாக்குறுதிகள் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளது?” என்று கேள்வி எழுப்பினார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி உரை: “மத்தியில் ஆட்சியில் இருப்பதால் எது வேண்டுமானாலும் செய்யலாமா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை செயல்படவிடாமல் தடுப்பது ஏன்? எதிர்ப்பை காட்டினால் அமலாக்கத் துறையை வைத்து மிரட்டுகிறது மத்திய அரசு” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து ஈரோடு அந்தியூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வுக்கு மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து மு.க.ஸ்டாலின் கோஷம்
புதுச்சேர் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீது முதல்வர் நாராயணசாமி ஆவேச பேச்சு
புதுச்சேரியில் மத்திய அரசு அனைத்து திட்டங்களுக்கும் மூடுவிழா நடத்துகிறது - முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு
புதுச்சேரி சட்டப் பேரவையில் முதல்வர் நாராயணசாமி உரை
பிரதமர் அறிவித்த பணமதிப்பிழப்பு விமர்சித்துப் பேசினார் முதல்வர் நாராயணசாமி
அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் சம்பளம் கிடைக்காமல் சிரமப்படுவதற்கு கிரண் பேடி காரணம் என்று நாராயணசாமி குற்றச்சாட்டு
புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி பேச்சு: “மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தை தொடர்ந்து புறக்கணித்து வந்தது. மத்திய அரசின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதம்தான் ஆனால் புதுச்சேரியின் பொருளாதார வளர்ச்சி 10.20 சதவீதம்” என்று கூறினார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி பேச்சு: “மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஆட்சியைக் கவிழ்க்க சதி நடக்கிறது. புதுச்சேரியில் காங்கிரஸ் அரசுக்கு பெரும்பான்மை உள்ளது. புதுச்சேரி மக்கள் எங்கள் ஆட்சி மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. கிரண்பேடி அளித்த நெருக்கடியை கடந்தும் ஆட்சியை நிறைவு செய்துள்ளோம்.” என்றூ கூறினார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் நாராயணசாமி, “மிகுந்த நெருக்கடிக்கு மத்தியில் மக்களின் நலனுக்காக ஆட்சி செய்தேன். கடந்த ஆட்சி செய்யத் தவறிய திட்டங்களை நாங்கள் நிறைவேற்றினோம். கொரோனா காலத்தில் புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்கப்பட்டது” என்று கூறினார்.
.
புதுவை, கடலூர் மட்டுமல்லாது விழுப்புரம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், நாளை மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights